நடு நிசியில் புறக்கண் விழிக்கும் போதும்
அதிகாலையில் அகக்கண் விழிக்கும் போதும்
கண்ணாடியில் என் விம்பம் காணும் போதும்
காதல் பேசும் என் கண்களை காணும் போதும்
தோட்டத்தின் ரோஜா காணும் போதும்..
அழுத குழந்தை சிரிக்கும் போதும்
மெலிதாய் ஒரு பாடல் கேட்கும் போதும்
உடனே உதடுகள் அதை முணுமுணுக்கும் போதும்
அலுவலக அலுப்பில் சிலிர்க்கும் போதும்
முடித்து கலைக்கும் போதும்
கால் வலிக்க நடக்கும் போதும்
வீடு திரும்பி சுகிக்கும் போதும்
யாரேனும் என் பெயர் சொல்லி அழைக்கும் போதும்
காதல் கவிதைகள் படிக்கும் போதும்
என்றும் எப்போதும் எந்நேரமும் என் நினைவொலியில்
அகப்பட்ட விட்டில் பூச்சியாய் ஓயாமல் உன் ஞாபகங்கள் தானடி....!
_________________
Bookmarks