Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 25

Thread: இயற்கை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    இயற்கை

    பூப் பூத்துக் குலுங்கும்
    பூங்காவனத்தில் தேடுகின்றன
    வண்டுகள் தேன் சிந்தும் பூக்களை...

    நடனமாடிக் கொண்டிருக்கின்றன
    தென்றல் வந்து தாலாட்டிச் செல்ல
    அன்று மலர்ந்த மலர்கள் அன்றே
    மடிவதையறியாமல்....

    காற்றுக்கு கடிவாளமிட்டு
    தன்னோடு கட்டிப்போட முனைந்து
    கொண்டிருக்கின்றன மரங்கள்....

    இரைதேடிச் சென்ற தாய்ப்பறவையை
    எதிர்பார்த்து இசைமீட்டிக் கொண்டிருக்கின்றன
    குஞ்சுப் பறவைகள்...

    தன்னில் இருந்து உயிர்ப்பெற்ற
    வெண்ணிலவை இரவின் பாதுகாவலனாய்
    அனுப்ப விரைந்து கொண்டிருந்தது
    சூரியன் மலைகளுக்கு நடுவே...

    நட்சத்திரங்கள் அணிவகுக்க
    பவனி வருகின்றது நிலா
    விண்ணைச் சுற்றி...
    Last edited by இனியவள்; 05-08-2007 at 06:30 PM.
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    காலை எழுந்து
    எல்லாம் முடித்து
    வேலைக்குச் சென்று
    ஓயாமல் உழைத்து
    மாதம் முடிந்ததும்
    சம்பளம் கைக்கு
    வந்ததும் காணாமல்
    போகிறது
    மனிதர்களுக்கு
    இதுவும் இயற்கையோ!!!!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    காலை எழுந்து
    எல்லாம் முடித்து
    வேலைக்குச் சென்று
    ஓயாமல் உழைத்து
    மாதம் முடிந்ததும்
    சம்பளம் கைக்கு
    வந்ததும் காணாமல்
    போகிறது
    மனிதர்களுக்கு
    இதுவும் இயற்கையோ!!!!
    மனிதன் பூசிய சாயம் அது
    அவனால் இயற்கை அழிகின்றது
    இயற்கையால் அவன் பாதுக்காக்ப் படுகின்றான்
    அழிப்பவனை பாதுகாத்து தன்னை அழிக்கின்றது
    இயற்கை
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பூப் பூத்துக் குலுங்கும்
    பூங்காவனத்தில் தேடுகின்றன
    வண்டுகள் தேன் சிந்தும் பூக்களை...
    பிறப்புக்கும் இறப்புக்கும்
    இடைப்பட்ட கணப்பொழுதில்
    இன்சொல் பேசி இனிக்கப்பழகி
    இனிமைதேடும் தத்துவம் சொல்கிறதோ?

    நடனமாடிக் கொண்டிருக்கின்றன
    தென்றல் வந்து தாலாட்டிச் செல்ல
    அன்று மலர்ந்த மலர்கள் அன்றே
    மடிவதையறியாமல்....
    நிலையாமை நினைத்து
    கலங்கும் அறியாமையை
    கலைக்க கற்றுத்தருகின்றனவோ..!

    காற்றுக்கு கடிவாளமிட்டு
    தன்னோடு கட்டிப்போட முனைந்து
    கொண்டிருக்கின்றன மரங்கள்....
    உழைப்பின் உயர்வையும்
    முயற்சியின் விளைவையும்
    என்னிடம் பயிலுங்கள்
    மந்தை மனிதர்களே.என
    சாட்டை வீசுகிறனவோ...?

    இரைதேடிச் சென்ற தாய்ப்பறவையை
    எதிர்பார்த்து இசைமீட்டிக் கொண்டிருக்கின்றன
    குஞ்சுப் பறவைகள்...
    உறவுகளின் உன்னதமும்
    உயிர்ப்பின் இருப்பும்
    உணர்வுகளின் உயிரும்
    உங்களுக்கு உரைத்தவர்கள் நாமென்கிறனவோ..!

    தன்னில் இருந்து உயிர்ப்பெற்ற
    வெண்ணிலவை இரவின் பாதுகாவலனாய்
    அனுப்ப விரைந்து கொண்டிருந்தது
    சூரியன் மலைகளுக்கு நடுவே...
    மறைவுகளை எண்ணி
    மலைத்திருக்காதே
    இன்னொரு பாதை
    உனக்கு இருக்கிறது என
    தத்துவம் சொல்கிறதோ...!

    நட்சத்திரங்கள் அணிவகுக்க
    பவனி வருகின்றது நிலா
    விண்னைச் சுற்றி...
    தனிமரம் தோப்பில்லை
    கூடி வாழ்ந்தால்
    கோடி நன்மை..
    எம்மைப்பார்த்துதான்
    எழுதி வைத்தார்கள்
    உங்கள முன்னோர்கள் என்கிறனவோ...!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    வாவ் அருமையான பதில்க் கவி
    வாழ்த்துக்கள் அமர்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மலரும் மரமும் நிலவும்
    பெருமித மகிழ்ச்சியில்..
    இனியவளின் புதிய பார்வையால்!

    இயற்கை, மழலை இவற்றை விஞ்சிய அழகு எங்கு உண்டு?

    வாழ்த்துகள் இனியவள்!

    (நீங்கள் இதுவரை வாசிக்கவில்லையெனில் பாரதிதாசனின்
    ''அழகின் சிரிப்பு'' வாசிக்கவும்..
    இயற்கையும் தமிழும் ஒரு கவியின் பார்வையும் கலந்தால் விளையும் தெவிட்டா அமுதம் அது)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by இனியவள் View Post
    நட்சத்திரங்கள் அணிவகுக்க
    பவனி வருகின்றது நிலா
    விண்னைச் சுற்றி...
    நீ விண்ணைச்சுற்று
    நான் உன்னைச்சுற்றுகிறேன்...
    உனது உபகோளாக...

    நல்லதொரு வடிவமைப்பு...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    கவிதையும் அவற்றிற்கே உரித்தான உவமானமும் நன்று என்று இனியவளிற்கு சொல்லத்தேவையே இல்லை. ஏனெனில் அந்த அங்கீகாரம் முதலே கிடைத்துவிட்டதி. ஆதலால் அதை விலத்தி,
    Quote Originally Posted by இனியவள் View Post
    தன்னில் இருந்து உயிர்ப்பெற்ற
    வெண்ணிலவை இரவின் பாதுகாவலனாய்
    அனுப்ப விரைந்து கொண்டிருந்தது
    சூரியன் மலைகளுக்கு நடுவே...


    கவிதையில் பல வர்ணனைகளிருந்தாலும் இந்த வரிகள் மட்டும் உண்மையுடன் இருப்பது சிறப்பே. பாராட்டுக்கள்
    Last edited by விகடன்; 05-08-2007 at 06:09 PM.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    மலரும் மரமும் நிலவும்
    பெருமித மகிழ்ச்சியில்..
    இனியவளின் புதிய பார்வையால்!
    இயற்கை, மழலை இவற்றை விஞ்சிய அழகு எங்கு உண்டு?
    வாழ்த்துகள் இனியவள்!
    (நீங்கள் இதுவரை வாசிக்கவில்லையெனில் பாரதிதாசனின்
    ''அழகின் சிரிப்பு'' வாசிக்கவும்..
    இயற்கையும் தமிழும் ஒரு கவியின் பார்வையும் கலந்தால் விளையும் தெவிட்டா அமுதம் அது)
    நன்றி இளசு அண்ணா உங்கள் வாழ்த்துக்கு

    (இதுவரை படிக்கவில்லை அண்ணா இனிப் படித்துவிடுவேன்)
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    நீ விண்ணைச்சுற்று
    நான் உன்னைச்சுற்றுகிறேன்...
    உனது உபகோளாக...

    நல்லதொரு வடிவமைப்பு...
    நன்றி அன்பு

    உபகோளாக என்னைச் சுற்றி
    என்னை உதறித்தள்ளிவிடாதே
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by விராடன் View Post
    [COLOR="Blue"]
    கவிதையில் பல வர்ணனைகளிருந்தாலும் இந்த வரிகள் மட்டும் உண்மையுடன் இருப்பது சிறப்பே. பாராட்டுக்கள்
    நன்றி விராடன்

    சில நேரம் கவிதைக்கு
    உண்மை கூட அழகுதான்:nature-smiley-008:
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    சில கவிதைகளை வாசிக்கும் போது , நேரடி பொருளை விட்டு விட்டு வேறு கருவை பொருத்தி பார்க்கும் மனம்....
    அதில் கிடைக்கும் மிக சிறிய வெற்றியில் "நான் நல்ல ரசிகன்" என்று ஒரு பகட்டு பெருமையை சூடி கொள்ள ஆசையும் வரும்....
    இப்போது நானும்...

    இதில் எல்லாம் நடந்தேயாகவேண்டும்.... அது இயற்கை.
    இதுல ஒன்றேனும் நடக்கவில்லை என்றால் பிரச்சினைதானே..!!!???
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •