இந்த மன்றத்தில்தான் முதன் முதலில் தமிழ் எழுதிப்பழகினேன்.
கவிதைகளும் கூட. நாவலுக்கான முதல் முயற்சி ஆரம்பமானதும் இங்குதான்.
நிறைய விமர்சணங்கள், சண்டைகள்..
எல்லாம் இன்று நினைக்கையில்.. உதட்டோரம் சிறு புன்னகை மட்டுமே மிஞ்சும்.
நாம் சிறுவயதில் செய்த குறும்புகளை இன்று நினைத்துப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி.
என்னை இன்னும் நினைவில் வைத்து விசாரித்த அண்ணனுக்கு (இளசு மட்டும்தான் அண்ணன்) என் பிரியங்கள்.
தனி மடலில் நலம் விசாரித்த அனைவருக்கும் என் அன்பு.
நான் சென்னையில் தான் இருக்கிறேன்.
வேலை பளு இருந்தாலும், வேறு ஒரு முக்கிய பணியில் இருக்கிறேன். கடந்த ஓராண்டு காலமாக நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆகையால், அது சம்பந்தமாகப் படித்துக் கொண்டும், ஊர் ஊராக சுற்றிக் கொண்டும் இருக்கிறேன். இன்னும் ஐந்து ஆண்டுகள் பிடிக்கும் வேலை அது. அதனால் இந்தப் பக்கம் வரமுடியவில்லை. நேற்று மன்றம் எப்படி இருக்கிறது என்று வந்து பார்த்தேன். இனி ஓய்வாக இருக்கும் சமயங்களில் இங்கு வந்து எழுதுகிறேன்.
அனைவரின் அன்பிற்கும் பதிலாய் என்னுடைய அன்பு.
Bookmarks