மன்ற உறவுகள் அனைவருக்கும் பணிவான வணக்கம்.
தமிழின் மீது தீராப் பற்றுக்கொண்ட தலைவர் இராசகுமாரன் அவர்கள் தொடர்ந்தும் நிர்வாகத்தில் இருப்பேன் என சொல்வது மகிழ்ச்சியான செய்தி. ஏலவே ஆலோசகர்களாக இருந்த இளசு அண்ணன், மனோஜி அவர்கள், போன்றோருடன் தாமரை, பிரதீப், மன்மதன்,ஆரென் என நான்கு தமிழ் ஆவலர்களான அண்ணாக்கள் சேர்கிறார்கள் என்னும் அறிவிப்பில் உள்ளத்தில் உற்காசம் கலந்த உவகையைத் பொங்குகிறது. மன்றம் வந்த நாள் முதல் பாரதி அண்ணாவை இங்கே காண்கிறேன். எல்லாத் திரிகளிலும் தலைவர்தந்த வரத்தால் அவர் வருகை பதிவுசெய்யப்பட்டிருக்கும். அவர் பின்னூட்டங்களில் அழகு தமிழ் குடிகொண்டிருக்கும். அவர் தமிழைப்போல எழுத விளைந்து தோல்வியடைந்த சந்தர்ப்பங்கள் ஏராளம். விதிமுறைகளை மீறும் பதிவுகளை நிர்வாக நண்பர்களுக்கு தெரியப்படுத்தும் முறை இருப்பது இவரால்த்தான் எனக்குத் தெரிந்தது. பல சமயங்களில் இவர் அதைப்பயன்படுத்துவதை கண்டுள்ளேன். தமிழ் மீதும் மன்றம்மீதும் அளவில்லா பற்றுள்ள பாரதி அண்ணாவும் ஆலோசகர் குலாமில் இணைந்துள்ளமை இரட்டிப்பு மகிழ்ச்சி.
அறிஞர் அவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு கையில் அன்பு அமுதசுரபியையும் மறுகையில் சாட்டையும் கொண்டுள்ளவர். இவர் சாட்டையை பயன்பத்துவது அத்தி பூத்தாற்போன்றது. பயன்படுத்துகையில் கொஞ்சும்சாட்டையாகவே கண்டுள்ளேன். பென்ஸ் அண்ணாவின் பயனர் தகவலில் அவரைபற்றிய சில வரிகள் (வாழ்க்கை வரலாறு) எனுமிடத்தில் நிலைகண்ணாடி என இருக்கும். நாம் எப்படிப்பார்கின்றோமோ அப்படித்த் தெரிவார் என நினைத்துக்கொள்வேன். அது உண்மையும் கூட. ஆதவாவைப் பற்றி ஒற்றைவார்த்தையில் சொல்லி விடலாம். அவர் மன்றத்தில் இளவரசன். ஓவியன்,அன்புரசிகன்,அக்னி மூவரும் முத்தமிழ்கள். முத்தமிழ்களைப்பற்றி உங்களுக்கு சொல்லவேண்டுமா என்ன?
மன்றத்தை வழிநடத்திச்செல்லும் சீரிய பணியில் உள்ள இவர்களுடன் இந்த எளியவனையும் நம்பிக்கையுடன் இணைத்துக்கொண்டமைக்கு நன்றி. உங்கள் நம்பிக்கைக்கு களங்கம் ஏற்படாதவாறு இட்ட பணியை, நிர்வாகிகள், ஆலோசகர்கள்,மூத்த பொறுப்பாளர்கள், உறவுகள் போன்றோர் உதவியுடன் செவ்வனே செய்ய முயற்சிக்கின்றேன்.
எனது தோள்களே...!
ஊர் கூடி இழுத்தால்தான் தேர் நகரும். மன்றமெனும் தேர் இணைய வீதியில் பவனிவர அனைவரும் ஒன்றிணைந்து வடம் பிடிப்போம். நிர்வாக நண்பர்களின் நடவடிக்கைகள் சில, தேரினை சரியான பாதையில் செலுத்த அப்பப்போ போடும் கட்டைகள் போல் அமைந்து, வடம்பிடிக்கும் உங்களை வேதனைப்படுத்தலாம். அவ்வேதனைகள் எல்லாம் நம் மன்றம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் நிகழ்த்தப்போகும் சாதனைகளுக்கான பசளைகளாக நினைத்து ஒத்துழைப்பை நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நான் இணைந்து பணியாற்ற இருக்கும் சக நிர்வாக உறவுகளுக்கும் மற்றைய மன்ற உறவுகளுக்கும் அவர்தம் பணியில் சிறப்பாக செயல்பட வாழ்த்தி, வாழ்த்தும் உள்ளங்களுக்கு நன்றி நவின்று புதிய நிர்வாகக்குழுவுக்கு உங்கள் ஆதரவை வேண்டுகின்றேன்..
நம்பிக்கையுடன்
Bookmarks