Page 1 of 8 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 85

Thread: கணினிக் காதல் - புதிய தொடர்கதை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17

    கணினிக் காதல் - புதிய தொடர்கதை

    கண்ணனுக்கு அந்த பெரிய கணினி நிறுவனத்தில் மேலாளர் வேலை. முதல் நாள் அலுவலகத்தில்.

    28 வயதில் மேலாளர் ஆனதே தாமதம் என்று நினைத்துக் கொண்டிருந்த அவனுக்கு அங்கிருந்த மற்ற மேலாளர்கள் எல்லாம் 35 வயது தாண்டியிருந்ததை பார்த்து ஒரு மன நிம்மதி.

    அவனகென்று தனியாக ஒரு அறை கொடுத்திருந்தார்கள். பின்னால் இருந்த ஷோகேஸில் தான் கொண்டுவந்திருந்து பொருட்களை அழகாக அடுக்கி வைத்தான். சிறிய கார்கள் எல்லா மாடல்கள். வெர்கோ என்று தன்னுடைய ராசி பெயரை கொண்ட பல வண்ண கோப்பைகள், சிறிய கிரிகெட் விளையாட்டு மைதானம், அதில் பொம்மை விளையாட்டு வீரர்கள். தன்னுடைய புகைப்படம், பெற்றோர்களின் புகைப்படம் என்று சில நிமிடங்களில் போரடிக்கு அலுவலக காபினை ஒரு பூங்காவாக மாற்றியிருந்தான்.

    கணினியில் நுழைந்து மின்னஞ்சலை திறந்து தன் நண்பர்களுக்கும் பெற்றோர்களுக்கும் புதிய வேலை, மற்றும் புதிய செல்பேசி எண், அலுவலக எண்கள் என்று அனைத்தையும் தட்டி விட்டு நிமிர்ந்த போது, ஒரு அழகு பதுமையுடன் அந்த நிறுவனத்தின் மனித வள மேலாளர் தன்னை நோக்கி வருவதை பார்த்தான். வாவ், என்று சொல்லிவிட்டு பிறகு கால் செண்டரில் காதலா வேண்டாமடா என்று சொல்லிக் கொண்டான்.

    உள்ள நுழைந்த ராஜாராம், ஹலோ கண்ணன், வாவ், உங்க காபினை கலர்பூஃல்லா மாத்திட்டீங்களே. பலே என்றான்.

    மெல்ல புன்னகைத்து அந்த பாராட்டை ஏற்றுக் கொண்டவன், யார் இந்த பெண் என்பது போல் நெற்றி புருவத்தை உயர்த்தினான். நீல சுடிதாரில் அழகாக இருந்தாள். மேல் பூச்சு எதுவுமில்லாத தமிழ் பெண். வட நாட்டின் கலாச்சாரம் உட்புகந்து சுடிதாரில் இருந்தாலும் சுடிதார் அணிந்தால் மேலே துப்பட்டாவும் போடவேண்டும் எனும் அளவுக்கு முழுவதும் நுழையாத கலாச்சாரம். நம்முடைய கலாச்சாரம் ஏர் டைட் தான் என்று மனதில் சொல்லிக் கொண்டான்.

    மாலதி, இவர் தான் மிஸ்டர் கண்ணன். இன்னிலேர்ந்து உன் பாஸ். கண்ணன், இவங்க தான் மாலதி, உங்க காரியதரிசி என்றார்.

    குறைவாக பேசினாலும் மனதில் பட்டதை சட்டென்று தைரியமாக பேசக் கூடிய இளைஞன் கண்ணன்.

    மன்னிக்கனும், மிஸ்டர் ராஜாராம், நான் காரியதரிசி வேண்டும்னு கேட்கலையே.

    நீங்க கேட்கலை. ஆனால் இந்த பொஸிஷனுக்கு நம் நிறுவனம் காரியதரிச தரும் என்றார்.

    ஆனா இவங்களால என் ஸ்பீடுக்கு வேலை செய்ய முடியாதே என்றான்.

    அதுவரையில் பேசாமல் இருந்த பறவை சிறகை படபடவென அடித்தது. சார், என்ன சொல்றாரு இவர் என்றால் மாலதி.

    நான் 100 வார்த்தைகள் ஒரு நிமிடத்தில் தட்டச்சு செய்வேன். மேலும் என்னுடைய சிந்தனைகளின் வேகத்திற்கு என்னால் தட்டச்சு செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் நான் என்ன அவுட்புட் விரும்பறேன்னு சொல்லி புரியவைக்கறதுக்குள்ள நான் என் வேலையை செஞ்சி முடிச்சிடுவேன். அதனாலே எனக்கு காரியதரிசி வேண்டாம் என்றான்.

    மிஸ்டர் கண்ணன், நானும் 100 வார்த்தைகள் தட்டச்சு செய்தவள் தான். பள்ளி நாட்களிலேயே ஷார்ட்ஹாண்ட, டைப்பிங்க் மற்றும் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிச்சிருக்கேன், தெரியுமா என்றாள் காட்டமாக.

    ஹா ஹா இரண்டு திறமைசாலிகளுக்கும் இடையில் முதல் சந்திப்பே மோதலா என்று ஆர்வமாக பார்த்தார் ராஜாராம்.

    மன்னிக்கனும் மிஸ் மாலதி. உங்கள் திறமை மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், என் வேலைகளை நானே செய்து தான் எனக்கு பழக்கம் என்றான் கண்ணன் அமைதியாக.

    சரி கண்ணன். இப்போதைக்கு மாலதி உங்கள் செகரெட்டரியாக இருக்கட்டும். விரைவில் அவங்களுக்கு சரியான துறையில் மாற்றம் தருகிறோம் என்று சொல்லி அகன்றார்.

    பின்னால் தொடர்ந்து சென்ற மாலதி, என்ன சார், அவரு இவ்வளவு அலட்டலா இருக்காரு என்றாள்.

    ஹா ஹா என்று சிரித்துவிட்டு உன்னிடம் பிறகு பேசுகிறேன் என்று சொல்லி விடைபெற்றார் ராஜாராம்.

    தொடரும்....
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஆகா... அசத்தலான தொடர்கதை ஒன்றின் ஆரம்பம்...
    தொடருங்கள்... தொடர்ந்தும் இணைந்திருப்பேன்...
    அளவான வர்ணனைகள், சிறப்பான, இயல்பான கதையின் போக்கு என்று
    ஆரம்பத்திலேயே நேர்த்தியாக உள்ளது...
    பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    சுவாரசியமாகவும் நன்றாகவும் உள்ளது. தயவுசெய்து விரைவாக அடுத்த பாகம் தரவும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    2

    மதிய இடைவெளியில் 11 மாடியில் இருக்கும் உணவகத்தை நோக்கி அனைவரும் படையெடுக்கும் வழக்கம். 2000 பேர் வேலை செய்யும் அந்த நிறுவனம் மதிய இடைவெளியில் திருவிழா கோலம் பூண்டிருக்கும்.

    மாறிவரும் கலாச்சாரத்திற்கு தகுந்த வாறு Food Court ஒன்று அமைத்து அனைத்து உணவு வகைகளுக்கும் ஒரு Stall தந்திருந்தனர்.

    என்ன தான் ஜீன்ஸ் பாண்டு அணிந்த கோக் குடித்துக் கொண்டு திரிந்தாலும் உணவு நேரத்தில் ஒருவனுடைய ஊரை சொல்லிவிடலாம். அதிகப்படியான கும்பல் நம் சங்கீதா சைவத்தில் படையெடுத்தது. கண்ணன் நேராக அந்த மேற்கத்திய உணவகத்திற்கு சென்று ஒரு சிக்கன் பர்கர், வித் டபுள் சீஸ், எஸ்ட்ரா மயோனீஸ் வித் கோக் என்று சொன்னான்.

    இரண்டடி தள்ளி இருந்த மேசையில் மாலதி தன் நண்பிகளுடன். இவன் கொடுத்த ஆர்டரை காதில் கேட்டவள், அதான் இத்தனை கொழுப்பு பாரேன். டபுள் சீஸான், எக்ஸ்ட்ரோ மயோனீஸான் என்றாள் நக்கலாக.

    உணவு பரிமாறுபவர், டயெட் கோக்கா சார் என்று கேட்க, இல்லை ரெகுலர் கோக் என்றான்.

    பார்ரா ரெகுலர் கோக்க வேற என்றாள் மாலதி மீண்டும்.

    சில நிமிடங்களில் அவன் கூறியவை தயாராக தட்டை எடுத்துக் கொண்டு தனியாக இருக்கும் ஒரு மேசையை நோக்கி நடந்தான். அவளை கடக்கும் போது, ஆனால் நான் தினமும் 20 கிலோ மீட்டரும் ஓடுகிறேன் மா'ம் என்று சிரித்தபடி சொல்லி நகர்ந்தான்.

    அவள் சட்டென்று நாக்கை கடித்துக் கொள்ள, நண்பி அவளை சத்தமாக பேசியதற்கு கோபித்துக் கொண்டாள்.

    தன்னுடைய இடத்திலிருந்து அவனை ஒரக்கண்ணால் பார்த்தாள் மாலதி. நல்ல உயரம், மாநிறம், ஸ்மார்ட்டாக தான் இருந்தான். ஆனால் இந்த கொழுப்பு அதிகம் தான் என்று நினைத்துக் கொண்டு தன் உணவின் ஊடே மீண்டும் அவனை பார்க்க முயல அவன் சரியாக இரண்டரை நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து எழுந்தான்.

    ஒரு மணி நேர லஞ்ச் நேரம். ஹாயாக சாப்பிடலாம் என்று பார்த்தால் இந்த பந்தா பார்ட்டி சீட்டுக்கு போகும் போலிருக்கே என்று நினைத்து, வரவேற்பாளினியின் எண்ணை தன் செல்பேசியில் டயல் செய்தாள்.

    ரிது, எனக்கு ஒரு புது பாசு வந்திருக்கே. அதான்பா அந்த அல்டாப்பு பேர்வழி, அது என் எக்ஸ்டன்ஷன்ல போன் செஞ்சா செய்யும். அதை என் மொபைல் நம்பருக்கு ஃபார்வெர்ட் செய்துடு என்றாள்.

    ஆனால் அவள் எதிர்பார்த்த மாதிரி எந்த போனும் வரவில்லை.

    மதிய உணவு முடிந்து நேராக அவனுடைய அறைக்குள் சென்று அமர்ந்தாள்.

    சில நிமிடங்கள் அவன் ஏதாவது பேசுவான் என்று காத்திருந்தவள், தானே பேசலாம் என்று நினைத்து, உங்களுக்கு சினிமா பாக்கற பழக்கம் உண்டா என்று கேட்டாள்.

    மன்னிக்கனும் மிஸ் மாலதி, அலுவலக நேரத்தில் பர்செனல் விஷயங்கள் பேசுவதை நான் விரும்பவில்லை என்றான் அமைதியாக.

    ரொம்ப தான் போ என்று நினைத்துக் கொண்டாள்.

    சரி எனக்கு ஏதாவது வேலை தாங்க என்றாள்.

    ம்ம் என்று யோசித்து விட்டு ஒரு கப்பூச்சினோ கொண்டு வாங்க என்றான்.

    டேய் காஃபி மிஷின் 10 அடி தூரத்தில தான் இருக்கு போய் எடுத்துக்கோ என்று சொல்லத் தோன்றியது. சரி எவ்வளவு தூரம் தான் போறான்னு பார்ப்போம் என்று மனதில் சொல்லிக் கொண்டு ஒரு கோப்பையில் காஃபி என்றே சொல்ல முடியாத அந்த வஸ்துவை கொண்டு வந்து அவன் முன்னால் வைத்தாள்.

    ரொம்ப நன்றி. நான் ஏதாவது வேலை இருந்தா கூப்பிடறேன். நீங்க உங்க சீட்டுக்கு போகலாம் என்றான்.

    போடா. அவனவன் என்கிட்டே பேசறதுக்கு தவமா இருக்கான். உன் முன்னாடி வந்து உட்கார்ந்தா பந்தா பண்றியா என்று நினைத்துக் கொண்டே கிளம்பினாள்.

    தொடரும்...
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    நன்றி அன்புரசிகன், அக்னி. என்னை எப்போதும் உற்சாகப்படுத்துபவர்களின் பட்டியலில் நீங்கள் இருப்பது மிகவும் ஊக்கத்தை தருகிறது. இந்த நேரத்தில் அமரன், ஷீ, ஓவியன், வாத்தியார், விராடன் அவர்களுக்கும் நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    கப்புச்சீனோ காபியா லியோ...
    சுவாரசியமாகப் போகிறதே அப்புறம்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #7
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் ஒரு அழகான பெண்ணின் மனதில் எப்படியான எண்ணங்கள் தோன்றும் என்ற ஊகமும் தோன்றக்கூடியவாறு கதை இருக்கிறது. தொடருங்கள். எதிர்பார்த்தபடி...........
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் ஒரு அழகான பெண்ணின் மனதில் எப்படியான எண்ணங்கள் தோன்றும் என்ற ஊகமும் தோன்றக்கூடியவாறு கதை இருக்கிறது. தொடருங்கள். எதிர்பார்த்தபடி...........
    என்ன ஆபீஸில் ஏதாவது படமோட்ட எண்ணமா..? இருக்கும் நாட்டை எண்ணி அடக்கமா, சமத்தா இருக்கோணும் சரியா...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தேர்ந்த எழுத்தாளரின் கதையை படிக்கும் சுகமே தனி.உங்கள் காட்சி விவரிப்பு,இயல்பான உரையாடல்கள்,கதையை கொண்டு செல்லும் பாங்கு அனைத்தும் அருமை மோகன். ஆவல் கூடுகிறது...தொடருங்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by அக்னி View Post
    என்ன ஆபீஸில் ஏதாவது படமோட்ட எண்ணமா..? இருக்கும் நாட்டை எண்ணி அடக்கமா, சமத்தா இருக்கோணும் சரியா...
    வோய்... நம்மள பாத்து எந்த அழகான பொண்ணும் கதைக்க விரும்பாது...

    அதை நிரூபிக்க முடியும்.

    நான் இதுவரை தினமும் மன்றம் வருகிறேன். யாரிடமும் போவதில்லையே...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    தேர்ந்த எழுத்தாளரின் கதையை படிக்கும் சுகமே தனி.உங்கள் காட்சி விவரிப்பு,இயல்பான உரையாடல்கள்,கதையை கொண்டு செல்லும் பாங்கு அனைத்தும் அருமை மோகன். ஆவல் கூடுகிறது...தொடருங்கள்.


    நன்றி சிவா அவர்களே.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    3


    வாரம் ஒன்றாகியும் அவனிடமிருந்து எந்த பணிக்கும் உதவி கேட்டு அழைப்பு வரவில்லை. மிகவும் சலித்துப்போன மாலதி நேராக மனித வள மேலாளரிடம் சென்று சார், எனக்கு வேலையே இல்லாம சம்பளம் தர உத்தசமா என்று கேட்டாள் காட்டமாக.

    ஏன் அப்படி சொல்றீங்க.

    பின்னே கண்ணன் தினமும் 9 மணிக்கு வர்றார். 6 மணிக்கு போயிடறார். நாலு நாளாவா என் உதவி தேவைபடாம இருக்கும். வெட்டியா 20,000 சம்பளம் வாங்கறதுல்ல எனக்கு உத்தேசம் இல்லை என்றாள்.

    பாருங்க மாலதி, நீங்க ஒரு திறமை சாலி. கண்ணன் மாதிரி ஆளுங்கிட்ட வேலை செஞ்சா தான் உங்க திறமை மெருகேரும். உங்களுக்கு தெரியாது. வந்த மூணாவது நாளே 45 லட்சத்திற்கு ஆர்டர் எடுத்திருக்காரு. நீங்க சொல்ற மாதிரி அவருக்கு 6 மணிக்கு போனாலும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் அமெரிக்கா எழுந்திருக்கற நேரத்திலேயும் வேலை செய்யறார். அவர் ரொம்ப ஸ்மார்ட்.உங்களை மத்தவங்க கிட்டே போட்டேன்னாலும் உங்களுக்கு போர் அடிக்கும். உங்க திறமைக்கும் வேகத்திற்கும் அவர் தான் சரியான ஆள்.


    இவர் என்ன எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாரா என்று மனதிற்குள் நக்கலடித்துவிட்டு நேராக கண்ணனின் அறைக்கு சென்றார்.

    மிஸ்டர் கண்ணன், நான் பணக்கார வீட்டுப்பொண்ணு. எனக்கு வேலை செஞ்சிதான் வீடு காப்பாத்தனும்னு அவசியம் இல்லை. ஆனாலும் என் திறமையை வீணடிக்கக்கூடாதுங்கறதுக்காக தான் வேலை செய்யறேன்.
    நான் பள்ளிக்கூடத்திலேர்ந்து காலேஜ் வரையில் கோல்ட் மெடிலிஸ்ட். அதனால என்னை குறைச்சி இடை போடாதீங்க. என் திறமைக்கு ஏத்த வேலை தாங்க. இல்லாட்டி புது வேலையா இருந்தா கத்துக் கொடுங்க. நிமிஷத்துல கத்துக்கறேன் என்று பொரிந்து தள்ளினாள்.

    இங்க பாருங்க என்று தன்னிடம் இருந்த எலெக்ட்ரானிக் உபகரணங்களை அவன் மேசை மேல் கொட்டினாள். மினிட் ரிக்கார்டர், வாய்ஸ் ரிக்கார்டர், பெண் ஸ்கானர் என்று நவீன காரியதரிசிக்கான பல சமாச்சாரங்களை வைத்திருந்தாள்.

    அதை பொறுக்கி மீண்டும் அவளுடைய கைப்பையில் வைத்தபடியே,

    ஹப்பா ஏன் இப்படி கோபமா இருக்கீங்க. கட்டாயம் உங்களுக்கு வேலை தர்றேன். இப்ப நீங்க உங்க சீட்டுக்கு போங்க என்றான். அவள் என்ன பர்ஃப்யூம் அணிந்திருக்கிறாள் என்று யூகிக்க முயன்றான். இது ஐஐஎம்மில் அவன் கற்றுக் கொண்ட விளையாட்டு. பெண்களின் வாசனை திரவியங்களை நுகர்ந்து பார்த்து அது எந்த நிறுவனத்தால் செய்தது என்று சொல்ல வேண்டும். அதை வைத்து ஒரு பெண்ணின் குணங்களையும் யூகிப்பார்கள்.

    சட்டென்று அங்கிருந்து விலகினாள். அவளுக்கு யாரோ நீ ஒன்னாங்கிளாஸ் என்று சொன்னது போல் ஒரு கோபம்.

    சரியாக ஒரு பத்து நிமிடத்தில் அவனிடமிருந்து அழைப்பு வந்தது.

    என்ன என்று கேட்டாள்.



    எனக்கு ஒரு ஜீனியஸ் டாப்லெட் பெண் மௌஸ் வேண்டும் வாங்கி தர்றீங்களா என்று கேட்டான் பவ்யமாக.

    எதுக்கு

    ப்ரோபோசல் அனுப்பறதுக்கு சில டிராயிங்க் வரையனும்

    மிஸ்டர் கண்ணன், இந்த வேலையாவது எனக்கு தரக்கூடாதா என்று கேட்டாள் சற்று கெஞ்சலாக.

    ஓகே. நீங்க என்ன பண்ணுங்க, இரண்டா வாங்கிடுங்க. அப்புறமாக நான் உங்களுக்கு டிராயிங்க் பண்ணறது சொல்லித் தரேன் என்றான்.

    அலுவலக கார் ஓட்டுனர் வெற்றியை அழைத்துக் கொண்டு ரிச்சி ஸ்ட்ரீடில் நுழைந்தாள். சென்னையின் கணினித்தெரு என்ற பெருமை ரிச்சிதெருவிற்கு உண்டு.

    அங்கிருந்து அவனுடைய செல் பேசியில் அழைத்தாள். கண்ணன், இங்கு ரெண்டு டைமென்ஷன்ஸ் இருக்கு. எது வேண்டும் என்றாள்.

    ரெண்டுத்திலேயும் இரண்டு இரண்டு வாங்கிடுங்க என்றான்.

    எனக்கு இரண்டு வாங்கறதுக்கு தான் அப்ரூவல் இருக்கு என்றாள் மாலதி.

    கவலைபடாதீங்க. மற்ற இரண்டுக்கு நான் காசு தரேன். உங்க கிட்டே இப்ப பணம் இருக்கா என்று கேட்டான்.

    20,000 சம்பாதிக்கறேன். என்கிட்டே இரண்டாயிரம் இருக்காதா. நான் என்ன பிச்சைக்காரின்னு நினைக்கிறானா என்று மனதில் நினைத்துக் கொண்டு, இருக்கு என்று சொல்லி துண்டித்தாள்.

    அவள் எதிர்பாராத விதமாக, 1800 தான் இருந்தது. கடன் அட்டையை தந்து அவற்றை வாங்கிக் கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்தாள்.

    அவள் தன் மடிக் கணினியை அவன் அறைக்கு எடுத்து செல்ல அவளுடைய கணினியில் மென்பொருட்களை ஏற்றி அந்த மௌஸை இயக்கச் செய்தான்.

    பிறகு ஒரு வெள்ளை காகித்ததை எடுத்துக் கொண்டு CVP, RVP, LVP என்று எழுதி, இவை Center Vanishing Point, Left Vanishing Point, Right Vanishing Point, இவை படங்களை வரைய முக்கியமானவை என்று விளக்கினான்.

    நொடிகளில் மாலதி அவனை காகிதத்தில் வரைந்து, நானும் ஓவியம் கற்றவள் தான் என்றாள் அவனை ஓங்கி அறைவது போல.

    பல அற்புதமான விஷயம். அழகாக வரைந்திருக்கிறீர்கள். நீங்கள் திறமைசாலி தான். ஆனால் ஒரு விஷயம். நான் 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் வேலை செய்பவன். உங்களை இரவில் தொந்தரவு செய்தால் பரவாயில்லையே என்றான், பிறகு நிறுத்தி, அலுவலக வேலைக்காக மட்டும்தான் என்று சொல்லி சிரித்தான்.

    பரவாயில்லையே இந்த அலட்டலுக்கு flirt செய்ய தெரிகிறதே என்று நினைத்துக் கொண்டாள்.

    வேலைக்காக நீங்க எப்ப வேண்டுமானாலும் போன் செய்யலாம் என்றாள் மாலதி.

    எதுக்காக இரண்டு செட் வாங்கிட்டு வர சொன்னீங்க என்றாள் சந்தேகத்துடன்.

    நீங்க உங்க வீட்டுக் கணினியில் ஒன்னு இணைச்சிடுங்க. இன்னொன்னு என்னோடு வீட்டுக்கு என்றான்.

    அப்பாடா இப்போதாவது வேலைக் கொடுத்தானே என்று நிம்மதி பெருமூச்சுடன் வெளியேறினாள் மாலதி. கண்ணன் அவள் வரைந்த ஓவியத்தை கையில் எடுத்து பார்த்துவிட்டு மனதில் அவளை பாராட்டினான்.

    தொடரும்....
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

Page 1 of 8 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •