பூமியின் சுழற்சியில்
சுழன்று கொண்டிருக்கின்றது
காலமும் வாழ்க்கைச் சக்கரமும்
உன் சுழற்ச்சியில் சுழன்று
கொண்டிருக்கிறது எனது வாழ்வின்
அஸ்திவாரம்...
சூரியனின் உதயத்தில் தாவரங்களின்
ஜீவனம்..
உன் உற்சாகத்தில் என் வாழ்வின்
ஜீவன்...
மழையை தாங்கும் பூவிதழ்கள் போல்
உன் புன்னகையை தாங்குகின்றது
என் புன்னகைகள்....
இயற்கையில் இருந்து பெரும் வர்ணங்கள் போல்
உன்னில் இருந்து பெற்ற இனிமைகளைக்
கொண்டு மாளிகை செய்கின்றேன் நீ
இனிதாய் வசித்திட....
கண்ணின் கருமணியாய்
நாளங்களின் துடிப்பாய்
எனக்குள் வீற்றிருக்கின்றாய்...
பனித்துளிகளை தாங்கும் புல்நுனியின்
அழகில் மயங்கிய வேளையில் என்னை
உன் அன்பென்னும் ஆயுதம் கொண்டு
என்னை மயக்க வந்த மாயக் கண்ணனே...
காற்றின் உருவம் கூட தெரிகின்றதே
உன்னைக் கண்டவுடன்...
சூரியன் வானத்தில் ஒர் புள்ளியாய்
நீயோ என் வாழ்வின் புள்ளியாய்...
பூவுக்கே பூக் கொடுக்க நான் என்ன
முட்டாளா என்கின்றாய் என்னிடம்
காதலுக்கே காதலைக் கொடுக்க
நான் ஒன்றும் அறிவிலி இல்லையே...
என் காதலே நீயானபோது
எப்படி என் காதலை உன்னிடம்
கொடுக்க முடியும்....
என் விழியோரத்தில் அரும்பும்
புன்னகை என் காதலை உன்னிடம்
கூற உன் மெளனம் உன் காதலை
உரக்கச் சொல்லிச் சென்று விட்டது
என்னிடம்....
மெளனமே என்னோடு உரக்கப் பேச
நான் பேசும் வார்த்தைகள் அனைத்தும்
கரைந்து சென்றன காற்றோடு - உன்
மெளனத்திற்கு முன்னால்....
Bookmarks