Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 19

Thread: காதலின் மாயம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    காதலின் மாயம்

    காதல்..காதல்..காதல்
    மந்திரவார்த்தைகள் கொண்டு
    மயக்குகின்றதா இந்த மூன்றெழுத்து
    வார்த்தை....

    காதல் கொண்டேன்
    பயித்தியம் ஆனேன்...

    உன்னைக் கண்டேன்
    இதயத்தை இழந்தேன்...

    கண்டுபழகியவை எல்லாம்
    புதிதாய் தோன்ற புதியவை எல்லாம்
    பழையதாய் தோன்றுகிறது...

    வானத்தில் போட்டி போட்டுப்
    பறக்கின்றேன் உன்னை பிடிப்பதற்காய்
    கையில் சிக்காத காற்றாய்
    பறந்து செல்கின்றாய்...

    உளரும் வார்த்தைகள் அனைத்தும்
    கவிதையாக மாற
    கவிதைகள் அனைத்தும்
    உளரல்களாக மாறுகின்றது

    நீயின்றி நாட்கள்
    முற்றுப் பெற மறுக்கின்றன..

    அம்மாவாசையாய் இருந்த
    வாழ்வை பெளர்ணமியாக்கி
    கண்சிமிட்டுகின்றாய் மின்னும்
    நட்சத்திரமாய்....

    இருட்டைக் கண்டு மிரண்டவள்
    இருட்டை ரசிக்கின்றேன்...

    பகலில் உன் நிஜத்தோடு வாழ்கின்றேன்
    இரவில் உன் நிழலோடு வாழ்கின்றேன்...

    உன்னோடு இருக்கும் நேரங்களில்
    சந்தோஷம் கை நீட்டி என்னை அரவணைக்க
    நீயற்ற தனிமை என்னை பயமுறுத்துகின்றது...

    என் காதலை கண்டு கொண்டேன் உன்னிடம்
    உன் காதலை கண்டு கொண்டாயா என்னிடம்..??

    கேள்விக்குறியுடன் ஆரம்பித்த என் காதலை
    முடித்து வைப்பாயா முற்றுப்புள்ளி வைத்து....
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by இனியவள் View Post
    அம்மாவாசையாய் இருந்த
    வாழ்வை பெளர்ணமியாக்கி
    கண்சிமிட்டுகின்றாய் மின்னும்
    நட்சத்திரமாய்....
    இதுதானா..
    என்னுள் நீ
    இதுதானா
    உன்னுள் என்விம்பம்

    அழகான வரிகளுக்குப்பாராட்டுக்கள்...........
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    எத்தனை புள்ளி வைத்து
    வரைந்த கோலமென்றாலும்
    அழகில் குறைவதில்லை.

    காதலும் அப்படித்தான்..
    முற்றுபுள்ளி போட்டாலும்
    காற்புள்ளி போட்டாலும்
    என்றும் இனிமை.....!

    இனியவள் கவிதையும்....

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அம்மாவாசையாய் இருந்த
    வாழ்வை பெளர்ணமியாக்கி
    கண்சிமிட்டுகின்றாய் மின்னும்
    நட்சத்திரமாய்....

    இதுகூடப் புரியலையா..."அம்மா"வின் ஆசையைக் காட்டி மோசம் செய்வதற்கு அச்சாரமிது.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    காதல் என்ற மூன்றெழுத்தில்,
    சுகம் என்ற மூன்றெழுத்து நிறைவாகி,
    மணம் என்ற மூன்றெழுத்தில் முடிவாகி,
    வாழ்வு என்ற மூன்றெழுத்தில் நிலையாகி,
    இருந்த என்னை...
    பிரிவு என்ற மூன்றெழுத்து,
    சோகம் என்ற மூன்றெழுத்தைத் தந்து,
    உயிர் என்ற மூன்றெழுத்தைப் பறித்து,
    பிணம் என்ற மூன்றெழுத்தாக
    ஆக்கியது என்னை...

    பாராட்டுக்கள் இனியவள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    வாவ்!!!! என்று சொல்லவைக்கும் அருமையாக அழகான கவிதை. பாராட்டுக்கள்.

    சினிமா காரர்கள் பார்த்தால் இந்த அழகான வரிகளை அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    மிக அழகாக இருக்கிறது இனியவளே இந்த கவிதையின் வரிகள்... உங்கள் கவிதைகளில் முன்னேற்றம்.... வாழ்த்துக்கள்! தொடருங்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அழகான வரிகளுடன் மீண்டுமொரு காதல் சொல்லும் கவிதை.வாழ்த்துக்கள் இனியவள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    இதுதானா..
    என்னுள் நீ
    இதுதானா
    உன்னுள் என்விம்பம்

    அழகான வரிகளுக்குப்பாராட்டுக்கள்...........
    நன்றி அன்பு

    என்னுள் உன்
    விம்பம் காணுவதென்றால்
    எனக்குள் ஓர் பூரிப்பு
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    எத்தனை புள்ளி வைத்து
    வரைந்த கோலமென்றாலும்
    அழகில் குறைவதில்லை.

    காதலும் அப்படித்தான்..
    முற்றுபுள்ளி போட்டாலும்
    காற்புள்ளி போட்டாலும்
    என்றும் இனிமை.....!

    இனியவள் கவிதையும்....
    நன்றி அமர்..

    எப்படியோ ஒரு புள்ளியில்
    ஆரம்பித்து இன்னொர்
    புள்ளியில் முற்றுப் பெறுகின்றது
    காதலும் வாழ்க்கையும்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    இதுகூடப் புரியலையா..."அம்மா"வின் ஆசையைக் காட்டி மோசம் செய்வதற்கு அச்சாரமிது.
    ஹீ ஹீ அமர்

    அதில் இப்படி ஒரு
    கருத்தும் இருக்கா
    அடடா எனக்கு தெரியாமல்
    போய் விட்டது
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    காதல் என்ற மூன்றெழுத்தில்,
    சுகம் என்ற மூன்றெழுத்து நிறைவாகி,
    மணம் என்ற மூன்றெழுத்தில் முடிவாகி,
    வாழ்வு என்ற மூன்றெழுத்தில் நிலையாகி,
    இருந்த என்னை...
    பிரிவு என்ற மூன்றெழுத்து,
    சோகம் என்ற மூன்றெழுத்தைத் தந்து,
    உயிர் என்ற மூன்றெழுத்தைப் பறித்து,
    பிணம் என்ற மூன்றெழுத்தாக
    ஆக்கியது என்னை...

    பாராட்டுக்கள் இனியவள்...
    வாவ் அருமை அக்னி வாழ்த்துக்கள்
    மூன்றெழுத்தின் உண்மைகள் அருமை...

    நன்றி அக்னி வாழ்த்துக்கு
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •