Page 5 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 LastLast
Results 49 to 60 of 97

Thread: ரிதுவேந்தர் - புதிய தொடர்கதை

                  
   
   
  1. #49
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    [QUOTE=leomohan;252212][QUOTE=ஓவியா;252202]
    Quote Originally Posted by leomohan View Post

    என்ன ஓவியா வந்தததற்காக உறுப்பினர்கள் விழா எடுக்கறாங்களா ;−)
    அய்க்கோ மோ, எனக்கு சிரித்து சிரித்து இதயமே வலிக்குது!!! ஒரு டிராயல்தானாம், மேய்ன் பிச்சர் இன்னும் ரெடியாகலையாம்.....

    இது எப்பிடி இருக்கு!!!!!
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  2. #50
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    மிகவும் விறுவிறுப்பாக போகிறது...

    கொடுத்த பயிற்சிகளை நேர்தியாகவும் அதற்கு மேலாகவும் பயிற்சி செய்கிறார்கள் போலும்...
    தொடருங்கள்... சஸ்பென்ஸ் தாங்கல...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #51
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by ஓவியா View Post
    ஓவியா, காலை எழுந்தவுடன் தமிழ் மன்றம் சுற்றுவது,
    மதி, காலை எழுந்தவுடன் தமிழ் மன்றத்தில் தொடர்கதை படிப்பது.


    நல்ல குடும்பம் நம்ம குடும்பம்.
    நம்ம ஃபேமிலியே இப்படி தானுங்கோ....

  4. #52
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    19

    போன புருஷனின் தகவல் தெரியவில்லை. அது சரி நிஜ புருஷனா இருந்தா கண்டிக்கலாம் என்று நினைத்துக் கொண்டே இரவு பூஜைக்கு கூட்டத்துடன் சென்றடைந்தாள்.

    அனைவரும் உள்ளே நுழையும் வரை அமைதியாக இருந்த கோபால் எழுந்தமர்ந்து சிறிய ரப்பர் குமிழ்களை மைக்ரோபோனின் பின்பக்கம் இணைத்தான். வெற்றிடம் கொண்டு பற்றிக்கொள்ளும் திறன் படைத்தவை இந்த ரப்பர் குமிழிகள். பிறகு மெதுவாக நகர்ந்து ஒவ்வொரு இடத்திலிருந்தும் குறி பார்த்து பெரிய பெரிய குடிசைகளின் ஜன்னல் பக்கத்தில் போய் பற்றிக் கொள்ளும்படி அந்த மைக்ரோபோன்களை குண்டு போல் பாவித்து சுட்டுக் கொண்டிருந்தான்.

    ஒவ்வொரு முறையும் சுட்ட பிறகும் தன்னுடைய ரீசீவரில் அதே அலைவரிசையில் வைத்து பார்த்து ஏதாவது ஒலி கிடைக்கிறதா என்று பார்த்தான். இவ்வாறாக தன்னிடம் இருந்த 20 மைக்ரோபோன்களையும் பொருத்தி முடித்தான். மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வந்து படுத்துக் கொண்டான்.

    உள்ள பூஜை களை கட்டிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் இரண்டு நீல கயவர்கள் வந்து அவளை அழைத்தனர். இன்னிக்கு ரிதுவேந்தருக்கே உன்னை படைக்கப்போறோம் வா என்றனர்.

    சரிதான் கண்டுபிடித்துவிட்டார்களோ, இல்லை அந்த பக்கிப்பையன் அன்னிக்கு பார்த்தை நினைவில் வைச்சிகிட்டு இன்னிக்கு கூப்பிட்டனுப்பறானோ என்றெல்லாம் நினைத்தாள்.

    மெதுவாக அவர்கள் பின் நடந்து சென்றாள். மேடைக்கும் பின்னால் இருந்த திரையையும் தாண்டி பின்னால் இருந்த இன்னொரு குடிசைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். முன்பு தான் செய்த சாகஸம் நடந்த இடத்தை பார்த்தாள். அங்கு எரிந்ததாகவோ இரண்டு கொலைகள் நடந்ததாகவோ எந்த அறிகுறியும் இல்லை. மௌனமாக தொடர்ந்தாள்.

    அவளை ஒரு இருக்கையில் அமர்த்திவிட்டு அந்த இரு கயவர்களும் வெளியேறினர். அந்த அறையில் மின்சார விளக்கு நீல நிறத்தில் எரிந்துக் கொண்டிருந்தது.

    உள்ளே வந்த கயவர்களின் தலைவன் ரிதுவேந்தர் மெதுவாக நெருங்கி அவள் மார்பகங்கள் மீது கை பதித்தான். பிறகு அவளுடைய கையை தன் கையில் எடுத்துக் கொண்டான். உடலை மரக்கட்டையாக ஆக்கிக் கொண்டாள் ராணி. இவனை எங்கு உதைக்கலாம், அல்லது ஒரேடியாக கொன்றுவிடலாமா. இல்லை உயிருடன் பிடிக்க வேண்டுமா என்றெல்லாம் யோசித்தவாறு இருந்தாள். சட்டென்று அவளுடைய கைகளை கீழே போட்டான் ரிதுவேந்தர். கதவை திறந்து வெளியே சென்று அங்கிருந்து இரண்டு நீல நிறை ஆடைகளிடம் டாக்டரை கூப்பிடு என்று சுருக்கமாக சொன்னான்.

    சில நிமிடங்களில் நேராக உள்ளே நுழைந்த டாக்டர் ஒருவரை பார்த்து கண் அசைத்தான்.

    அவளுடைய கையில் இருந்து வடுவை சோதித்துவிட்டு, பாஸ், இவ கையில டிரான்ஸிமிட்டரோ அல்லது ஜிபிஸ் சிப்போ பொருத்தியிருக்காங்க. இவ ஒரு உளவாளியா தான் இருக்கனும்.

    கடும் கோபம் வந்தது ரிதுவேந்தருக்கு. அவளை நெருங்கி ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தான். நிலை குலைந்து போன அவள் எழுந்து மீண்டும் அமைதியாக அமர்ந்தாள்.

    யார் நீ. நீ சிஐடியா

    ஆம் என்றாள் அமைதியுடன்.

    நாங்க சிசிடிவியில் பார்த்தோம். உன் உடலமைப்பு வைச்சி நீ தான் அந்த கொலை பண்ணியிருக்கனும்னு புரிஞ்சிகிட்டோம். உன்னை வரவழைக்க தான் இந்த விசேஷ பூஜை என்று கத்தினான் அவன்.

    பிறகு, உள்துறை அமைச்சருக்கு போன் போடு. என்ன ஒரு சைடு பிரெண்டிஷிப்புன்னு சொல்லி இன்னொரு சைட் போட்டுக் கொடுக்கறானா என்று கூவினான். அவனுடைய அழக தமிழ் பேருரைகளிலிருந்து வித்தியாசமாக லோக்கல் தமிழ் வெளியே தெரிந்தது. நேரமும் வந்துவிட்டதே.

    பாதி உறக்கத்தில் இருந்த அமைச்சர் ரிதுவேந்தரிடமிருந்து போன் வந்ததும் நடுநடுங்கி எழுந்தார்.

    இல்லை பாஸ். நாங்க யாரையும் அனுப்பலை. அப்படி அனுப்ப விடுவேனா.

    பின்ன என்ன நடக்குது இதெல்லாம். மெடிக்கல் கௌன்சில் எல்லா டாக்டர்களையும் நேராக வந்து பதிப்பை புதுபிச்சிக்கனும்னு விளம்பரம் கொடுக்கப்போறாங்களாம். இரண்டு ரிதுவேந்தர்களை அடிச்சியே கொன்னிருக்கா இவ. இன்னிக்கு கையிலே சிப்போட உளவு பார்க்க வந்திருக்காளா.

    பாஸ். கொஞ்சம் அமைதியா இருங்க. அவளை கொன்னுட்டீங்கன்னா பெரிய பிரச்சனையாயிடும். அவளை பிணைய கைதியா வைச்சிருங்க. எத்தனை பேரு உளவு பார்க்க வந்திருக்காங்க, என்ன விபரம் கேட்டு நான் காலையில சொல்றேன். அதுவரையில் அவளை ஒன்னும் பண்ணிடாதீங்க என்று மன்றாடினார்.

    இன்னும் 24 மணி நேரத்துல எல்லா போலீஸ் சிஐடி நாயுங்களும் என் ஊரைவிட்டு போகனும். இல்லை நீ உயிரோட இருக்க மாட்டே என்று கத்திவிட்டு போனை துண்டித்தான்.

    டாக்டரை அழைத்து அந்த சிப்பை ஆபரேஷன் பண்ணி எடுத்துடு. அவளை அடைச்சு வை. அப்புறம் பாத்துக்கலாம் என்று விலகினான்.

    அவனை பார்த்து மெதுவாக புன்னகைத்தாள் ராணி. அவன் கடுகடுப்புடன் வெளியேறினான்.

    அநஸ்தீஷியா கொடுத்து அவளுடைய கையில் இருந்த சிப்பை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். ஆனால் மொரிஷீயஸில் கிடைத்த பயிற்சியில் எவ்வாறு நினைவுகளை தக்க வைத்துக் கொள்வது என்றும் சொல்லிக் கொடுத்தனர். சிகிச்சை மட்டும் நடந்தது.

    பிறகு அந்த பெரிய குடிசைக்கும் பின்னால் சற்று தனியாக இருந்த இன்னொரு குடிசையில் அவளை அடைத்து வைத்தனர். ஜன்னலுக்கு அருகில் கோபால் பொருத்தியிருந்த மைக்ரோபோன் இருந்தது. எங்கு எதை பார்க்க வேண்டும் என்று சொல்லித் தந்திருந்தது அவர்களுடைய பயிற்சி. மெதுவாக அந்த மைக்ரோபோனை பார்த்து பேசினாள். கோபால் ஒலி சிக்னல்கள் வருவதை அறிந்து மெதுவாக காது கொடுத்து கேட்டான்.

    பிறகு விடியும் முன் அங்கிருந்து நழுவி தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  5. #53
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கிளமாக்ஸ் பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. வெகு விறு விறுப்பாய் கதையை நகர்த்துகிறீர்கள் மோகன்.வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #54
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    20

    வீட்டுக் கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது.

    திறந்து பார்த்தால் டிக்கடைக்காரர் நின்றிருந்தார்.

    என்னப்பா நீ நேத்திக்கு பூஜைக்கு வரலை. ரிதுவேந்தர் ரொம்ப வருத்தப்பட்டாரு.

    ரிதுவேந்தருக்கு என்னை தெரியுமா.

    பின்னே ஊருக்கு யார் புதுசா வந்தாலும் அவருக்கு தெரியாம இருக்குமா

    அப்படியா

    சரி நீ ஏன் வரலை அதை சொல்லு

    இல்லைண்ணே நேத்து கொஞ்சம் ஓவரொ குடிச்சிட்டேன். அதனால் நிலை தடுமாறி தென்னந்தோப்புல விழுந்து கெடந்தேன். சூரிய கண்ணுல குத்தின பிறகு தான் எழுந்து வந்தேன்.

    இப்படிய யாராவது குடிப்பாங்களா.

    அண்ணே இன்னொரு பிரச்சனை அண்ணே. ராத்திரி பூஜைக்கு போன என் பொண்டாட்டி இன்னும் வீட்டுக்கு வரலை.

    அதுக்கு தான்பா நான் வந்திருக்கேன். அவளுக்கு வைத்தியம் நடக்குது. உன்னையும் கையோட கூட்டிக்கிட்டு வரச்சொன்னாரு ரிதுவேந்தர்.

    அண்ணே உங்களுக்கு ஒரு விசேஷ வைத்தியம் வைச்சிருக்கேன் நானு என்றான் கோபால்.

    என்ன எனக்கு வைத்தியமா என்றான் அந்த டீக்கடைக்காரன் சற்று குழப்பத்துடன்.

    இது தான்ணே அது என்று ஓங்கி அவன் முகத்தில் குத்துவிட்டான். பிறகு அவனை உருட்டி பிரட்டி எடுத்து கையில் கட்டுப்போட்டு தூணுடன் கட்டி வைத்தான்.

    ஏண்டா நாயே அப்பாவி மக்களை ஏமாத்தறதுக்கு ஒரு கூட்டம். அதுக்கு நீ தான் ப்ரோக்கரா என்று மீண்டும் ஓங்கி ஒரு அறைவிட்டான்.

    யார் நீ. எதுக்காக இதுமாதிரியெல்லாம் பேசறே. யாரு ஏமாத்தற கூட்டம். யார் ப்ரோக்கரு என்று எதுவும் தெரியாத மாதிரி ஒரு நாடகம் போட்டான்.

    மீண்டும் ஒரு அறை.

    உங்களோட ஆட்டத்தை முடிக்கத்தான் நாங்க வந்திருக்கோம்டா என்று சொல்லி அவனை ஒரு பெரிய மரப்பெட்டியில் தூக்கிப் போட்டான். க்ளைமாக்ஸ் வரைக்கும் அப்படியே கிட. இந்தா தண்ணி பாட்டில். தாகம் எடுத்தா குடிச்சிக்கோ. பெட்டி மேலே பாம் வைச்சிருக்கேன். அதனால ரொம்ப புத்திசாலித்தனமா ஏதாவது பண்ணி பழைய வீட்டை இடிக்க வைச்சிடாதே. அத்தோட உன்னோட சதையும் பிஞ்சி பிசிறு பிசிறாயிடும் என்று எச்சரித்துவிட்டு அந்த பெட்டியை மூடி, டிக் டிக் என்று ஒலி வரும் அந்த கடிகாரத்தை மேலே வைத்துவிட்டு வீட்டை நன்றாக பூட்டிவிட்டு தபால் நிலையத்திற்கு கிளம்பினான்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  7. #55
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    நன்றி சிவா.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  8. #56
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இவனை அடைத்து வைத்ததால் சில அப்பாவி புதியவர்கள் தப்பித்தார்கள். ...

    அவுங்க கதி என்னமாதிரி?
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #57
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    31 Jul 2007
    Posts
    55
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    25
    Uploads
    0
    சும்மா பின்னனுறீங்க சார்....
    தொடரட்டும் பணி.....



  10. #58
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    நன்றாகப் போகின்றது மோகன் அண்ணா உங்கள்
    தொடர்கதை வாழ்த்துக்கள்...

    சஸ்பென்ஸ் தாங்கமுடியேலை சீக்கிரம்
    அவிழ்த்து விடுங்கள் ரகசிய
    முடிச்சை
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  11. #59
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    நன்றி அன்புரசிகன், கலையன்பன், இனியவள்
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  12. #60
    இளம் புயல் பண்பட்டவர் pathman's Avatar
    Join Date
    23 Oct 2006
    Posts
    118
    Post Thanks / Like
    iCash Credits
    10,317
    Downloads
    92
    Uploads
    0

    Smile

    Quote Originally Posted by leomohan View Post
    நன்றி பாத்மேன் அவர்களே.
    இன்னா பாஸ் நம்ம பெயரையே மாத்திடீங்க Bat Man என்று சொல்லி இருந்தாலும் ஒகே

Page 5 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •