இராசகுமாரன் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்து புது குழுவினை வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்
அனைவருக்கும் வணக்கம்.
தமிழ் மன்றத்தின் ஐந்தாவது பிறந்தநாளுக்கு எனது வாழ்த்துக்கள்.
முன்னாள் தலைமை நிர்வாகி உயர்திரு இராஜகுமாரன் அவர்களுக்கு எனது பணிவான நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். சார், உங்களின் நிர்வாகத்தில் என்றுமே மன்றம் செழிப்பாகதான் இருந்தது. நீங்கள் நிருவி, வளர்த்த இந்த அழகிய தமிழ் மன்றத்தினால்தான் இன்று நானும் ஒரு எழுத்தாளினி என்று மார்த்தட்டிக்கொள்கிறேன், என்னை போல் பல மக்களின் வாழ்வில் தமிழ் தாயை தெய்வமாக்கிய உங்களின் தமிழ் சேவைக்கு மிக்க நன்றி சார். அதற்க்காக என்றும் தலை வணங்குவேன்.
புதிய தலைவர் மற்றும் நிர்வாகி அறிஞர் சாருக்கு எனது வாழ்த்துகளும் நன்றியும். இந்த பதவிக்கு மிகவும் சரியான தெரிவு. மன்றம் மென்மேலும் சிறக்க சிறந்த தலைவர் இவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. என் ஆதரவு என்றுமே உங்களுக்கும் உங்கள் நிர்வாகத்திற்க்கும் உள்ளது சார்.
(எற்கனவே பிரம்போடு உலாவரும் அறிஞருக்கு, இப்ப ஜெல் வச்சு மீசையை வேற முறுக்கி விட்டுட்டீங்களே மக்கா!! இது எங்க போய் முடியுமோ!! எனக்கு பிரம்படி ஃகன்பர்தான்லே )
ஆலோசனை வழங்கி மன்றத்தை நல்ல முறையில் வழி நடத்தப்போகும் புது ஆலோசகர்கள் இராசகுமாரன், இளசு, மனோஜி, பாரதி, ஆரென், மன்மதன், தாமரை, பிரதீப் அனைவருக்கும் எனது அன்பும் வாழ்த்துகளும்.
நம் முன்னோடி மேற்பார்வையாளர்கள் பென்ஸ், ஆதவா இருவருக்கும் எனது பாராட்டுக்கள். மீண்டும் அதே பணிகளை செவ்வன செய்ய எனது வாழ்த்துக்கள்.
திறமையான புது மன்ற உதவியாளர்கள் என் பாச தம்பிகள் அமரன், அன்புரசிகன், அக்னி, ஓவியன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள், வாழ்த்துகள் மற்றும் ஆசிகள்.
தம்பிகளுக்கு சில அட்வாய்ஸ்:
தம்பிகளே உங்களின் சேவை என்றுமே நடுநிலையோடு இருக்கவேண்டும். நீங்கள் எவ்வளவு உயர்ந்த உயர் பதவில் இருந்தாலும், பல பழைய உருபினர்களின் மனதை காக்க வேண்டும், அவர்களின் பதிவில் தவறிருந்தால் அவர்களின் மனம் புண்படுமபடி எதுவும் செய்யாமல், அன்பாக சுட்டிக்காட்டுங்கள். அவர்கள்தான் இம்மன்றத்தை வளர்த்தவர்கள். அவர்கள் இல்லையேல் மன்றமுமில்லை,நானுமில்லை, நீங்களுமில்லை. மொத்தத்தில் நல்ல திறைமையான நிர்வாகத்தினை தமிழ் மன்றம் கொண்டுள்ளது என பெயர் வாங்கி கொடுக்கனும். சிறப்பாக செய்வையை செய்ய எனது வாழ்த்துக்கள்.
இந்த பொன்னான தருணத்தில் அடுத்த வரிசை மன்ற உதிவியாளர்களின் பெயர்களை இங்கு வழிமொழிந்து செல்கிறேன். நல்ல எழுத்து வலம், சொந்தபடைப்பு செம்புலிகள், விமர்சனம், கருத்துக்கள், கவிதை, பொது அறிவு, மற்றும் தமிழ் மன்றதின் மேல் அளவு கடந்த பாசத்தினை வாரி வளங்கும் நண்பர்கள், மிகவும் அருமையான எழுத்தாளர்களான சிவா.ஜி, விராடன் மற்றும் இனியவளை சிபாரிசு செய்கிறேன்.
நன்றி
வணக்கம்
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
அசத்தலான பதிவு...
பின்னூட்டம் + பாராட்டு + நன்றி + வரவேற்பு + உற்சாகம் + எச்சரிக்கை + தெரிவு = ஓவியா அவர்களின் பதிவு
உண்மைதான் அக்கா...
பதவிகள் என்பது, மக்கள் வாழ்க்கையில் முக்கியமானதுதான்.
ஆனால், புத்தியை மறைக்கும் போதையாகவோ, புகழ்பெறும் மாயையாகவோ இருக்கக்கூடாது...
இதனை உணர்ந்து, பணியாற்றுவோம்.
பொறுப்பாளர் என்று மன்றத்தில் இருந்தாலும்,
என்றும் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில், இருந்து செயலாற்றுவோம்.
பாராட்டு, அறிவுரை எல்லாவற்றிற்கும் மேலாக அன்பான அக்கறைக்கு,
மிக்க நன்றி...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நன்றி அக்னியாரே!!!
ஆனாலும் ஒரு விசயம் விட்டு போச்சு, அதை தனி திரியாக* இங்கு போட்டுள்ளேன்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12082
Last edited by ஓவியா; 01-09-2007 at 04:42 PM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
அப்பப்பா புல்லரிக்குதப்பா.என்னே இப்படி ஒரு பதிவு!
ஆயிரம் ஆண்டுகள் ஆடாக வாழ்வதை விட
ஒரு நாள் புலியாக வாழ்வதே மேல்.
புதிய நிர்வாகத்துக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!
புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks