பூப் பூத்துக் குலுங்கும்
பூங்காவனத்தில் தேடுகின்றன
வண்டுகள் தேன் சிந்தும் பூக்களை...
நடனமாடிக் கொண்டிருக்கின்றன
தென்றல் வந்து தாலாட்டிச் செல்ல
அன்று மலர்ந்த மலர்கள் அன்றே
மடிவதையறியாமல்....
காற்றுக்கு கடிவாளமிட்டு
தன்னோடு கட்டிப்போட முனைந்து
கொண்டிருக்கின்றன மரங்கள்....
இரைதேடிச் சென்ற தாய்ப்பறவையை
எதிர்பார்த்து இசைமீட்டிக் கொண்டிருக்கின்றன
குஞ்சுப் பறவைகள்...
தன்னில் இருந்து உயிர்ப்பெற்ற
வெண்ணிலவை இரவின் பாதுகாவலனாய்
அனுப்ப விரைந்து கொண்டிருந்தது
சூரியன் மலைகளுக்கு நடுவே...
நட்சத்திரங்கள் அணிவகுக்க
பவனி வருகின்றது நிலா
விண்ணைச் சுற்றி...
Bookmarks