Page 161 of 165 FirstFirst ... 61 111 151 157 158 159 160 161 162 163 164 165 LastLast
Results 1,921 to 1,932 of 1969

Thread: கிரிக்கெட் செய்திகள் : ICC T20 உலகக்கோப்பை .!

                  
   
   
  1. #1921
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி ஜயந்த்..!

  2. #1922
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: முச்சதம் அடித்து ஆம்லா புதிய சாதனை



    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் பந்துவீச்சை சிறப்பாக ஆடிய தென் ஆப்பிரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா, முச்சதம் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்களை கடந்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை ஆம்லா படைத்துள்ளார்.


    ஜோடி சாதனை:


    ஆம்லா-காலிஸ் ஜோடி 377 ரன்கள் எடுத்து, தென் ஆப்பிரிக்க 3வது விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன்களை சேர்த்த ஜோடி என்ற சாதனையை படைத்தது.

    அதிக சதம் அடித்தவர்கள்:


    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய வீரர் சச்சின்(51 சதம்) உள்ளார். அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் காலிஸ்(43 சதம்) உள்ளார். 3வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்(41 சதம்) உள்ளார்.

  3. #1923
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    கிரிக்கெட் வீரர் மார்க் பவுச்சர் 'ஆப்ரேஷன்' வெற்றி-பார்வை திரும்ப கிடைக்கும்: டாக்டர்கள் நம்பிக்கை



    முன்னாள் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர்(35). இந்த மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் தென் ஆப்பிரிக்கா அணியில் இவர் இடம் பெற்றிருந்தார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, கடந்த 9ம் தேதி கவுண்டி அணியான சேமர்சேட் அணிக்கு எதிராக 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா கலந்து கொண்டது. இப்போட்டியின் போது தென் ஆப்பிரிக்க சுழல்பந்துவீச்சாளர் இப்ராம் தகிர் வீசிய பந்து ஸ்டம்பில் பட்டு போல்டானது. அப்போது ஸ்டம்பின் மீது இருந்த 'பைல்ஸ்' எதிர்பாராதவிதமாக விக்கெட் கீப்பரான மார்க் பவுச்சரின் இடது கண்ணை பதம் பார்த்தது.
    இதனால் மார்க் பவுச்சரின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. மேலும் கடும் ரத்த போக்கு ஏற்பட்டால், பவுச்சருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பவுச்சரின் இடது கண் பார்வையை இழக்கலாம் என்ற அச்சம் நிலவியது.

    மார்க் பவுச்சரின் கண்ணில் ஏற்பட்டுள்ள காயத்திற்காக, 3 மணி நேர அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு நாடு திரும்பிய, பவுச்சருக்கு நேற்று 2வது முறையாக கேப்டவுனில் கண் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு மார்க் பவுச்சரின் இடது கண் மூலம் மீண்டும் பார்வை கிடைக்கலாம் என்று டாக்டர்கள் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

  4. #1924
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்றது இந்தியா-முதலில் பேட்டிங் தேர்வு



    Ind 53 / 4 (11.3 Ov)

  5. #1925
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    இந்திய மேற்பாதி தகர்வு..

    74 / 5 (17.2 Ov)

  6. #1926
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    தானாகத் தரவேறும் வரைபடம்..


  7. #1927
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வெற்றி * "நம்பர்-1' இங்கிலாந்துக்கு "அடி'



    ஓவல் டெஸ்டில், தென் ஆப்ரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. டெஸ்ட் "ரேங்கிங்' பட்டியலில் "நம்பர்-1' இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் சொதப்பியது.

    இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 385, தென் ஆப்ரிக்கா 637/2 (டிக்ளேர்) ரன்கள் எடுத்தன. பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்திருந்தது. பெல் (14), போபரா (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

    பெல் அரைசதம்:

    நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு போபரா (22) ஏமாற்றினார். பின் இணைந்த இயான் பெல், மாட் பிரையர் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. படுமந்தமாக ஆடிய இந்த கூட்டணியை பிரிக்க தென் ஆப்ரிக்க பவுலர்கள் லேசாக தடுமாற்றம் கண்டனர். பொறுப்பாக ஆடிய பெல் அரைசதம் அடித்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த போது இம்ரான் தாகிர் சுழலில் மாட் பிரையர் (40) சிக்க, தென் ஆப்ரிக்க அணிக்கு ஓரளவு நிம்மதி கிடைத்தது. சிறிது நேரத்தில் ஸ்டைன் வேகத்தில் பெல் (55) நடையைக் கட்டினார்.

    ஸ்டைன் வேட்டை:

    அடுத்து வந்த ஸ்டூவர்ட் பிராட் (0), சுவான் (7), ஆண்டர்சன் (4) மூவரும் ஸ்டைன் பந்தில் பெவிலியன் திரும்பினர். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 240 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. இதன்மூலம் தென் ஆப்ரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது. டிம் பிரஸ்னன் (20) அவுட்டாகாமல் இருந்தார். வேகத்தில் அசத்திய ஸ்டைன் 5 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இவர், டெஸ்ட் அரங்கில் 18வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றினார். சுழலில் அசத்திய இம்ரான் தாகிர் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதை "டிரிபிள் செஞ்சுரி' அடித்த தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா தட்டிச் சென்றார்.

    இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் ஆக., 2ம் தேதி லீட்சில் துவங்குகிறது.

    முதல் வெற்றி

    இங்கிலாந்துக்கு எதிராக பேட்டிங், பவுலிங்கில் அசத்திய தென் ஆப்ரிக்க அணி, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் முதன்முறையாக வெற்றி பெற்றது. முன்னதாக இங்கு 13 முறை டெஸ்டில் விளையாடிய தென் ஆப்ரிக்க அணி 7 போட்டியை (1907, 24, 29, 35, 47, 60, 65) "டிரா' செய்தது. இங்கிலாந்து அணி 6 போட்டியில் (1912, 51, 55, 94, 2003, 08) வெற்றி பெற்றது.

  8. #1928
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    இந்திய அணியைப் புரட்டி எடுத்த இலங்கை



    இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சொதப்பல் பேட்டிங் செய்த இந்திய பேட்ஸ்மேன்களால் ரன்களை சேர்க்க முடியவில்லை. இதனால் எளிய வெற்றி இலக்கை விரட்டிய இலங்கை அணி போட்டியில் வெற்றி பெற்று, தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
    இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி நேற்று ஹம்பன்டோட்டா மைதானத்தில் நடைபெற்றது.
    போட்டியின் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. பேட்டிங்கை அதிரடியாக துவங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. 2 பவுண்டரிகள் அடித்து 15 எடுத்திருந்த ஷேவாக், பெரேராவின் பந்தில் அவரிடமே கேட்சாகி வெளியேறினார்.
    அடுத்து வந்த விராத் கோஹ்லி 1 ரன் மட்டுமே எடுத்து கீப்பர் கேட்சானார். ரோஹித் சர்மா டக் அவுட்டானார். சுரேஷ் ரெய்னா 1 ரன்னில் ஏமாற்றினார். அணியின் பரிதாப நிலையை சரி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டோணி 11 ரன்களில் சங்கக்காராவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
    ஆல் ரவுண்டர் இர்பான் பதான் 6 ரன்களில் திருப்திப்பட்டு கொண்டார். விக்கெட்கள் ஒருபுறம் சரிந்து கொண்டே இருக்க, கம்பிர் மட்டும் ஒருமுனையில் நின்று பொறுமையாக ஆடி வந்தார். கம்பிர் உடன் ஜோடி சேர்ந்த அஸ்வின் சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடினார். 3 பவுண்டரிகளை அடித்த அஸ்வின் 21 ரன்களில் எதிர்பாராத வகையில் ரன் அவுட்டானார்.

    அதன்பிறகு ஜாகிர்கான்(2), ஓஜா(5) ஆகியோர் வரிசையாக வெளியேறினர். கம்பிர் மட்டும் பொறுப்பாக ஆடி அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். ஆனால் அவரும் 65 ரன்கள் எடுத்த நிலையில் சங்கக்காராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் 33.3 ஓவர்களின் முடிவில் இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 138 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இலங்கை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பெரேரா, ஆஞ்சிலோ மேத்யூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

    139 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு, தில்ஷன், சகா தரங்கா ஜோடி சிறப்பான துவக்கத்தை அளித்தது. துவக்கத்தில் தில்ஷன் கொடுத்த எளிய கேட்சை கோட்டைவிட்டார் ஷேவாக். அதன்பிறகு நிலைத்து ஆடிய அவர் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்ந்த தில்ஷன்-தரங்கா ஜோடி சிறப்பாக ஆடியது. இந்த நிலையில் தில்ஷன் 50 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினின் சுழலில் சிக்கினார். ஆனால் தரங்கா அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

    வெற்றி இலக்கை இலங்கை அணி 19.5 ஓவரில் எட்டி, 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துவக்க வீரர் தரங்கா 59 ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் இருநதார். இதன்மூலம் இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

  9. #1929
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    கபில் தேவுக்கு பி.சி.சி.ஐ., மன்னிப்பு! * ரூ. 1.5 கோடி பெறுகிறார்



    :பி.சி.சி.ஐ.,யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை மறந்து, பொது மன்னிப்பு கேட்டார் கபில் தேவ். இது ஏற்றுக் கொள்ளப்பட்டதால், ரூ. 1.5 கோடி சிறப்பு நிதி உதவி உட்பட அனைத்து சலுகைகளையும் உடனடியாக பெறுகிறாõர்.

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ். கடந்த 1983ல் உலகக் கோப்பை பெற்று தந்த இவர், ஓய்வுக்கு பின் இந்திய கிரிக்கெட் போர்டுடன் (பி.சி.சி.ஐ.,) முறைத்துக் கொண்டார். பி.சி.சி.ஐ.,க்கு போட்டியாக 2007ல் துவங்கப்பட்ட இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) அமைப்பின் தலைவராக செயல்பட்டார்.
    இதனால் கபில் தேவ், கிரண் மோரே உள்ளிட்டோருக்கு பி.சி.சி.ஐ., தடை விதித்தது. இதில், மோரே, பி.சி.சி.ஐ.,க்கு பொது மன்னிப்பு கடிதம் எழுதி, சிறப்பு நிதி ரூ. 60 லட்சம் மற்றும் "பென்ஷன்' பெற்றார்.

    பின் கபில் தேவுடன் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் சமரச முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, பொது மன்னிப்பு கடிதம் அளிக்க கபில் ஒத்துக் கொண்டார். இந்நிலையில் நேற்று காலை பி.சி.சி.ஐ., அலுவலகத்துக்கு சென்ற கபில் தேவ், தலைவர் சீனிவாசனை சந்தித்து பேசினார். இதுகுறித்து சீனிவாசன் வெளியிட்ட அறிக்கை:

    ஐ.சி.எல்., அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து "ராஜினாமா' செய்துள்ளதாக, பி.சி.சி.ஐ.,க்கு எழுதிய கடிதம் கிடைத்தது. இதில்,"பி.சி.சி.ஐ.,க்கு தொடர்ந்து ஆதரவு தரவுள்ளதாகவும், எதிர்காலத்தில் முன்னேற்றத்துக்கு உதவ விரும்புவதாகவும்,' அவர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரும் சேவை செய்துள்ள கபில் தேவின் இந்த அறிவிப்பை, பி.சி.சி.ஐ., வரவேற்கிறது. வரும் ஆண்டுகளில் கபில் தேவுடன் இணைந்து செயல்படுவது, வளர்ச்சிக்கு துணையாக இருக்கும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    எல்லாம் கிடைக்கும்:

    இதுகுறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" கபில் தேவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால், ரூ. 1.5 கோடி சிறப்பு நிதி, தவிர, மாத "பென்ஷன்' ரூ. 35 ஆயிரம் வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலுவை தொகை உட்பட அனைத்து சலுகைகளும் உடனடியாக தரப்படும்,'' என்றார்.

    நாங்கள் சிறுவர்கள்:

    மீண்டும் பி.சி.சி.ஐ.,யுடன் கைகோர்த்தது குறித்து கபில் தேவ் கூறுகையில்,"" பி.சி.சி.ஐ., எங்களது பெற்றோர் போல. நாங்கள் எல்லாம் சிறுவர்கள் தான். இதற்கு முன் இங்கு இருந்த போது, கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வளர்ச்சிக்கு உதவினேன். தற்போதும் இதையே தொடர முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.

  10. #1930
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    டெஸ்ட் ரேங்கிங்: சச்சின் பின்னடைவு



    சர்வதேச டெஸ்ட் வீரர்களுக்கான தர வரிசைப் பட்டியலில், இந்தியாவின் சச்சின், 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (749 புள்ளி), ஒரு இடம் பின்தங்கி 12வது இடம் பிடித்தார். இவரைத் தவிர வேறு இந்திய வீரர் யாரும் "டாப்-20' இடத்துக்குள் இல்லை.

    முதல் மூன்று இடங்களில் இலங்கையின் சங்ககரா(892), தென்ஆப்ரிக்காவின் காலிஸ் (874), ஆம்லா (872) உள்ளனர். பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜாகிர் கான் (697), பிரக்யான் ஓஜா (572) மட்டும் 12வது, 20வது இடத்தில் உள்ளனர். இதில், முதல் மூன்று இடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் (896), பாகிஸ்தானின் அஜ்மல் (832), இலங்கையின் ஹெராத் (782) உள்ளனர்.

    "ஆல் ரவுண்டர்கள்' வரிசையில் தென் ஆப்ரிக்க வீரர் காலிஸ் (616) முதலிடம் பிடித்தார். வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் (404), நியூசிலாந்து வீரர் வெட்டோரி (349) அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

  11. #1931
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    சாம்பியன்ஸ் லீக்: 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள்!



    சாம்பியின்ஸ் லீக் டுவென்டி20 தொடரில் பங்கேற்க உள்ள அணிகளின் பிரிவுகள் வெளியிடப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் 'பி' பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன.

    சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்று முதல் 4 இடங்களை பிடித்த அணிகளும், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த உள்ளூர் அணிகள் என்று மொத்தம் 14 அணிகள் பங்கேற்க உள்ளன.

  12. #1932
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    இந்திய பேட்ஸ்மேன்களின் வீழ்ச்சிக்கு மோசமான ஆடுகளமே காரணம்-கேப்டன் டோணி குற்றச்சாட்டு



    இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இதற்கு இந்திய கேப்டன் டோணி, இலங்கை ஆடுகளத்தை குற்றச்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

    இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் ஆடுகளம் விக்கெட்டை விட்டு விலகி இருந்தது. ஆனால் 2வது போட்டியில் வித்தியாசமாக இருந்தது. பந்து ஆடுகளத்தில் பிட்சாகி மிக தாழ்வாகவே வந்தது. விராத் கோஹ்லி அவுட்டான பிறகு, இந்திய விக்கெட்கள் வரிசையாக விழ ஆரம்பித்துவிட்டது. பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தின் தன்மையை அறியவதற்கு முன்பாகவே அவுட்டாகி வெளியேறினர். இது அரிதாக நடக்க கூடிய ஒன்று தான். இந்த சூழ்நிலையிலும் இர்பான் பதான், அஸ்வின் போன்றவர்கள் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றனர்.

    பந்து ஸ்டெம்பிற்கு வரும் போது மெதுவாக வந்தது. காற்று அதிகமாக இருந்ததால், பந்துகள் ஸ்வீங் ஆகாவில்லை என்று நினைக்கிறேன் ஆனால் அடுத்த போட்டி நடைபெற உள்ள கொழும்பு பிரேமதாசா மைதானத்தில், பலத்த காற்று இருக்காது. இந்திய பேட்ஸ்மேன் அவசரப்பட்டு ஆடியதாக நான் நினைக்கவில்லை. ஒரிரு ரன்களாக எடுக்க பேட்ஸ்மேன்கள் முயன்றனர். ரோஹித் சர்மா பந்தை சிறப்பாக தான் ஆடித்து ஆடினார். ஆனால் பந்து இன்சைடு-எஜ் ஆகி போல்டாகிவிட்டார்.
    அவர் அவுட்டாகாமல் இருந்திருந்தால், தொடர்ந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தி இருப்பார். இது போன்ற தோல்விகளில் இருந்து இந்திய அணி பாடம் கற்று கொள்ள வேண்டும். அடுத்த போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

Page 161 of 165 FirstFirst ... 61 111 151 157 158 159 160 161 162 163 164 165 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •