அதிசயமாய்
அவ்வப்போது
காவிரியில் வெள்ளம் வரும்!
இந்த ஆடியில்,ஓடி வரும்
அன்னையின் மடியில்
கூடிக் குதூகலிப்போம்!
ஆடிப்பட்டம் தேடி விதைக்க
தண்ணீர் தந்து,உழவரின்
கண்ணீர் போக்கும்
காவிரித்தாயை
கைகுவித்து வணங்குவோம்!
ஆடிப்பெருக்கு−உள்ளத்தில்
ஆனந்தப்பெருக்கு!
Bookmarks