நினைவில்
சிற்பமாய்
காயம்
சிற்பமாய்
நினைவில்
நினைவில்
சிற்பமாய்
காயம்
சிற்பமாய்
நினைவில்
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நினைவு இல்
சிற்பமாய்க்
காயம்
சிற்பமாய்
நினைவு இல்.
எப்பூடி...?
நினைவு இல் சிற்ப(ம்) மாய்க்காயம்...
இப்பூடி...?
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
போகாமலே எப்படித் தொலைந்தது...
வாழ்வு
முடியுமிடத்தில்
வாழ்வு
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
உன்
முகபாவம் ரசித்தேன்...
உன்
அகபாகம் வரத் தவித்தேன்...
உன்
அகம்பாவம் சகித்தேன்...
உன்
அகபாவம் வரத் தகிக்கின்றேன்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அழகைத் தேடினேன்,
என் கன்னத்தோடு
ஈரத்தைப் பகிர்ந்துகொள்ள...
ஒரு விரல் தன்னும்
கிட்டவில்லை,
என் கன்னம்தாண்டியும்
கண்ணீர் தட்ட...
அழ கை தேடிய
என்னைப்பார்த்து
சிரிக்கின்றது
அழுகை...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அழுகை வரும்போது அழு.
கை வரும்.
போதும் அழுகை எனச்
சிரிக்கும்போதும் அழு.
கண்ணீர் இனித்துக் கரிக்கும்.
அழகு...!!!
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
வார்த்தை விளையாட்டுகள் மிக நன்று..!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks