மேலேயுள்ள கிருக்கல்களை கொஞ்சம் மாற்றி:
என்னவளுக்கு
காதல் கடிதம்
இரண்டு கொயர்
நோட்டு பாழாகி
பின்னர் கடைசியாக
காதல் கவிதையை முடித்து
அவள் கையில்
கொடுத்தேன்!!!!
வாங்கினாள்
படித்தாள்
என்னைப் பார்த்தாள்
கண்களில் தீச்சுவாலை!!!
எவளுக்கோ எழுதியதை
என்னிடமே கொடுக்கிறாயா
என்று என் முகத்தில்
அந்த காகிதத்தை எறிந்தாள்!!!
நான் என்னவென்று தெரியாமல்
கசங்கிய காகிதத்தை எடுத்து
பிரித்துப் பார்த்தால்
அன்புள்ள மலர் என்றிருந்தது
கொடுத்தது மேகலையிடம்!!!
நான் என்ன செய்வது
ஒன்றும் புரியாமல்?????
Bookmarks