இனிய நண்பர்களே,
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..!
நான்கு வருடங்களைக் கடந்து ஐந்தாவது ஆண்டில் வெற்றிகரமாக பீடு நடை போட்டுக் கொண்டிருக்கும் நமது தமிழ்மன்றம், இன்று முதல் புதிய தலைமையின் கீழ் ஒப்படைக்கப் படுகிறது
சமீப காலமாக பல தளங்களை நிர்வாகித்து கொண்டிருப்பதால் தமிழ்மன்றத்தில் என்னால் அதிகம் பங்காற்ற முடியவில்லை. அதனால், நண்பர்களுக்காக உருவாக்கிய இந்த தமிழ்மன்றத்தை அவர்களே நடத்த இங்கு நன்றாக பங்காற்றும் இளைய தலைமுறையிடம் இந்த தமிழ் மன்றத்தை ஒப்படைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இனி தமிழ்மன்றத்தில் நானும் உங்களைப் போல ஒரு சாதாரண உறுப்பினராக எனது பங்கை ஆற்றுவேன். நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிறிது காலம் ஆலோசகர்கள் குழுவில் இருந்து அவர்களுக்கு எப்போதும் போல் உதவி புரிந்து கொண்டிருப்பேன்.
இந்த புதிய தலைமைக்கு அறிஞர் நிர்வாகியாக இருப்பார். அவர் தேர்வு செய்து கொண்ட புதிய நிர்வாகக் குழு பின்வருமாறு:
பழைய மேற்பார்வையாளர்களில் பென்ஸ், ஆதவா இருவரும் தொடர்கிறார்கள். இந்தக் குழுவினர்தாம் தளத்தின் முழு வேலையையும் கவனிக்கும் பொறுப்பாளிகள், அதனால் இனி அவர்கள் பொறுப்பாளர்கள் என அழைக்கப் படுவார்கள்.
சிறப்பாக பணியாற்றி வரும் மன்ற உதவியாளர்கள் அனைவரும் (அமரன், அன்புரசிகன், அக்னி, ஓவியன்) பொறுப்பாளர்களாக பதவி உயர்வு பெறுகிறார்கள்.
மற்ற பழைய மேற்பார்வையாளர்கள் ஆரன், மன்மதன், தாமரை, பிரதீப் ஆலோசர்கள் குழுவின் அங்கமாகிறார்கள்.
இவர்களைத் தவிர ஆலோகர்கள் குழுவில் நான், இளசு, மனோ ஜி சேர்கிறோம்.
எங்களோடு ஆலோசர்கள் குழுவில் புதிய வரவாக பாரதியும் இணைகிறார்.
மொத்தத்தில்;
தளத்தை நிர்வாகிக்க,
நிர்வாகி: அறிஞர்
பொறுப்புடன் பணிகளை செய்திட,
பொறுப்பாளர்கள்:
பென்ஸ், ஆதவா, அமரன், அன்புரசிகன், அக்னி, ஓவியன்
ஆலோசனை வழங்கி மன்றத்தை வழி நடத்திட,
ஆலோசகர்கள்:
இராசகுமாரன், இளசு, மனோஜி, பாரதி, ஆரென், மன்மதன், தாமரை, பிரதீப்
இந்த குழுக்கள் நாளை முதல் தங்கள் பணியை தொடங்கும். நாளை முதல் புதிய நிர்வாகி மற்றும் பொறுப்பாளர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது.
இதுவரை எனக்கு அளித்த ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி..! அது போல இனி புதிய தலைமைக்கும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன்.
அறிஞர் புதிய அத்தியாயத்தைத் தொடங்கட்டும், அதன்பின் ஒவ்வொரு புதிய தலைமுறையும் இதைத் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்..!!
நன்றி...!!!
இராசகுமாரன்
Bookmarks