கண்ணனுக்கு அந்த பெரிய கணினி நிறுவனத்தில் மேலாளர் வேலை. முதல் நாள் அலுவலகத்தில்.
28 வயதில் மேலாளர் ஆனதே தாமதம் என்று நினைத்துக் கொண்டிருந்த அவனுக்கு அங்கிருந்த மற்ற மேலாளர்கள் எல்லாம் 35 வயது தாண்டியிருந்ததை பார்த்து ஒரு மன நிம்மதி.
அவனகென்று தனியாக ஒரு அறை கொடுத்திருந்தார்கள். பின்னால் இருந்த ஷோகேஸில் தான் கொண்டுவந்திருந்து பொருட்களை அழகாக அடுக்கி வைத்தான். சிறிய கார்கள் எல்லா மாடல்கள். வெர்கோ என்று தன்னுடைய ராசி பெயரை கொண்ட பல வண்ண கோப்பைகள், சிறிய கிரிகெட் விளையாட்டு மைதானம், அதில் பொம்மை விளையாட்டு வீரர்கள். தன்னுடைய புகைப்படம், பெற்றோர்களின் புகைப்படம் என்று சில நிமிடங்களில் போரடிக்கு அலுவலக காபினை ஒரு பூங்காவாக மாற்றியிருந்தான்.
கணினியில் நுழைந்து மின்னஞ்சலை திறந்து தன் நண்பர்களுக்கும் பெற்றோர்களுக்கும் புதிய வேலை, மற்றும் புதிய செல்பேசி எண், அலுவலக எண்கள் என்று அனைத்தையும் தட்டி விட்டு நிமிர்ந்த போது, ஒரு அழகு பதுமையுடன் அந்த நிறுவனத்தின் மனித வள மேலாளர் தன்னை நோக்கி வருவதை பார்த்தான். வாவ், என்று சொல்லிவிட்டு பிறகு கால் செண்டரில் காதலா வேண்டாமடா என்று சொல்லிக் கொண்டான்.
உள்ள நுழைந்த ராஜாராம், ஹலோ கண்ணன், வாவ், உங்க காபினை கலர்பூஃல்லா மாத்திட்டீங்களே. பலே என்றான்.
மெல்ல புன்னகைத்து அந்த பாராட்டை ஏற்றுக் கொண்டவன், யார் இந்த பெண் என்பது போல் நெற்றி புருவத்தை உயர்த்தினான். நீல சுடிதாரில் அழகாக இருந்தாள். மேல் பூச்சு எதுவுமில்லாத தமிழ் பெண். வட நாட்டின் கலாச்சாரம் உட்புகந்து சுடிதாரில் இருந்தாலும் சுடிதார் அணிந்தால் மேலே துப்பட்டாவும் போடவேண்டும் எனும் அளவுக்கு முழுவதும் நுழையாத கலாச்சாரம். நம்முடைய கலாச்சாரம் ஏர் டைட் தான் என்று மனதில் சொல்லிக் கொண்டான்.
மாலதி, இவர் தான் மிஸ்டர் கண்ணன். இன்னிலேர்ந்து உன் பாஸ். கண்ணன், இவங்க தான் மாலதி, உங்க காரியதரிசி என்றார்.
குறைவாக பேசினாலும் மனதில் பட்டதை சட்டென்று தைரியமாக பேசக் கூடிய இளைஞன் கண்ணன்.
மன்னிக்கனும், மிஸ்டர் ராஜாராம், நான் காரியதரிசி வேண்டும்னு கேட்கலையே.
நீங்க கேட்கலை. ஆனால் இந்த பொஸிஷனுக்கு நம் நிறுவனம் காரியதரிச தரும் என்றார்.
ஆனா இவங்களால என் ஸ்பீடுக்கு வேலை செய்ய முடியாதே என்றான்.
அதுவரையில் பேசாமல் இருந்த பறவை சிறகை படபடவென அடித்தது. சார், என்ன சொல்றாரு இவர் என்றால் மாலதி.
நான் 100 வார்த்தைகள் ஒரு நிமிடத்தில் தட்டச்சு செய்வேன். மேலும் என்னுடைய சிந்தனைகளின் வேகத்திற்கு என்னால் தட்டச்சு செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் நான் என்ன அவுட்புட் விரும்பறேன்னு சொல்லி புரியவைக்கறதுக்குள்ள நான் என் வேலையை செஞ்சி முடிச்சிடுவேன். அதனாலே எனக்கு காரியதரிசி வேண்டாம் என்றான்.
மிஸ்டர் கண்ணன், நானும் 100 வார்த்தைகள் தட்டச்சு செய்தவள் தான். பள்ளி நாட்களிலேயே ஷார்ட்ஹாண்ட, டைப்பிங்க் மற்றும் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிச்சிருக்கேன், தெரியுமா என்றாள் காட்டமாக.
ஹா ஹா இரண்டு திறமைசாலிகளுக்கும் இடையில் முதல் சந்திப்பே மோதலா என்று ஆர்வமாக பார்த்தார் ராஜாராம்.
மன்னிக்கனும் மிஸ் மாலதி. உங்கள் திறமை மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், என் வேலைகளை நானே செய்து தான் எனக்கு பழக்கம் என்றான் கண்ணன் அமைதியாக.
சரி கண்ணன். இப்போதைக்கு மாலதி உங்கள் செகரெட்டரியாக இருக்கட்டும். விரைவில் அவங்களுக்கு சரியான துறையில் மாற்றம் தருகிறோம் என்று சொல்லி அகன்றார்.
பின்னால் தொடர்ந்து சென்ற மாலதி, என்ன சார், அவரு இவ்வளவு அலட்டலா இருக்காரு என்றாள்.
ஹா ஹா என்று சிரித்துவிட்டு உன்னிடம் பிறகு பேசுகிறேன் என்று சொல்லி விடைபெற்றார் ராஜாராம்.
தொடரும்....
Bookmarks