கிரடிட்கார்டுகளுக்கு வாங்கும் வட்டி போதாத மேலும் வட்டிவிகிதம் ஏற்றம் செய்துள்ளனர்
கிரிடிட் கார்டுகளுக்கு பணம் கட்ட தாமதமானால் இனிமேல் கூடுதல் வட்டி
பொதுவாக கிரிடிட் கார்டுக்கான வட்டியை உயர்த்தும்போது வாடிக்கையாளர்களுக்கு சொல்வதில்லை. இதனால் சிறிய அளவே வட்டியை உயர்த்தினாலும் அது வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே போய் விடுகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ., ஸ்டேட் பாங்க் உள்பட பல முன்னணி கிரிடிட் கார்டு கம்பெனிகள், கடந்த 2, 3 மாதங்களில் வட்டியை 3 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தியிருக்கிறார்கள். கிரிடிட் கார்டு வைத்திருப்பவர்கள், செலுத்த வேண்டிய பணத்தை குறிப்பிட்ட நாளுக்குள் செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தால், அதற்கு மாத வட்டி 1 முதல் 3.4 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது. வருடத்திற்கு என்று கணக்கிட்டால் 12 முதல் 42 சதவீதம் வரை வட்டி ஆகி விடும். இப்போது வங்கிகளில் பொதுவாக வட்டி விகிதம் உயர்ந்திருப்பதால், கிரிடிட் கார்டு கம்பெனிகளும் வட்டியை உயர்த்துகின்றன. இந்தியாவில் அதிக அளவு ( 75 லட்சம் ) கிரிடிட் கார்ட் கொடுத்துள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, வட்டியை 2.9 சதவீதத்தில் இருந்து 3.15 சதவீதமாக உயர்த்தி விட்டது. ஆண்டுக்கு என்று கணக்கிட்டால் இது 3 சதவீதம் கூடுதல் என்று ஆகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த உயர்வு செய்யப்படுகிறது. இது வாடிக்கையாளர் களுக்கு செப்டம்பர் மாதம் தான் தெரிய வரும். இவர்களுக்கு அடுத்தபடியாக அதிக கார்டு கொடுத்துள்ள ஸ்டேட் பாங்க்கும் இவர்களை போலவே வட்டியை உயர்த்தி உள்ளது.
நன்றி தினமலர்
Bookmarks