என்ன மோன் சார் சிக்கரமா முடிக்கிற ஐடியாவா
இப்பவே இறுதிகட்டமாதிரி இருக்கு
தொடருங்கள்..........
என்ன மோன் சார் சிக்கரமா முடிக்கிற ஐடியாவா
இப்பவே இறுதிகட்டமாதிரி இருக்கு
தொடருங்கள்..........
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
மோகன்... சூப்பர்............. உங்க கையை கொடுங்க தலைவா....
அந்தமாதிரி போய்க்கிட்டிருக்கு...
தொடருங்க...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
யாராவது BP மாத்திரை இருந்தால் தாருங்களேன்...
இப்பவே உச்சத்திற்குப் போய்ட்ட்ட்டுது...
லியோ... தொடரலியோ...
விறுவிறுப்பான தொடர்...
காதல் தொடர்கதை ஒன்றில், திகில் கதையின் திக் திக் அனுபவம், எனக்கு புதிது என்றாலும், சுவாரசியமாக இருக்கின்றது...
வாழ்த்துக்கள்... தொடருங்கள்...
Last edited by அக்னி; 02-08-2007 at 04:47 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
10
அலுவலகம் விட்டு போகும் முன் என்ன ப்ளான் சாயங்காலம் என்று கேட்டான் மாலதியை பார்த்து.
ஒன்னுமில்லையே
8 மணிக்கு மீட் பண்ணலாமா
எனக்கு உடம்பு சரியில்லை வீட்டுக்கு போகனும். பொய்
ஓ என்னாச்சு.
ஒன்னுமில்லை தலைவலி தான்.
சரி டேக் கேர் என்று சொல்லி விடை பெற்றான். ப்ளீஸ் ப்ளீஸ் என்ற கெஞ்சலும் இல்லை கொஞ்சலும் இல்லை. இவன் என்னை காதலிக்கிறானாம்.
சரியாக 6.30 மணிக்கு எப்படி இருக்கு உடம்பு இப்ப என்று கவலையான ஒரு குறுந்தகவல் அவனிமிருந்து அவளுக்கு.
வாடா வாடா மச்சான் என்று சொல்லிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான். குளித்து முடித்து திரும்பி வரும் முன் 3 மிஸ்ட் கால். மேலும் ஒரு குறுந்தகவல். என்ன கோபமா என் மேல் என்று.
மறுபடியும் 7 மணிக்கு ஒரு போன். இன்னிக்கு என்னை விட மாட்டான் போலிருக்கே.
போனை எடுத்து சொல்லுங்க கண்ணன், ஏதாவது டிராயிங்க் பண்ணனுமா என்றாள் நக்கலாக.
இல்லை மாலதி உன்னை பாக்கனும் போல இருக்கு என்றான்.
அது தான் 6 மணி வரையிலும் பார்த்தீங்களே. நாளைக்கு காலையில் வேற பாக்கபோறீங்க என்றாள் விடாப்பிடியாக.
சரி ஓகே என்று போனை துண்டித்தான்.
மச்சானுக்கு காதல் தலையில் ஏறி பித்தாயிட்டான் போலிருக்கே. இவனை என்ன பண்ணலாம் என்று குழம்பி தவித்தாள்.
ஈகோ, காதல், கொள்கை, கூடவே பிறந்த திமிர் என்று அவளுடைய எல்லா குணங்களும் சேர்ந்து கோ-கோ விளையாடியது.
7.30
கண்ணன், நான் இப்ப பெட்டர். மீட் பண்ணலாம் என்றாள்.
வாவ். கிரேட். தாங்கஸ். எங்கே எப்போ என்று உற்சாக கூக்குரலிட்டான் கண்ணன், மறுபுறம்.
ரொம்ப ஆடாதே மாப்பிள்ளை மனக்குரல்
என்னை வந்து பிக்கப் பண்ணிக்கோங்க.
எங்கே இருக்கே
நுங்கம்பாக்கம்
எந்த ஏரியா
லேக் ஏரியா
கிராஸ்
தெர்ட் கிராஸ்
சரி 15 நிமிஷத்துல அங்கே இருப்பேன் என்றான்.
கண்ணாடி முன் நின்று ஏய் அழகி என்ன பண்ணலாம் இந்த அழகனை என்று கேட்டுக் கொண்டாள். பிம்பம் உள்ளுக்குள் சிரித்து வெளியே அழுதன.
என்னால் இவனை காதலனாக ஏத்துக்க முடியலை. இவனை நிறைய பிடிச்சிருக்கு. ஆனால்...
காரை அவள் முன் நிறுத்தி, இறங்கி சுற்றி வந்து கதவை திறந்து ஒரு மஹாராணியை போல் உள்ளே அமரவைத்தான்.
காதல் வந்துச்சோ
இல்லை
ஏன்
தெரியலை
என்ன முடிவெடுத்திருக்கே
டைம் வேணும்னு கேட்டது மத்தியானத்திலேர்ந்து சாயங்காலம் வரைக்கும் இல்லை. இன்னும் டைம் வேணும்
இப்ப எடுக்காத முடிவு எப்போ எடுக்க போறே.
ஒன்னு சொல்லுங்க கண்ணன். ஆபீஸ்ல பர்சனல் விஷயம் பேசக்கூடாதுன்னு நீங்க ஒரு கொள்கை வச்சிருக்கீங்களே. அதுபோல நான் ஒருவருக்கு முதல் காதலியா இருக்கனும் அப்படிங்கறது என் கொள்கை. கொள்கைகளை மாத்திகிட்டா அது கொள்கையே இல்லை.
அடி சக்கை பாயிண்டை பிடித்துவிட்டேன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
ம்ம். நியாயமான லாஜிக் தான் என்றான் அவளை பாராட்டுவது போல்.
வண்டியை அடையார் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தின் முன் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தனர் இருவரும்.
நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் மாலதி.
என்ன
இந்த வேலையை ராஜினாமா பண்ணிடலாம்னு
அவளுக்கு பகீர் என்றது. பெண்களுக்கு ஆண்கள் ஒரு பொம்மை பொருள் போலத்தான். விளையாட பொம்மை வேண்டும். ஆனால் அந்த பொம்மை தன்னை உரிமை கொண்டாடக்கூடாது. பொம்மைகென்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது. வித்தியாசமான சிந்தனைகள் தான். பிடிக்கும்போது எடுத்து விளையாடலாம். எப்போது பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பிடிக்கவில்லை என்றால் வேண்டாம். எப்போது பிடிக்காது என்று சொல்ல முடியாது.
அவள் அமைதியாக இருந்தாள். தான் பயந்ததை காட்டிக் கொள்ள விரும்பவில்லை.
உணவு வகைகளுக்கு ஆர்டர் தந்துவிட்டு மீண்டும் பேசினான்
புனேல ஒரு ஆஃபர் கிடைச்சிருக்கு
அப்ப முன்னாடியே வேலை தேட ஆரம்பிச்சிட்டீங்களா
இல்லை. தானா வந்தது
அப்ப எதுக்கு இப்ப காதலை சொன்னீங்க. நீங்க காதலை சொல்லிட்டு போயிடுவீங்க. நான் உங்க நினைப்பா இங்கே வாடணுமா
முட்டாள். காதலை சொல்லிட்டு டிரெயின் ஏற நான் என் சினிமா கதாநாயகனா. காதலுக்கு அடுத்த படி கல்யாணம் தானே.
ஓ அத்தனை வேகமா
பின்னே ஒருவனுடைய காதலை ஏற்ற பிறகு அவனை திருமணம் செஞ்சிக்கறதை தவிர வேற என்ன இருக்கு ஒரு பெண்ணுக்கு
இல்லை நிறைய இருக்கு
அப்படியா சொல்லேன் கேப்போம்
முதல்ல சில மாதங்கள் காதலிக்கனும். அதுக்கு நடுவில் ஒத்து வரலைன்னா காதல் கல்யாணம்ற படி ஏறாமலே கீழே இறங்கிடலாம் இல்லையா
இந்த காலத்தின் பெண்கள் ரொம் ஸ்மார்ட்டு தான்
அப்ப அந்த காலத்து பெண்களை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்
ஹா ஹா. அந்த காலத்தை பத்தி தெரியாது. சில வருடங்களுக்கு முன் அந்த காலம்னு இருந்தா காதல் ஒருத்தரோடையும் கல்யாணம் இன்னொருத்தரோடையும் பண்ணிக்கலாம். அதாவது காதல்ல பிரச்சனை வராட்டியும் கூட.
பார்த்தீங்களா கண்ணன். உங்களோட நினைவுகளை சித்ரா முழுக்க முழுக்க ஆக்ரமிச்சிருக்காங்க. என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்க என்னை தான் நினைச்சிட்டு இருக்கீங்கன்னு நான் எப்படி நம்பறது. எல்லா நிலையிலும் அவங்களோட கம்பேர் பண்ணி பார்த்துட்டு இருப்பீங்க.
ஓ ஷிட். என்று தன்னையே கடிந்துக் கொண்டான். எதை செய்யக்கூடாதென்று நினைத்தானோ அதை செய்தான். சித்ராவை பற்றி அவள் முன் பேசக்கூடாது என்று முடிவு செய்திருந்தான். முடியவில்லை. அவள் சொல்வத சரிதான். சித்ராவை மனதை விட்டு அகற்ற வேண்டும். அது எப்படி செய்ய முடியும். அதற்கு மாலதியின் உதவி தேவை. அவள் இல்லாவிட்டால் முடியாது.
மெதுவாக தன்னுடைய இருகைகளையும் எடுத்து அவளுடைய இரு கைகளையும் பிடித்தான். அவள் எதிர்க்கவில்லை.
மாலதி, உடம்புல ஊசி குத்திக்கிறோம். அது வலியும் குத்தலும் மறைஞ்சி போயிடறது இல்லையா என்றான்.
இல்லை கண்ணன். சித்ரா ஆணி மாதிரி உங்க மனசுல ஏறி இருக்காங்க. எடுத்தா அந்த இடத்துல ஒரு வடு வந்திடும்.
அந்த வடுவை மறைக்க தான் நீ வேண்டும் மாலதி.
சாரி கண்ணன் உங்க மனசுல படற மொதல் ஆணியா நான் இருக்கனும்.
ஏன் ஆணி அடிச்சி காயப்படுத்தனும்னு நினைக்கிறே
அவனுடைய இந்த கேள்வி அவள் மனதை பாதித்தது. பெண்கள் வெறும் ஆண்களின் மனதில் அடிக்கப்படும் ஆணிகள் தானோ. வலியையும் ஏற்படுத்தி, அதிலே நிலைத்து நின்று வலியை கொடுத்து, எடுக்கும் போதும் அதிகப்படியான வலியை ஏற்படுத்தி, சே, பெண்கள் இவ்வளவு மோசமான ஆயுதங்களா.
கண்ணன் எனக்கு குழப்பமா இருக்கு.
மாலதி, நான் சித்ராவை நேசிச்சது உண்மை தான். ஆனால் நான் அவளை இனி சொந்தம் கொண்டாடக் கூடாது. அது தப்பு. அவளை மட்டும் அல்ல அவளுடைய நினைவுகளையும் தான். ஆனா உன் மேலே எனக்கு வந்திருக்கறது ஒரு புது காதல். இது சித்ராவுக்கு மாத்தா இல்லை.
கண்ணன் நீங்க நல்லா பேசறீங்க.
அவன் அமைதியாக இருந்தான்.
ஒன்னு கேட்கட்டுமா உன்கிட்டே.
கேளுங்க
நான் உன்கிட்டே என் முதல் காதலை பத்தியும் சொல்லாம உன்னை காதலிக்கிறேன்னு சொல்லி, நீயும் அதை ஏத்துகிட்டு பிறகு நான் எப்பவும் சித்ராவை பத்தியே நினைச்சிகிட்டு இருந்தேன்னா பரவாயில்லையா உனக்கு.
இல்லை தான்
அப்புறம்
அவள் மௌனமானாள் இப்போது.
கண்ணன், நான் யாரையும் காதலிக்கலை. காதலிக்க போவதும் இல்லை. உங்களோட நான் சேராட்டா வீட்ல சொல்றவனை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.
நீங்க இந்த வேலையை எடுத்துக்காதீங்க. எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க.
அவள் ஈகோ செத்துப்போனது. பெண்மை பளபளத்தது.
நேரம் கொடுத்தா கொள்கையை மாத்திக் போறியா
இல்லை. ஆனால் உங்கள் மனசுலேர்ந்து சித்ரா முழுவதுமா போயிட்டாங்க அப்படிங்கற அளவுக்காவது எனக்கு நம்பிக்கை வரனும் இல்லையா.
அவன் கண்களை மூடிக் கொண்டான். இலக்கில்லாது பயணத்தில் மாட்டிக் கொண்டது போல ஒரு ஆயாசம் ஏற்பட்டது. இது நிறைவேற்போகும் காதல் இல்லை. முற்றிலும் புத்திசாலியான ஒரு பெண்ணுக்கு சொல்லி எதுவும் புரியவைக்க முடியாது. அவள் சொல்வது சரிதான். இந்த சித்ராவை முற்றிலும் அழிக்க வேண்டும் தன் மனதிலிருந்து. சாத்தியாமா. ஒருவேளை மாலதி அதிகம் எதிர்பார்க்கிறாளோ.
Last edited by leomohan; 02-08-2007 at 07:56 PM.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
11
ராஜாராம் நிறுவனத்தின் தலைமை அலுவலர் முன்பு அமர்ந்திருந்தார். சார், மாலதி ரொம்ப திறமையான பெண். அவர் கண்ணனுடன் வேலை செய்ய விரும்பறாங்க. ஆனால் கண்ணன் அவங்களை மத்த டிபார்ட்மென்டுக்கு கொடுத்தா நமக்கு நல்லதுன்னு சொல்றாங்க என்ன செய்யலாம்.
மாலதி, தட் ஸ்வீட் லிட்டில் கேர்ள் என்றார் சிஇஓ
ஆமாம்
வெல், ஐ வுட் லைக் டூ ஹாவ் ஹெர் என்றார் ராஜாராமை பார்த்து கண்ணடித்தபடியே.
அந்த வாக்கியத்தில் தொனித்த விரசத்தை ராஜாராம் ரசிக்கவில்லை. மாலதியை தன் பெண் மாதிரி நினைத்திருந்தார். மற்ற பெண்கள் போல் அனைவரிடமும் வயது வித்தியாசம் இல்லாமல் வழிந்து திரியும் பெண்ணல்ல அவள். பொழுதுபோக்கிற்காக வேலை செய்ய வந்து வேலை செய்யாமல் காலம் ஓட்டும் பெண்ணும் இல்லை அவள். அந்த விரசத்தை அவரால் ரசிக்க முடியவில்லை. அதை தெளிவாக காட்டியும் கொண்டார். அதை உணர்ந்த சிஇஓ, அவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு பேசுங்க இல்லைன்னா என்னோட மீட்டிங்க் அரேன்ஜ் பண்ணுங்க என்றார்.
நன்றி என்று சொல்லி விடை பெற்று வெளியேறினார். ப்ளடி வூமனைசர் என்று மனதில் சொல்லிக் கொண்டார்.
அரை மணியில் மாலதியும் கண்ணனும் அவர் முன்னால்.
மாலதி நீங்க என்ன சொல்றீங்க.
கண்ணன் சாருக்கிட்டே கத்துக் வேண்டியது நிறைய இருக்கு சார். அவருடைய வேகம், தெளிவான சிந்தனைகள், புதுமை, ஒரு வேலையை அணுகும் முறை இப்படி நிறைய. 4 கோடி ஆர்டர் எடுத்ததல என் பங்கும் இருக்குன்னு சொன்னது அவரோட பெருந்தன்மை. இன்னும் ஆறு மாதத்தில் 8 கோடி செய்வோம். அதனால் அவர் கூட வேலை செய்யவே எனக்கு விருப்பம் என்றாள். மெய்யான வார்த்தைகள். கண்ணன் சாராக மாறியது மட்டும் ராஜாராமுக்காக.
மாலதி நீங்க மிகுந்த திறமைசாலி. நீங்க என்கிட்டேர்ந்து என்ன கத்துக்கிட்டீங்களோ தெரியாது நான் உங்க கிட்டேர்ந்து கத்துக்கிட்டது தான் நிறைய. உங்களோட சேவை மற்றவர்களும் கிடைக்கும் என்பதே என் விருப்பம். மெய்யான வார்த்தைகள். நீங்க வாங்க என்று அவளை சொன்னது மட்டும் ராஜாராமுக்கா.
இப்படியாக 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு முடிவாக ஒரு வார்த்தை சொன்னார் அவர். கண்ணன் இன்னும் 3 மாசம் அவங்க உங்களோட வேலை செய்யட்டும். அப்புறம் முடிவு செய்யலாம். நீங்க போகலாம்.
நன்றி என்று கூறி வெளியேவந்தனர் இருவரும்.
மதிய உணவு இடைவேளையில், என்ன கண்ணன் கழற்றிவிட பார்த்தீங்களா. எப்படி பெவிக்கால் மாதிரி ஒட்டிக்கிட்டேன் பாருங்க என்றாள் வெற்றி களிப்போடு.
நல்லா ஒட்டிக்கோ. ஆபீஸ்ல மட்டுமில்லை வீட்டிலேயும் தான். அது தான் நான் விரும்பறேன் என்றான் காதலுடன்.
ரொம்ப ஆசை தான்
ஆசை தான். அதுக்கு தான் சொல்றேன்.
சரி சரி சாப்பிடுவோமா
எப்போ எனக்கு சமைச்சி போடறே
ஹா ஹா. ஓ அந்த வேலையெல்லாம் இருக்கா. அது முடியாதுப்பா. அப்படியே கல்யாணம் பண்ணிகிட்டாலும் நான் தொடர்ந்து வேலை செய்வேன். வீட்ல வேலைக்காரி தான்
ஹப்பா. அப்படியாவது கல்யாணத்தை பத்தி பேசறியே
சட்டென்று தான் பல படிகள் தாண்டிவிட்டதை உணர்ந்து நாக்கை கடித்துக் கொண்டாள். இந்த சகஜமான பேச்சு அவனை நிம்மதியடைய செய்தது. வெகு நாட்களுக்கு பிறகு அவனுடைய காதலில் அவனுக்கே நம்பிக்கை பிறந்து. நெருங்கிட்டடா என்று சொல்லிக் கொண்டான்.
சட்டென்று அவனுக்கு ஒரு யோசனையும் பிறந்தது. அவளிடம் விடை பெற்றுக் கொண்டு அவசரமாக வெளியேறினான். என்னாச்சு இவனுக்கு என்று யோசித்துக் கொண்டிருந்தாள் மாலதி. சில நிமிடங்களுக்கு முன் அவளுடைய பேச்சில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு அவளே வியந்தாள். கொள்கைகளை தாண்டி காதல் வளர்ந்திருந்தது. நான் கண்ணனை லவ் பண்றேனோ என்று கேட்டு ஆம் என்று அவளே பதிலும் சொல்லிக் கொண்டாள். பிறகு ஏதோ தப்பு செய்தது போல, இல்லை இல்லை இல்லை என்று சொல்லிக் கொண்டாள்.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
ரொம்ப நன்றாக போகிறது.... இப்போ இது காதலா இல்லையா என்பது தான் அவளுக்கு உள்ள குழப்பம்...
பார்ப்போம்.... தொடருங்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
12
நேராக வண்டியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்த ப்ரிவ்யூ தியேட்டரின் முன் நிறுத்தினான். அங்கு தான் அவனுடைய நண்பரின் தந்தை கலைவாணன் வேலை செய்கிறார்.
வணக்கம்
வாங்க வாங்க கம்யூட்டர் சார் வாங்க என்று அன்புடன் வரவேற்றார்.
என்ன எங்கள மாதிரி சினிமாக்காரங்களை தேடிக்கிட்டு திடீர்னு
சார் உங்களுக்கு தெரிஞ்ச நல்ல ஆர்டர் டிசைனர் இருந்தால் வேணும்
என்ன வேலை சொல்லுங்க முடிச்சிடுவோம்
கம்பெனியில வீடு கொடுத்திருக்காங்க. இன்டிரீயர் டிசைன் பண்றதுக்கும் 2 லட்சம் பணம் கொடுத்திருக்காங்க. அட பணமா கொடுங்கடான்னு சொன்னா இல்லை செலவு செஞ்சி அதுக்கான பில் கொடுத்தா தான் தருவோம்னு சொல்லிட்டாங்க. அதனால வீட்டை டிசைன் பண்ணலாம்னு உங்களை பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.
ஓ. சூப்பர் ஆளு இருக்காரு, டேய் வேலு, அந்த பரணி சாருக்கு போன் போடு. உங்க அட்ரெஸ் கொடுங்க சாயங்கலாம் 7 மணிக்கு உங்க வீட்ல இருப்பாரு
அவர் கொடுத்த காபியை குடித்துவிட்டு அவருக்கு நன்றி சொல்லி விடைபெற்றான்.
சரியாக ஏழு மணிக்கு பரணி உள்ளே நுழைந்தார். பல பிரபலமான படங்களில் கலை வேலைகள் புரிந்து பலருடைய வாழ்த்துக்களையும் பெற்றவர். எளிமையான மனிதர்.
கண்ணனின் வீட்டிற்குள் நுழைந்ததும் சார் சூப்பரா டிசை பண்ணயிருக்கீங்க வீட்டை. யார் சார் பண்ணது என்று கேட்டார்.
நானே தான் பண்ணேன்.
சூப்பர் சார். இந்த தீமை நான் அடுத்த படத்துல யூஸ் பண்ணிக்கப்போறேன். அப்படியே பழைய படம் பாக்கற மாதிரி இருக்கு. எல்லாமே கறுப்பு வெளுப்புல. தூள் கிளப்பிட்டீங்க.
சார் நீங்க பாராட்டனது போதும். இப்போது இந்த கறுப்பு-வெள்ளையால என் வாழ்கையே கறுப்பாயிடும் போல இருக்கு. இதை கலர்பூஃல்லா மாத்தி காட்டுங்க.
விடுங்க சார். கலர்பூஃல்லா ஆக்கறது எங்க கைவந்த கலை. ஆனா அதுக்கு முன்னாடி இந்த வீட்டை பல கோணங்கள்ல நான் போட்டோ எடுத்துகணும்.
தாராளமா சார் என்றான்.
அவர் தன்னுடைய டிஜிடல் காமிராவில் அந்த வீட்டை சேமித்துக் கொண்டார்.
பிறகு தான் கொண்டு வந்திருந்த புத்தகத்தை எடுத்து ஒவ்வொரு மாடலாக காண்பித்தார். அனைத்தும் பார்த்துவிட்டு நேராக 13 பக்கத்தை எடுத்து இந்த வீடுமாதிரி என்றான்.
ஓ தாராளமா செஞ்சிடலாம்.
எஸ்டிமேட்
தன் கால்குலேட்டரை எடுத்து சில எண்களை தட்டிவிட்டு 1.75 2.50 லட்சம் உள்ள ஆகும்
இரண்டுல முடிச்சிடுங்க. கம்பெனி அவ்வளவு தான் தரும்.
ஓ. நீங்க ஒரு வாரம் வேற வீட்டுல தங்குங்க. அப்புறம் வந்து பாருங்க உங்க வீடான்னு உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும்.
ரொம்ப தாங்கஸ்.
அட தாங்கஸெல்லாம் எதுக்கு. கலைவாணன் சாருக்காக நாங்க என்ன வேண்டுமானாலும் செய்வோம். சினிமாவுக்கு பண்றது வேஸ்டு சார். காசு கிடைக்குது அவ்வளவுதான். ஆனா எங்கள மாதிரி கலைஞர்களுக்கு நாங்க செஞ்சி கொடுத்ததுல மக்கள் வாழ்ந்தா தான் சார் சந்தோஷமே என்று உணர்ச்சிபட கூறி விடை பெற்றார்.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
13
வீட்டில் இருந்த புகைப்பட ஆல்பம்களை எடுத்து அதில் இருந்த சித்ராவின் புகைப்படங்களை கிழித்து குப்பையில் போட்டான்.
அவள் எழுதிய காதல் கடிதங்களை அவள் எரிக்க சொன்ன பிறகும் பல ஆண்டுகள் பாதுகாத்தவன் அதையும் ஸ்டவ் இயக்கி அப்பளம் பொரிப்பது போல் பொரித்து தள்ளினான்.
நோ ஸ்மாக்கிங் என்ற படத்தை இணையத்திலிருந்து எடுத்து ஸ்மாக்கிங் என்பதை மாற்றி நோ சித்ரா என்று செய்து கலர் ப்ரிண்டரில் பிரண்ட் செய்து எதிரே மாட்டினான்.
பழைய குப்பைகளை தேடி அவள் தந்த பரிசுகள் அவள் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் எடுத்து குப்பையில் போட்டான்.
மனம் லேசடைந்திருந்தது.
மறு நாள் அலுவலகத்தில் சென்றவுடன் சுத்தம் செய்யும் ஊழியரை அழைத்து ஒரு பெரிய குப்பை பை கொண்டு வாங்க என்று சொல்லி, அவன் அலங்கரித்து வைத்திருந்த அவள் தந்த அனைத்து பரிசுகளை, சிறிய கார் மாடல்கள், கோப்பைகள், பேனாக்கள் என்று முற்றிலும் சுத்தம் செய்தான்.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள் மாலதி. மிஷன் ரிமூவ் சித்ரா போயிக் கொண்டிருக்கின்றதா. பலே என்று நினைத்துக் கொண்டாள்.
மாலதியை உணவு இடைவெளியில் சந்தித்தான். மாலதி நான் ஒரு வாரம் பூனாவுக்கு போறேன் என்றான்.
பூனாவுக்கா என்ன திடீர்னு
அதுவா சும்மா பிரக் தான். ஹாலிடேஸ்.
என்ன வேலைக்கு சேரப்போறீங்களா
சீ பைத்தியம். நீ இல்லாத இடத்துல எனக்கென்ன வேலை
ரொம்ப வழியாதீங்க. எதுக்கு போறீங்க சொல்லுங்க
அதாம்பா சொன்னேன்ல. என் பிரெண்டு ஒருத்தன் இருக்கான். அவனை போய் பார்க்கலாமேன்னு தான்.
சரி. நம்பறேன் என்றாள்.
அவளுடைய கைகளை பிடித்து லேசாக அழுத்தியவாறே, என்னை மட்டும் நம்புமா என்றான்.
பார்க்கலாம் என்றாள் மாலதி, அலட்ச்சியமாக பேசுவது போல்.
புனே வந்தடைந்த கண்ணன் நண்பனின் வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்தான். பிறகு அருகில் இருந்த ராமகிருஷ்ணர் மடத்திற்கு சென்று தியானம் செய்தான். வரும்போது பல புத்தகங்களை அள்ளி வந்தான். அனைத்தும் மனதை ஒருங்கிணைப்பது, தியானம் செய்வது போன்ற தலைப்புகள்.
என்னடா சாமியாரா ஆகப்போறதா உத்தசமா என்றான்
ஹா ஹா. இல்லைடா. சாமியாரா ஆகாம இருக்கறதுக்காக தான் இதெல்லாம் என்றான்
என்னடா சொல்றே என்று வியப்புடன் கேட்டான் மதியழகன்.
மதி, ஐயாம் இன் லவ்டா.
அடப்பாவி மறுபடியுமா இத்தனை வருஷத்துக்கு அப்புறமா. டெல் மீ ஆல் அபவுட் இட்
கணினிக் காதலின் முதல் அத்தியாத்திலிருந்து அவளை நீலச்சுடிதாரில் பார்த்ததலிருந்து சென்ற அத்தியாயத்தில் பரணி வந்து சென்றது வரை அனைத்தையும் சொல்லி முடித்தான்.
டேய் உனக்கு ஏத்த ஆளுதான்டா அவ. ரொம்ப வித்தியாசமா இருக்கா. ரொம்ப வித்தியாசமா யோசிக்கிறா.. யூ ஸீம் டூ ஹாவ் பஃவுண்ட அ ரைட் சாய்ஸ் என்றான்.
ஆமான்டா நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
குட் என்று சொல்லி அவன் உறங்கச் செல்ல ஐ மிஸ் யூ லைக் அ ஹெல் என்று ஒரு குறுந்தகவல் அனுப்பிவிட்டு இவனும் உறங்கச் சென்றான் அவள் உறக்கத்தை கலைத்துவிட்டு.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
14
மறுநாள் அலுவலத்தில் அவனை காண முடியாது என்பதை அவளால் ஏற்க முடியவில்லை. மனம் அவனுடன் பேசத்துடிக்க கண்கள் அவனை பார்க்க துடித்தது. காதலிக்கிறோமா இல்லையா என்ற குழப்பத்தில் இருக்கும் நானே இப்படி தவிக்கிறேனே என்னை தெளிவாக காதலிக்கிறேன் என்று சொன்ன கண்ணனுக்கு எப்படி இருக்கும். அப்படி இருந்தும் ஏன் போன் செய்யவில்லை. ஒரே ஒரு எஸ்எம்எஸ் 36 மணி நேரத்தில் நியாயமா இது. எஸ்எம்எஸ் என்ன தங்க விலையிலா விற்கிறது. அது சரி, இல்லாட்டா ஒரு இமெயில். என்ன பண்றான் பூனேல. ஏதோ ரகசியமா செய்யறானா. நிஜமாகவே வேலையை விட்டுவிடுவானா. பூனே என்ன பெங்களூரோ போய் பார்ப்பதற்கு.
கணினியில் தன் நிறுவனத்தின் இன்டராநெட் தளத்திற்கு சென்று அலுவலகப் புகைப்படங்களில் அவன் இருக்கும் படங்களை தேடினாள். அவளுடைய மனம் எதிலும் லயிக்கவில்லை.
நீண்ட நேரம் யோசித்த பிறகு, இது மாதிரி முடிவில்லாமல் போவது தன் வாழ்கைக்கும் அவனுடைய வாழ்கைக்கும் சரியில்லை. நமக்கு இன்னும் 30 நாட்கள் கொடுத்துக் கொள்வோம். அதற்குள் முடிவுக்கு வராவிட்டால் காதல் இல்லை என்று முடிவு செய்து அவனுக்கும் தெரிவித்து தானும் நிம்மதியாக இருப்போம் என்று முடிவு செய்தாள்.
மூளையால் முடிவெடுக்கக்கூடியதா காதல். இதயம் என்று ஒன்றுக்கு வேலை இல்லையா. எல்லோரும் சித்ரா போலவா. மூளைக்கு மட்டும்தானே இரவு பகல். இதயத்திற்கு எல்லா நேரமும் ஒன்று தானே. மூளைக்கு மட்டும்தானே சரி-தவறு. இதயத்திற்கு எல்லாமே சரி தானே. மூளைக்கு மட்டும்தானே நல்லது கெட்டது. இதயத்திற்கு எல்லாமே நல்லது தானே. மூளைக்கு மட்டும்தானே கொள்கைகளும் கோட்பாடும் இதயத்திற்கு எல்லாமே அன்பும், பாசமும் நேசமும் தானே. மனிதவள பாடத்தில் சொல்லித்தரும் முதல் பாடம் இதயத்தால் யோசிக்காதீர்கள். மூளையால் யோசியங்கள். ஹா ஹா. அன்று இதயம் மட்டும்தான் யோசித்தது. மூளை யோசிப்பது போல் நடித்துக் கொண்டிருந்தது.
அந்த ஒரு வாரம் அவள் வாழ்கையில் மறக்கமுடியாத பாதிப்பு ஏற்படுத்தியிருந்தது. இடையில் அவன் பல முறை பேசினாலும் அது அவளை இன்னும் பலவீனப்படுத்தியிருந்தது. வெறும் நினைவுகளாக புகைப்படத்திலும் ஒலிநாடாக்களிலும் மட்டுமே கண்ணனை காணப்போகிறோமோ என்ற பயம் அவளை வாட்டி எடுத்தது. கண்ணனுடன் நான் இருந்த காலங்கள் தமிழ் திரைப்படம் அல்ல, அதை ஒலிநாடாவில் பதிவு செய்து பார்த்துக் கொள்ள. ரத்தமும், சதையும், வேர்வையும், மூச்சுக் காற்றும், வாசனையும், உடலின் சூடுகளும், அவன் பேசிய பேச்சுக்களும், அவனுடைய பார்வைகளும் இவை அனைத்தும் சேர்ந்த நிஜம். நூற்றுக்கு நூறு நிஜம்.
தளர்ந்து போய் தன்னுடைய அறையில் சாய்ந்தாள். அவன் ஊரில் இல்லாத போது தொலைகாட்சி பெட்டியையும் இயக்க தயங்கினாள். இன்னொரு கெட்ட செய்தி கேட்க அவள் மனம் தயாராக இல்லை. பெண்மை எல்லா நவநாகரீகங்களையும், புரட்சி சிந்தனைகளையும் தூக்கி சாப்பிட்டது.
நான் உனக்காக சமைக்க தயார். வேலை விடத் தயார். நீ என்ன சொன்னாலும் செய்யத் தயார். நீ திரும்பி வா. உன்னை அணைத்துக் கொள்கிறேன். உன் மடியில் எப்போதும் சாயந்துக் கொள்கிறேன். நீ கறுப்பு வெள்ளை டிவி பார்த்தாலும் பரவாயில்லை. ஆயிரம் சித்ராவை திருமணம் செய்துக் கொண்டாலும் பரவாயில்லை.
சே சே. நானா. நான் மாலதி. நான் இத்தனை பலவீனம் இல்லை. நான் புத்திசாலி, தைரியசாலி. சித்ரா இருந்தால் நான் இல்லை. நான் அவனை இன்னும் காதலிக்கவில்லை. காதலிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். என் இதயத்தால் அல்ல. என் மூளையால் முடிவெடுப்பேன்.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
15
பூனேயில் இருந்தபோது ஐஐடியின் அலுமினி தளத்திலிருந்து சித்ராவின் சமீபத்திய தொலைபேசி எண் தெரிந்துக் கொண்டான்.
சென்னை வந்ததும் அவளுக்கு போன் போட்டான். போனை எடுத்து அவளுடைய முதல் குழந்தை. மம்மி, வோன் என்றது இனிமையான மழலையில்.
ஹலோ
நான் கண்ணன் பேசறேன்
ஒரு நிமிடத்திற்கு மறுபுறம் அமைதி நிலவியது.
ஓ கண்ணன். சொல்லு. எப்படி இருக்கே
நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே
நான் நல்லா இருக்கேன்
போன் எடுத்தது உன் முதல் குழந்தையா
ஆமா
ஸ்வீட் வாய்ஸ்.
எப்படி இருக்கு மதர்ஹூட்
ஓ ரொம்ப நல்லா இருக்கு. குழந்தைகளுடைய சிரிப்பை பார்த்தால் உலகத்தில் வேறு எதுவும் வேண்டாம்னு தோணுது. மனதுக்கு ரொம்ப இதமாக இருக்க
ஆமாம். அது உண்மைதான். உன் ஹ்ஸ்பண்ட் எப்படியிருக்காரு
ஓ அவரு ஒரு ஜெம். என் மேலே உசிரே வைச்சிருக்காரு. வெளியூருக்கெல்லாம் வேலை விஷயமா போனாக்கூட என்னை கூடவே அழைச்சிகிட்டு போயிடறாரு.
நீ சந்தோஷமா இருக்கியா
ஆமாம். கண்ணன் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அவள் குரலில் நடுக்கம் தெரிந்தது.
நீ சந்தோஷமா இருக்கியா
இருக்கேன் சித்ரா. பட் இட் வாஸ் நாட் ஈஸி.
மறுபுறும் மீண்டும் அமைதி.
சித்ரா, நான் உங்க குடும்பத்தை பார்க்க வரலாம்னு இருக்கேன். உனக்கு ஓகேவா
ஓ வாயேன். தாராளமா. சொன்னாலே தவிர அது மிகவும் உறுதியான அழைப்பாக தெரியவில்லை.
சரி இந்த வாரம் வரேன். உன் ஹஸ்பெண்ட் என்னிக்கு வீட்ல இருப்பாருன்னு சொல்லு அப்ப வரேன்.
ஹா. அவர் இல்லாட்டா கூட வராலம் நீ.
அவர் இல்லாதபோதே வந்துவி்ட்டு போய்விடு என்று சொல்வது போல் இருந்தது.
இல்லை. உங்க பேமிலியோட பாக்கனும். மதியழகனை பார்த்தேன் அவன் சொன்னான் யூ ஹாவ் டு ப்யூட்டிபூஃல் கிட்ஸ் அப்படின்னு.
யாரு நம்ம குண்டு மதியா. முதல் முறையாக கல்லூரி காதல் பாஷையில் பேசினாள்.
ஹா ஹா. இப்ப அவன் ஸ்லிம் அண்ட் ஸ்மார்ட் தெரியுமா. மஹாராஷ்ட்ரியனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்ல தாத்ரே போத்ரேன்னு பேசிகிட்டு இருக்கான்.
உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா கண்ணன் என்றாள். அவள் குற்ற உணர்ச்சியுடன் பேசியது போல் இவனகுக்கு தோன்றினாலும், அவள் பரிவுடன் தான் பேசினாள்.
இவன் புறம் அமைதி.
நல்லா இருக்கியா கண்ணன்.
கண்கள் பனித்தன. வாய் உலர்ந்தது அவனுக்கு. அந்த நான்கு ஆண்டு அவளுடைய நினைவுகள் வந்து வறுத்தெடுத்தன அவனை. தியானம் யோகம் செய்த ஒருவாரம் டைம் மிஷினில் ரீவொயிண்ட் செய்தது போல வீணாக போனது. குரலை சீர்படுத்திக் கொண்டு பேசினான்.
கல்யாணம் ஆகலை சித்ரா. ஆனா நல்லா இருக்கப்போறேன் என்றான்.
என்ன இது விசித்திரமான பதில்.
நேர்ல பாக்கும் போது சொல்றேன் என்றான்.
அவளுக்கோ இவன் வீட்டில் வந்து பழைய கதை பேசக்கூடாதே என்ற பயம் வந்தது. ஆனால் அப்படி பேசும் ஆள் இல்லை என்பதும் அவளுடைய மூளை சொன்னது.
அவசியம் வா கண்ணன். எனக்கும் உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு. வர்ற சனிக்கிழமை ஆகாஷை வீட்டில் இருக்கச் சொல்றேன். லஞ்சுக்கு வா. அதாவது லஞ்சுக்கு முன்னாடியே வா, பேசிகிட்டு இருந்துட்டு சாப்பிட்டு போகலாம் என்றான்.
ஹா. மறக்காம உன்னோட ஸ்பெஷல் ராஜ்மா சாவல் பண்ணிடு என்றான்.
ஹா ஹா. ஆஃப் கோர்ஸ் என்று இணைப்பை துண்டித்தாள்.
அவன் மனம் லேசடைந்தது. என்ன பேசவேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று மீண்டும் மனத்திரையில் ஓட்டினான். இழந்த ஒரு வார யோகம், தியானத்தின் பலன் மீண்டும் வந்தது. ரெட் புல் குடித்தது போல உயிர்த்தெழுந்தான்.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
கதை 15 அத்தியாயங்கள் தாண்டியும் கதையின் விறுவிறுப்பும் குறையவில்லை...
எமது எதிர்பார்ப்பும் குறையவில்லை...
உங்கள் எழுத்துத் திறமை அமோக வரம்...
தொடருங்கள்...
வாழ்த்துக்கள்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
மீண்டும் மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள். அக்னி கூறியது போல் இன்னமும் விறுவிறுப்புக்குறையவில்லை...
தொடருங்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks