நீயும் காதலும்தான்...
மண்ணாகத்தான் இருந்தேன்..
ரங்கோலி போட்டு
அழகு பார்த்தது...
மண்பானையாகத்தான் இருந்தேன்..
ஆன்மாவை தட்டியெழுப்பும்
கடமாக்கிப் பார்த்தது..
ஒரு வரி விமர்சகனாத்தானிருந்தேன்..
கவிதை வாளெடுத்து
போர் புரிய வைத்தது...
சபையில் நிற்கவே கூச்சப்பட்டுக்கொண்டிருந்தேன்..
அரியணையில் ஏறி அமர வைத்து
ஆட்சி புரிய வைத்தது..
பூக்களை மணமுள்ள வஸ்துவாகத்தான் பார்த்தேன்..
பூவை பூவாகப் பார்க்க
கற்றுக் கொடுத்தது..
இன்னபலவும் உண்டு...
ஒரே நாளில் எல்லாவற்றையும்
திரும்பப் பெற்றுக் கொண்டது...
Bookmarks