Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 19

Thread: இலக்கியம் பற்றிய தேடல்... விட்டேத்தியான பார்வைகள்...

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    இலக்கியம் பற்றிய தேடல்... விட்டேத்தியான பார்வைகள்...

    விட்டேத்தியான பார்வைகள்... ஆரம்பம்..

    ஒரு முன் குறிப்பு:

    இந்தத் தொடர் முற்றிலும் வித்யாசமான முயற்சி.
    இது என்னுடைய இலக்கியம் பற்றிய விட்டேத்தியான தேடுதல் நிறைந்த பயணம்..
    சங்ககால இலக்கியம் தவிர்த்து எழுத்து மட்டுமல்லாது பிற கலைகள் பற்றியும்...
    இலக்கியம் சார்ந்ததாக... இதன் நீள அகலங்கள்.. பரிணாம வளர்ச்சி.. வரலாறு... இப்படியாக..
    சகிக்கமுடியாத.. அறுவெறுப்பான.. அதிர்ச்சி அடைய வைக்கக்கூடிய.. ஜீரணிக்கவே முடியாத.. ஆனால், உண்மையான..
    இது போன்ற எல்லவிதக் கலவைகளும் இந்த தொடரில் இடம் பெறும் என்பதை
    தெரிவித்துக் கொள்கிறேன்..
    அப்புறம் ராம்பால் ஏன் இப்படி எழுதுகிறான்?
    நேற்றுவரைக்கும் நல்லாத்தானே இருந்தான்.. எந்த காத்துகருப்பு பட்டுச்சோ..
    இவனுக்கு என்னவோ ஆகிவிட்டது.. என்றெல்லாம் சொல்லக்கூடாது..

    முன்னுரை:

    இலக்கியத்தரம் வாய்ந்தது.. இலக்கியம்.. இசங்கள்.. இலக்கியவாதி.. கலை.. கலைப்படைப்பு..
    இப்படி கொட்டிக்கிடக்கும் இந்த சொற்களுக்கு அர்த்தம் என்ன?
    இலக்கியம் என்றால் என்ன?
    அது எத்தகையது?
    எதை இலக்கியம் என்று பகுப்பது?
    எது இலக்கியம் இல்லை?
    இப்படி ஒரு புரிந்தும் புரியாத புதிர் போன்று தோற்றமளிக்கும்
    விசித்திரம்தான் இலக்கியமா?
    இப்படி பல கேள்விகள் இலக்கியம் பற்றி..
    இலக்கியம் சரியான முறையில் புரிதல் படவேண்டும்.
    இலக்கியம் என்பது எல்லோருக்கும் சரியான முறையில்
    போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தில்..

    எழுத்து எப்படி இருக்க வேண்டும்?
    எப்படி உருவகப்படுத்த வேண்டும்?
    எப்படி உவமைகள் இருக்க வேண்டும்?
    கவிதை என்பது என்ன?
    என்று புரியாமல் பலவித சர்ச்சைகள் அவ்வப்பொழுது
    நம் மன்றத்தில் நிகழ்வதால் ஏதோ என் சிற்றறிவிற்கு எட்டிய வகையில்..
    இலக்கியம் பற்றி எனக்குத் தெரிந்த வரையில்..

    இது வெறும் கவிதை மற்றும் எழுத்து சார்ந்தது மட்டுமல்லாது அத்தனை வகை கலைகளும்
    இடம்பெறும். அத்தனை கலைகளுக்கும் பொதுவான சாராம்சம் இருக்கிறது.
    அந்த சாராம்சங்களைப் பற்றி..
    அந்தக் கலைகளைப் படைத்த படைப்பாளிகள் பற்றி.. கலைஞர்களைப் பற்றி..
    கொஞ்சம் விலாவரியாக விளக்கவே இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன்..

    இதில் எல்லாவித இலக்கியங்களும் இடம்பெறும்..
    லத்தீன் அமெரிக்காவின் மேஜிக்ரியலிசம் முதல் தலித் இலக்கியம், நாட்டார் இலக்கியம்..
    இப்படியாக போர்னோ வரை..
    (போர்னோ கூட ஒருவகை இலக்கியம் என்பதால் அதுவும் இடம் பெறும்..)

    எல்லாவித இலக்கியவாதிகளும் இடம் பெறுவர்..
    பிரான்சின் கேபரே கிளப் பாடகியில் இருந்து நம்மூர் அழகிய பெரியவன் வரை இடம் பெறுவர்..

    ஆரம்பம்:

    இலக்கியம் என்பது என்ன?

    இலக்கியங்கள் என்பது ஒரு இலக்கோடு அந்த அந்த கால கட்டத்திற்கு ஏற்ப அங்கு நிலவிய சமூக சூழலை.. அங்கு வாழும் மக்களின்
    வாழ்க்கை முறையை.. காதலை, வீரத்தை, போர்கள் பற்றி.. அவலங்களை..
    இப்படியாக ஏற்படும் பாதிப்புகளை பதிய ஒரு ஊடகம் தேவை..
    அந்த ஊடகங்கள் தான் ஓவியம், சிற்பம், கவிதை, கட்டிடம்.. இப்படி ஒட்டுமொத்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு..
    இவைகளுக்குத்தான் இலக்கியம் என்று பெயர் என்று எனது சிற்றறிவு கூறுகிறது.
    உண்மையாகச் சொல்லப்போனால், சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு அதை வெளிப்படுத்துதல் என்பதே
    இலக்கியம் எனும் சொல்லுக்கு கோட்பாடாக இருக்கலாம்.

    இலக்கியங்கள் என்று கூறப்படுகிறதே? அப்படியென்றால் என்ன?

    இலக்கியங்கள் என்பது மொழிவாரியாக, பிராந்தியங்கள் வாரியாக, காலகட்டங்கள் வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது.
    உலக காலத்தை யுகங்களாக பிரித்திருப்பது போல் இதை இசங்களாக பிரித்துள்ளனர்.
    அதற்காக சங்ககாலம்.. தொல்கப்பியம் என்றெல்லாம் விலாவாரியாக விவரித்து சொல்லப்போவதில்லை..
    நான் எடுத்துக் கையாளப்போகும் கால கட்டம் என்பது கிபி 1400ல் இருந்து இன்றைய தேதிவரை..
    உலக இலக்கியங்களின் வரலாறு, பரிணாமவளர்ச்சி, அதில் இருந்து சில மேற்கோள்கள்.. அவ்வளவே..

    இத்துடன் இந்த அறிமுகத்தை முடிக்கிறேன்..
    Reniassance = Rebirth என்று அழைக்கப்படும் கால கட்டத்தில் இருந்து தொடங்குகிறேன்..

    தொடரும்....
    Last edited by விகடன்; 03-05-2008 at 10:19 AM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    இன்னும் ஒரு வித்தியாசமான முயற்சி. ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
    Last edited by விகடன்; 03-05-2008 at 10:19 AM.

  3. #3
    இளம் புயல்
    Join Date
    02 Apr 2003
    Location
    Chennai
    Posts
    242
    Post Thanks / Like
    iCash Credits
    8,965
    Downloads
    0
    Uploads
    0
    இலக்கியம் என்றாலே ஏதொ நமக்கு சம்பந்தம் இல்லாத
    விஷயம் என்ற கருத்தை மாற்றி, அனைவருக்கும் புரியும் வண்ணமும்
    இலக்கியத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணமும் துவங்கியுள்ள
    உங்களின் இந்த தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்..

    தினேஷ்.
    Last edited by விகடன்; 03-05-2008 at 10:19 AM.

  4. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    வியாபார தலைநகரம&
    Posts
    920
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    உங்கள் முயற்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்..

    `இலக்கணம் மாறுதோ.. இலக்கியம் ஆனாதோ..
    இதுவரை படைத்தது அது என்ன வேதம்
    இது என் புது பாடம்....'
    Last edited by விகடன்; 03-05-2008 at 10:19 AM.

  5. #5
    இனியவர் தஞ்சை தமிழன்'s Avatar
    Join Date
    08 Apr 2003
    Location
    குடந்தை
    Posts
    719
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    0
    Uploads
    0
    இலக்கியம்,
    அது ஜனரஞ்சகமாக மாற ராம்பாலின் முயற்சி.

    வாழ்த்துக்கள்.
    Last edited by விகடன்; 03-05-2008 at 10:20 AM.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    நன்றாக எழுத என் வாழ்த்துகள்.... இதற்கு நிறைய்ப் படிக்க வேண்டும். நிறைய உழைக்க வேண்டும். துணைக்கு நிற்பதற்கு நாங்களும் உண்டு....

    வாழ்த்துகள்......
    Last edited by விகடன்; 03-05-2008 at 10:20 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  7. #7
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    ஆவலோடு எதிர்பார்க்கும் உள்ளங்களுக்கு நன்றி.
    கொஞ்சம் பூடகமாய் மிரட்டுவது போல் தேவையான சமயங்களில் கை கொடுக்கிறேன் என்று கூறி இருக்கும் நண்பனுக்கு நன்றிகள்.
    Last edited by விகடன்; 03-05-2008 at 10:20 AM.

  8. #8
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    Renaissance (மறு உயிர்ப்பு) (1420/1450-1600)

    Renaissance என்று அழைக்கப்படும் கால கட்டத்தில் இருந்து ஏன் ஆரம்பிக்கவேண்டும்?
    என்று ஒரு கேள்வி உங்களில் பலருக்கு எழலாம்.
    இதற்கு முந்தைய காலகட்டத்தில் கலை என்பது அவ்வளவு தூரத்திற்கு
    அதாவது இந்த (மத்திய) கால கட்டத்தோடு ஒப்பிடுகையில் அவ்வளவாக விஸ்வரூபம் எடுக்கவில்லை.
    மத்திய காலத்தின் இறுதியில் இந்த Renaissance அதாவது மறு உயிர்ப்பு புதிய
    வெளிச்சங்களை கொண்டு வந்து சேர்த்தது.

    கலை உலகின் பொன்னான கால கட்டம் இங்குதான் ஆரம்பமானது.
    1420 களில் இத்தாலியில் ஆரம்பமான இந்த மறு உயிர்ப்பு அடுத்த 80 ஆண்டுகளுக்குள்
    ஐரோப்பா முழுமைக்கும் விரவி தனக்கென ஒரு இடம் பிடித்தது.
    மத்திய காலம் முழுமையும் விரவிக்கிடந்த இருண்மையை போக்குவதற்குரிய
    ஒளி மற்றும் புதிய சிந்தனைகள் இந்த கால கட்டத்தில்தான் விளைந்தது.

    இந்த கால கட்டத்து சிந்தனைகள் எல்லாம் செவ்வியல் காலத்தின் (Classic period) மூலக்கருவைத் தழுவி
    புதுப்பிக்கப்பட்டன. இதனால் இந்தக் கால கட்டத்து மக்களின் தேடுதல்கள் அறிவியல் சார்ந்ததாகவும்,
    இயற்கை, தத்துவம், அரசியல் மற்றும் கலை போன்றவைகளை அறிவியல் பிண்ணனியில் ஆராய்ந்தும்
    புதிய பரிணாமம் அடைந்தனர்.

    இந்த காலகட்டத்தில் கலை கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம் ஆகியவைகளில் சிறந்ததாக விளங்கியது.

    இந்த காலகட்டத்தின் முக்கியமான கொள்கைகள் என்பது..

    1. ஒளி மிகுந்த அழகான பூமியும் வாழ்க்கையின் அற்புதங்களும்.
    2. கண் முன் தெரியும் உண்மையின் அற்புதங்கள்.
    3. செவ்வியல் காலத்தின் மூலக்கரு சார்ந்து புதிய மூலம்..
    4. அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி பார்வை
    5. சுய தேடல்களும் தனி மனித வளர்ச்சியும்

    மறு உயிர்ப்பு ஓவியர்கள்தான் முதன் முதலில் Geometric structures மற்றும் perspective ஐ பயன்படுத்தி வரைதல் மற்றும் உலகத்தை வரைந்து 3Dக்கு அடித்தளம் விதைத்தனர்.
    அதாவது உலகத்தில் உள்ள மனிதனை மனிதனாக வரைந்த அல்லது சிற்பமாக வடித்த
    கால கட்டம் இதுதான்

    உங்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும்.
    இந்த காலகட்டத்தில்தான்
    லியோனார்டா டாவின்சியின் உலக அற்புத படம் மோனலிசா வரையப்பட்டது
    மைக்கேல் ஆஞ்சலோவாவால் டேவிட் எனும் சிலை வடிவமைக்கப்பட்டது.

    இந்த கால கட்டம் ஒரு சிறு ஆரம்பம்தான். இதன் பிறகுதான் இசங்கள் ஆரம்பமாகின்றன.
    அந்த இசங்களைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் இந்த மறு உயிர்ப்பு பற்றிய அடிப்படை கொஞ்சம் வேண்டும் என்பதற்காகத்தான் இதை எழுதினேன்.
    அடுத்து இசங்களைப் பற்றிய ஒரு பார்வை..

    தொடரும்..
    Last edited by விகடன்; 03-05-2008 at 10:21 AM.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பெரிய அரிய முயற்சி ராம்.... வாழ்த்தும் பாராட்டும் ஊக்கமும்...
    Last edited by விகடன்; 03-05-2008 at 10:21 AM.

  10. #10
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த அண்ணனுக்கு நன்றி..
    Last edited by விகடன்; 03-05-2008 at 10:21 AM.

  11. #11
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    இம்ப்ரசனிசம் (1870-1880)

    1600க்குப் பின் ஒரு தொய்வு.
    வழக்கமான பாணியிலேயே எல்லாம் இருக்கவேண்டும். செவ்வியல் (classic) வடிவங்களைப் பின்பற்றியதுதான்
    சிறந்தது என்று மக்கள் கூட்டம் அதன் பின்னால் சுற்றி இருந்தது.
    இந்த சமயத்தில்தான் 19 நூற்றாண்டின் இறுதியில் ஒரு புதிய சிந்தனை. மாறுபட்ட கருத்து.
    இயற்கை காட்சிகளை தத்ரூபமாக வரைந்தால் என்ன?
    வெளிச்சத்தையும், நிழலையும், வண்ணங்களையும், கடற்கரையையும், மனித முகங்களை தத்ரூபமாக(போர்ட்ராய்ட்)
    வரைவது பற்றிய சிந்தனைகள் எழுந்தன.

    சலூன் (salons) எனும் இயக்கம் மூலம் செவ்விய ஓவியங்களை கண்காட்சிக்கு வைக்கும் முறை அங்கு இருந்தது.
    சலூனில் இடம் பெற்றால்தான் அவர் அங்கீகரிக்கப்பட்ட கலைஞன் என்று பத்தாம்பசலித்தனத்தை
    உடைத்து இம்ப்ரசனிசம் தோன்றியது.
    முதன் முதலாக 1874ல் மோனட் எனும் ஓவியர் இம்ப்ரச சோலல் லெவன் என்று தனது ஓவியங்களை
    கண்காட்சியில் தனித்து வைத்தார்.
    ஆனால், அவர் இம்ப்ரசனிசம் என்றால் என்னவென்று தனியாக விளக்கவில்லை.
    இருந்தபோதும் இளைய தலைமுறை ஓவியர்கள் அந்த வகை ஓவியங்களை கெட்டியாகப்பிடித்துக் கொண்டு
    வழிவழியாய் வந்த செவ்வியலை உடைத்து இம்ப்ரசனிசத்திற்கு மாறினர்.

    இதில் குறிப்பிடத்தக்கவர்கள் என்றால்,
    மோனட், மேனட், ரினோய்ர், டேகாஸ், செசன்னா ஆகியோர்.
    இயற்கை மீது தீராத ஈடுபாட்டினால் ஸ்டீடியோவை விட்டு வெளியெ வந்து கண்முன் இருக்கும்
    இயற்கை அற்புதங்களை அழகாய் தீட்டினர்.

    இருந்த போதும் இந்த இம்ப்ரசனிசம் முடிவிற்கு வந்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.
    அது ஸ்டில் கேமிரா.
    இதன் மூலம் ஒரு கணஹ்த்தை ஒரு காட்சியை ஒரு சொடுக்கு போடும் நேரத்திற்குள் சிறைப்படுத்தலாம்
    எனும் போது மணிக்கணக்கில் அமர்ந்து வரைவது என்பது வேலை வெட்டி இல்லாத செயலாக தீர்மானிக்கப்பட்டது.


    ஆனால், கலை எனும் தாகமெடுத்தவனுக்கு எத்தனை இடர் வந்தாலும் கவலை இல்லை எனும் விதமாக
    இம்ப்ரசனிசத்திற்கு அடுத்து போஸ்ட் இம்ப்ரசனிசம் எனும் அடுத்த இசம் ஆரம்பமானது.

    தொடரும்..
    Last edited by விகடன்; 03-05-2008 at 10:21 AM.

  12. #12
    புதியவர்
    Join Date
    06 May 2003
    Posts
    47
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி ராம். உங்கள் வீச்சு பிரமிக்க வைக்கிறது. வான் கோவின் ஓவியங்கள் இம்ப்ரசனிசம் வகையைச் சேர்ந்ததா - சற்று விளக்கவும்
    Last edited by விகடன்; 03-05-2008 at 10:21 AM.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •