Results 1 to 11 of 11

Thread: நீதானடி....!

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0

    நீதானடி....!

    நடு நிசியில் புறக்கண் விழிக்கும் போதும்
    அதிகாலையில் அகக்கண் விழிக்கும் போதும்

    கண்ணாடியில் என் விம்பம் காணும் போதும்
    காதல் பேசும் என் கண்களை காணும் போதும்

    தோட்டத்தின் ரோஜா காணும் போதும்..
    அழுத குழந்தை சிரிக்கும் போதும்

    மெலிதாய் ஒரு பாடல் கேட்கும் போதும்
    உடனே உதடுகள் அதை முணுமுணுக்கும் போதும்

    அலுவலக அலுப்பில் சிலிர்க்கும் போதும்
    முடித்து கலைக்கும் போதும்

    கால் வலிக்க நடக்கும் போதும்
    வீடு திரும்பி சுகிக்கும் போதும்

    யாரேனும் என் பெயர் சொல்லி அழைக்கும் போதும்
    காதல் கவிதைகள் படிக்கும் போதும்

    என்றும் எப்போதும் எந்நேரமும் என் நினைவொலியில்

    அகப்பட்ட விட்டில் பூச்சியாய் ஓயாமல் உன் ஞாபகங்கள் தானடி....!


    _________________
    Last edited by ஓவியன்; 16-08-2007 at 10:21 PM. Reason: எழுத்துப் பிழைகள் களையப்பட்டன

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    காதல் அமுதசுரபி..எடுக்க எடுக்க குறையாது..கொடுக்க கொடுக்க குறையாது. காதல் கவிதைகளும் அப்படியே..எங்கே காணிலும் அவள் நினைவுகள். வரிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் கவிதை இன்னும் கொஞ்சும். பாராட்டுக்கள் வசீகரன்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    கவிதை சூப்பர். நல்ல ஞாபகம்,.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  4. #4
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0

    நண்பரே....!

    ஆம் நண்பரே.....! வெகு நாட்கள் நம் மன்றத்தை நீங்கி இருந்தேன்... இன்று தான் நுழைந்தேன் அவசரத்தை எழுத்துக்களில் வெளிப்படுத்தியதால்
    பிழைகளை தவிர்க்க முடியவில்லை.... இனி தொடர்ந்து
    எழுதுவேன் தங்கள் போன்ற நண்பர்களின் ஆதரவு வேண்டும்......


    நட்புடன்
    வசீகரன்....!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வசீ..வாழ்த்துவதிலும் வளர்ப்பதிலும் நம்மவர்கள் என்றும் பின் நிற்பதில்லை. தொடருங்கள்..

  6. #6
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    Quote Originally Posted by பிச்சி View Post
    கவிதை சூப்பர். நல்ல ஞாபகம்,.
    நன்றி நண்பரே.....!

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    அனுபவத்தை அப்படியே கவிதையாக வடித்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்
    இணையத்தில் ஒரு தோழன்

  8. #8
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    Quote Originally Posted by இக்ராம் View Post
    அனுபவத்தை அப்படியே கவிதையாக வடித்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்
    நன்றி நண்பரே.....!

    வசீகரன்

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நினைவுகள் நிழல் போல் எங்கும் எப்போதும் தொடரும். அதிலும் காதல் நினைவுகள் என்றால் உறக்கத்திலும் துரத்தும் கனவுகளாய்.நல்ல வரிகள்.இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் வசீகரன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    காதல் ஆரம்பிக்கும்பொழுது அனைத்திலும் அவள் நினைவாகவே இருக்கும். உங்கள் காதல் எப்பொழுதும் தொடர்ந்துகொண்டே இருக்க என் வாழ்த்துக்கள்.

    கவிதை வரிகள் அருமை. பாராட்டுக்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்............
    இங்கே காதலால் பட்டவனுக்கு காண்பதெல்லாம் காதலியின் ஞாபகம்..........

    அருமை வசீ!
    கொஞ்சம் எழுத்து பிழைகளிலும் கவனமெடுங்களேன்...........

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •