மனதில் கனலும் உணர்வெனும் நெருப்பு...
அவ்வப்போது பற்றி எரியும்போது,
பதிவுகளாக்குகின்றேன் இத்திரியில்...
மனதில் கனலும் உணர்வெனும் நெருப்பு...
அவ்வப்போது பற்றி எரியும்போது,
பதிவுகளாக்குகின்றேன் இத்திரியில்...
Last edited by அக்னி; 07-08-2007 at 09:01 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
என் இதயம் கொண்ட காயம்..,
உன் இதயம் தந்த அடையாளம்..!
என் கண்ணீரின் ஈரம்..,
என் தலையணையின் பாரம்..!
என் மனதோடு நான் கொண்ட காதல்..,
என் விழியோடு நீ தந்த கண்ணீர்..!
உன் விழிகளுக்கு என்னை மறைக்கத் தெரியவில்லை..,
என் விழிகளுக்கு உன்னை மறுக்க முடியவில்லை..!
உன் மடி கண்டதும்..,
நான் மடிவதும் சுகமே..!
உன்னை பார்த்ததும் என் மனது தொலைந்தது..,
என்னை பார்த்ததும் உன் மனது கலைந்ததா..?
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
கண்ணீர்த் துளிகளுக்குள்,
கட்டிக்கட்டி வெளியே
தள்ளினாலும்,
மீண்டும் மீண்டும்
சுரக்கின்றாய் நீ...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
ஜனனித்த கணத்தில்,
ஏதும் தெரியவில்லை
தாயின் வாசம் தவிர...
உணர்ந்தேன் தாயின் வாசம்...
மரணிக்கும் கணத்திலும்
ஏதும் தெரியவில்லை
உனது சுவாசம் தவிர...
சுவாசித்தேன் உனது சுவாசம்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks