வழக்கம் போல் அருமையான படைப்பு. நெடு நாட்களுக்குபின் மன்றம் பக்கம் தலை வைக்க வாய்ப்பு கடைத்துள்ளது எனக்கு.
வழக்கம் போல் அருமையான படைப்பு. நெடு நாட்களுக்குபின் மன்றம் பக்கம் தலை வைக்க வாய்ப்பு கடைத்துள்ளது எனக்கு.
நன்றி சதீஷ்ராகவன். நன்றி அன்புரசிகன்.
இதோ அடுத்த பாகங்கள் இன்று....
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
விறுவிறுப்பாக செல்கிறது கதை.தொடருங்கள் மோகன் பாராட்டுக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
7
இரண்டு நாட்களுக்கு அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை. போன் எடுக்க வில்லை. இறந்தவர்களின் பட்டியலில் அவன் பெயர் இல்லை. என்ன ஆனான் என்று நிறுவனமே பதைபதைத்தது.
அதிகம் அரண்டவள் மாலதி தான். துடித்து போய்விட்டாள். மூன்றாவது நாள் சரியாக 9 மணிக்கு தென்பட்டான் கண்ணன்.
அவன் வந்ததை பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டாள். இருந்தாலும் உடனே ஓடிப்போய் பார்க்கவில்லை. வேலை நேரத்தில் பர்சனல் விஷயமா என்று அலட்டுவான். எதற்கு வம்பு. இடைவெளியில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.
சரியாக 12.30 மணிக்கு அவன் உணகவகம் நோக்கி போவதை பார்த்தாள். தானும் பின் தொடர்ந்தாள்.
மேசையில் அவன் அமரும் வரை காத்திருந்தாள். உணவகத்தில் அதிக கூட்டமில்லை.
என்ன கண்ணன். என்னாச்சு உங்களுக்கு. நாங்கெல்லாம் பயந்து போயிட்டோம். போனை எடுக்கலை. போன் பண்ணலை என்ன நினைச்சிகிட்டு இருக்கீங்க மனசுல.
என்னாச்சு மாலதி ஏன் இப்படி டென்ஷனாகறீங்க.
டென்ஷனா பெங்களூர் ப்ளாஸ்ட்ல உங்களுக்கு ஏதோ ஆச்சுன்னு பயந்துகிட்டு இருந்தோம். போன் ஏன் எடுக்கலை நீங்க.
மாலதி, முதல்ல ப்ளைட்லே இருக்கும் போது கால் பண்ணியிருந்தா எடுத்திருக்க மாட்டேன். அப்புறம் வெளியே வந்ததும் இந்த ப்ளாஸ்ட் விவகாரத்துல நான் ஆன் பண்ண மறுந்துட்டேன். அப்புறம் நேரா ஹாஸ்பிடலுக்கு போனேன். அங்க மொபைல் சிக்னல் ஜாமர் வைச்சிருந்தாங்க. அதனால போன் எடுக்காம இருந்திருக்கலாம். அப்புறம் ப்ளட் கொடுத்துட்டு என் நண்பன் பக்கதுலே இருந்தேன். சரியா சாப்பிடலை தூங்கலை. அவன் கண் முழுச்ச பிறகு தான் நான் வர முடிஞ்சுது. இடையே இடையே வெளியே வந்தபோது என் போன் ஆன்ல தான் இருந்தது. நீங்கெல்லாம் இப்படி என்னை பத்தி பயந்துட்டீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் கட்டாயம் போன் பண்ணி நான் சேஃப் அப்படின்னு சொல்லியிருப்பேன். சாரி என்று சொல்லி முடித்தான்.
அவள் முகத்தில் கடுகடுப்பு குறையாமல் இருந்தாள்.
நான் தான் சாரி சொல்லிட்டேனே என்று கூறியவாறு தன் இடது கையால் அவள் இடது கையை பிடித்தான்.
ஐயோ இவன் காதலிக்கி ஆரம்பித்துவிட்டானோ. ஐயோ இந்த ரொமான்டிக் லுக் ஏன் விடுகிறான் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது
நாலு வருஷத்ல முதல் முறையா என்னை பத்தி கவலை பட ஒரு உயிர் என்று நாதழுத்தான்.
ஐயோ இது காதலே தான். பிரச்சனை ஆயிடுத்தே என்று நினைத்துக் கொண்டே கைகளை விடுவித்துக் கொண்டாள்.
மனதில் பெரிய போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது. இவன் ஈகோ பிடிச்சவன். காதலிக்கிறேன்னு சொல்லமாட்டான். ஆனால் சொல்லிட்டானா அதை ஏத்துக்கறதா வேண்டாமான்னு தெரியலையே என்று தன்னிடமே சொல்லிக் கொண்டாள்.
அடுத்த சில நாட்களில் Performance Appraisal நடைபெற இவளை ஒரு முறைகூட சந்திக்காமல் She is Fantastic என்று எழுதி அனுப்பினான் மனிதவள துறைக்கு. அவளை பாராட்டி அவளுக்கு 2300 ரூபாய் சம்பள உயர்வும் கிடைத்தது. அவளை வெகுவாக பாராட்டி தள்ளினார் மனித வள மேலாளர்.
அன்று அவனுக்கு விடுமுறை தந்திருந்தார்கள். ஊழியர்களின் பிறந்தநாளுக்கு அவர்கள் வீட்டுக் பூங்கொத்து அனுப்பவதும், விடுமுறை கொடுத்து அன்று ஆகும் விருந்து செலவுகள் இருவருக்கு நிறுவனம் ஏற்றுக் கொள்வதுமாக மேலும் ஒரு சலுகை இருந்திருந்தது.
சரி மாலையில் அவன் வீட்டிற்கு சென்று பிறந்த நாளுக்கு வாழ்த்தி விட்டு தன் சம்பள உயர்வுக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு வரலாம் என்று அவன் வீட்டை சென்று அடைந்தாள் மாலதி.
ஜம்மென்று தயாராகி உட்கார்ந்திருந்தவன், ஏய் நீ வந்தது நல்லதா போச்சு, ஆபீஸ்ல ரெண்டு பேருக்கு டின்னர் ஆஃபர் இருக்கு நீயும் வர்றியா என்று கேட்டான்.
ஓஹோ தாராளமா என்று சொல்லி பிறந்த நாள் வாழ்த்து தெரிவுத்து தன்னுடைய சம்பள உயர்வுக்கு நன்றி சொன்னாள்.
ஹே யூ டிஸர்வ் இட். நான் உனக்கு எந்த உபகாரமும் செய்யலை. உன்னை மாதிரி மின்னல் காரியதரிசகள் இருந்தால் வேலைகள் சுலபமாக சரியாக சரியான நேரத்தில் முடியும் என்று வாய் நிறைய பாராட்டினான்.
அப்படி வாடா வழிக்கு என்று தன் தோளை தட்டிக் கொண்டாள் மாலதி.
ஒரு பிரச்சனை. நான் இந்த டிரெஸ்ல எப்படி வர்றது என்றாள்.
கவலை வேண்டாம், வழியில் புது டிரெஸ் வாங்கிக்கலாம் என்றான்.
ஹாய் சூப்பர் என்று குழந்தையின் குதுகலத்துடன் அவனுடைய வண்டியில் ஏறி அமர்ந்தாள். வண்டி லைஃப் ஸ்டைலில் நிற்க அவனுடைய உடைகளுக்கு ஏற்ற வாரு ஒரு பளப்பள உடையை தேர்ந்தெடுத்துக் கொண்டு அவனுடன் இணைந்து நடந்தாள்.
நீ ரொம்ப அழகா இருக்கே இன்னிக்கு என்றான்.
தாங்கஸ். என்ன இன்னிக்கு ஒரு புகழ் மாலை என்று நினைத்துக் கொண்டாள்.
அந்த இனிமையான பின்னனி இசையில் மணக்கும் உயர்தர உணவகத்தில் பெயர் தெரியாத பல உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு அவளை பார்த்தான் கண்ணன்.
ஹேய் நான் இன்னிக்கு சில திங்க்ஸ் வாங்கினேன் என்றான்.
என்ன
ஒரு சிவப்பு நிற காரம் காயின். ஒரு கலர் டிவி என்றான்.
வாவ். கலர் வந்துட்டுதா வாழ்கையில என்று கேட்டாள். ஆமா ஒன்னு சொல்லுங்க வீட்ல எல்லாத்தையும் ப்ளாக் அண்ட் வொயிட்ல வெச்சிகிட்டு ஆபீஸ்ல மட்டும் உங்க காபினை அத்தனை கலர்பூஃல்லா வச்சிருக்கீங்க.
அதெல்லாம் சித்ரா வாங்கி கொடுத்தது. அதையெல்லாம் பேசி மூட் அவுட் பண்ணாதே என்றான்.
சரி. உங்க லைஃப்ல திடீர்னு வண்ணங்கள் வலம் வர என்ன காரணமோ என்று கேட்டாள்.
நீ தான் என்றான் ஒற்றை வார்த்தையில்.
ஐயோ. சொல்லிட்டானே. என்ன வம்புடா இது. நம்ம கொள்கை விளக்கம் எடுத்து விடலாமா என்றெல்லாம் குழப்பத்தில் சங்கடமாக சிரித்தாள்.
நீ வந்த பிறகு தான் பல மாற்றங்களை உணர்ரேன் என்றான்.
இப்ப வரபோவுதே அந்த மூன்றெழுத்து கெட்டவார்த்தை சிஷ்யா என்று நினைத்துக் கொண்டாள்.
ஹேய் நான் உனக்காக ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்.
போச்சுடா சாமி. அது மோதிரம் தான். போச்சி போச்சி இன்னிக்கு பிரபோஸ் பண்ணி தொலைக்கப்போறான். நான் திருதிருன்னு முழிக்கப்போறேன். அது மைன்ட் வாய்ஸ்தான்.
தன் கோட்டுப்பையில் இருந்து ஒரு பேனாவை எடுத்தான்.
சே பேனாவா. இவன் டேஸ்டே தனி தான். அப்ப பயந்த மாதிரி ஒன்னும் இல்லை என்ற நினைத்துக் கொண்டே என்ன பேனாவா என்றாள்.
ஹா ஹா பேனா இல்லை என்று சொல்லிக் கொண்டே அதன் உள்ளே மடித்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடியை எடுத்தான்.
மாலதி, உன் கான்டாக்ட் லென்ஸை எடுத்துட்டு இந்த கண்ணாடியை போட்டுக்கோ. லென்ஸ் கண்ணுக்கு நல்லதில்லை. அது மட்டுமில்லாமல் கண்ணாடியில் நீ இன்னும் இயற்கையா அழகா இருப்பே.
டோய் நீல சாயம் வெளுத்துப்போச்சி. நான் காண்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கறது இவனுக்கு எப்படி தெரியும். கேட்டே விட்டாள்.
ஹா ஹா. அன்னிக்கு வீட்ல போட்டோ எடுத்தேன் இல்லையா. அதுல கண் பக்கம் இருந்த வேரியேஷன் வைச்சி கண்டுபிடிச்சேன்
ரொம்ப ஸ்மார்ட்டு தான் என்று நினைத்துக் கொண்டாள்.
ஏய் நான் போஸ்ச் அ லோம்ப்ஸ யூஸ் பண்றேன் பா. நல்ல விலை உயர்ந்த லென்ஸ் என்றாள்.
நீ இதை போட்டுப்பாரேன் என்றான்.
அவள் அதை எடுத்து போட்டுக் கொண்டு இடது புறம் சுவற்றில் இருந்த கண்ணாடியை பார்த்தாள். எனக்கும் அவனுக்கும் 5 வயது வித்தியாசம். ஆனாலும் நான் கண்ணாடி போட்டதில் அவன் வயதுக்கு ஒத்தமாதிரியோ இல்லை அவனை விட வயதானவள் மாதிரியோ தெரியலையே என்று அவன் தேர்வை நினைத்து பாராட்டினாள்.
காலம் மேலும் எந்த சங்கடங்களையும் அந்த காதலுக்கு ஏற்படுத்தாமல் அப்படியே விட்டது அன்று.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
சூப்பர்...கலக்குங்க மோகன்..
சீக்கிரம் அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..
நன்றி மதி.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
கதை மிகவும் அருமை.. யாதார்த்தமான நடை.. வாழ்த்துக்கள்..
நீன்ட நாட்களுக்கு பிறகு தொடங்கிய கதை அருமை தொடர்ந்து தாருங்கள் நன்றி மோகன் சார்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
8
அடுத்த நாள் ஆர்வம் மிகுதியால் மனிதவள மேலாளரின் கணினியில் புகுந்து நோண்டினாள்.
பெயர் கண்ணன்
தந்தை பெயர் ராசப்பன்
படிப்பு ஐஐடி, ஐஐஎம் அகமதாபாத் - ஓ அங்கிருந்து தான் வந்தது இந்த அலட்டல் எல்லாம்
வேலை முதல் வேலையில் நான்கு வருடம். வேலை விடும்போது சேர்ந்ததை விட பண்ணிரண்டு மடங்கு சம்பள உயர்வு. பிறகு இங்கு சேர்ந்ததும் அதைவிட இரண்டு மடங்கு
பொழுதுபோக்கு காரம், கிரிகெட்
சாதனைகள் புத்தகம் எழுதியது, ஜனாதிபதி பரிசு, மனிதவளத்தை மேன்படுத்துவது எப்படி என்ற கட்டுரை டைமஸ் பத்திரிக்கையில் பிரசுரம்
பலே. அது தான் கத்துக்குட்டிங்க மாதிரி காதலை சொல்லி கன்ஃப்யூஸ் பண்ணாம கண்ணாடி தந்து அசத்திட்டானா. சரிதான்.
அலுவலகத்தில் அன்று எல்லா நண்பிகளும் அவள் கண்ணாடியின் அழகையும் அதை போட்டுக் கொண்டதால் மெருகேறிய அவளுடைய அழகையும் புகழ்ந்து தள்ளினார்கள். ஆண்கள் வந்த ஹிஹி என்று மேசையில் ஜொள்ளு தெளிக்க வழிந்து சென்றார்கள்.
அன்று மதியம் ஒரு சிறிய கூட்டம் கான்பிரன்ஸ் ரூமில் கூடியது. வந்த 6 மாதங்களில் 4 கோடி ஆர்டர் வாங்கி அசத்திய கண்ணனுக்கு பதவி உயர்வு அறிவித்தார்கள். பொது மேலாளராக பதவி உயர்வு. மேலும் ப்ரீதா எனும் இன்னொரு காரியதரிசி உள்நாட்டு வேலைகளில் அவனுக்கு உதவும் மாலதி நிறுவனத்தின் வெளிநாட்டு வேலைகளில் உதவும் நியமித்திருந்தார்கள். மற்ற தொப்பைகளுக்கு என்னடா இவன் வளர்ச்சி அதிகமா இருக்கே என்று எண்ணி சட்டை ஆஸ்திரேலியா வரைபடம் போல் கருகியிருந்தன.
எழுந்து நின்று அனைவருக்கும் நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டான். பேச்சு அதிகமா இல்லாததால் செயலில் தான் தம் சக்தியை காட்ட முடியும் என்று சிலர் நினைப்பது சகஜம் தானே.
நேராக சென்று அவனை வாழ்த்தினாள்.
நன்றி மாலதி. இன்னிக்கு சாயங்காலம் என் வீட்ல ஒரு ஸ்பெஷல் ட்ரீட் உனக்கு என்றான்.
அப்படியா என்ன ஸ்பெஷல். வா சொல்றேன் என்றுவிட்டு விடை பெற்றான்.
மாலை சகஜமாக வீட்டினுள் நுழைந்தாள் மாலதி. எப்போது காதலை சொல்லி குழப்புவானோ என்ற பயம் இல்லை அவளுக்கு. காரணம் பல வாய்ப்புகள் கிடைத்தும் அவன் அந்த அபாயாக கோட்டை கடக்கவில்லை.
மறுபடியும் அனைத்தும் வித்தியாசமான உணவு வகைகள். வீட்டினுள் பல நிற மாற்றங்கள்.
சாப்பிட்டுவிட்டு ஷாம்பெயின் பாட்டிலை உடைத்தான்.
கோப்பைகளில் ஊற்றி அவளுக்கும் கொடுத்து டோஸ்டு டூ மை லவ் என்றான். சங்கடமாக நெளிந்தாள்.
அவள் சற்றும் எதிர்பாராத விதமாக மே ஐ ஹக் யூ என்று கேட்டான். அவள் பதில் சொல்வதற்கு முன் அவளை அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டான். வேகமாக அவன் உதடுகள் அவள் உதடுகளை நோக்கி செல்ல, சட்டென்று விலகிக் கொண்டாள். தன் கொள்கை விளக்கம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது போலும் என்று மனதில் நினைத்துக் கொண்டே
கண்ணன், என்ன இது
ஏன் மாலதி. உனக்கு என்னை பிடிக்கலை
நிறைய பிடிச்சிருக்கு.
நான் உன்னை காதலிக்கிறேன்னு நினைக்கிறேன் மாலதி. நீ....
கண்ணன். நீங்க ஒரு அருமையான மனிதர். ஒருவேளை நான் உங்களை தான் காதலிச்சிருப்பேன்னு நினைக்கிறேன். ஆனா நான் காதலிக்கறவருக்கு நான் முதல் காதலா இருக்கனும்னு தான் நான் விரும்பறேன். இது என்னோட கொள்கையும் கூட. ஒருவேளை நீங்கள் உங்கள் முதல் காதலை சொல்லாம இருந்திருந்தா இப்ப நிலைமை வேற மாதிரியா இருந்திருக்கலாம் என்றாள்.
அப்ப உண்மை பேசினதுக்கு இது தான் தண்டனையா
இல்லை கண்ணன். ஒருவேளை நீங்க உண்மை பேசாம இருந்திருக்கனுமோன்னு நினைக்கிறேன்.
என்ன சொல்ல வரே நீ
என்னை மன்னிச்சிடுங்க கண்ணன். உங்களுக்கும் எனக்கும் நடுவில் சித்ராங்கற பெரிய தடுப்பு சுவர் உருவாயிடுத்து
சித்ரா இப்ப எங்கேயுமே இல்லை மாலதி. டோன்டு பீ ஸ்டுபிட்
ஐ வுட் பிரிஃபர் டூ பீ அ ஸ்டுபிட் ராதர் தான் பீயிங் ப்ளையின்ட். சித்ரா உங்க மேல எத்தனை ஆதிக்கம் செலுத்தியிருக்கான்னு நீங்க இந்து நான்கு வருஷம் வாழ்ந்த வாழ்கை பார்த்து நான் தெரிஞ்சிகிட்டேன். நான் வரேன் என்று சொல்லி விடை பெற்றாள்.
Last edited by leomohan; 02-08-2007 at 03:03 PM.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
என் மோகன் சார் கவுத்துடிங்க
தொடருங்கள் வித்தியாசமாக எழுதுவது உங்கள் நடை
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
நன்றி மனோஜ், நன்றி சன்ப்ளவர் அவர்களே.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
9
அடுத்த இரண்டு நாட்களும் அவளுக்கு அவன் வேலை எதுவும் தரவில்லை. அவளும் போய் என்ன என்று கேட்கவில்லை. ஆனால் அவன் ப்ரீதாவுக்கு வேலை தருவது கடுப்பாக இருந்தது. இதெல்லாம் பழைய டெக்னிக்குடா மச்சி. இதுமாரியெல்லாம் பண்ணா நான் பொஸஸிவாகி உன்னை லவ் பண்ணுவேன்னு நினைக்கிறியா என்று சொல்லிக் கொண்டாள்
மதியம் ராஜாராம் அழைத்து ஒரு கடிதத்தை காட்டினார். மின்னஞ்சலில் கண்ணன் அவருக்கு எழுதியிருந்த கடிதம்.
அன்புள்ள ராஜாராம்,
மாலதியின் திறமை மற்ற துறைகளுக்கும் பயன்பட வேண்டும். அதனால் அவளை வேறு துறைக்கு மாற்றினால் நான் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டேன். அவர் எங்கு வேலை செய்தாலும் அதனால் அவளுடைய மேலாளருக்கு மிகவும் பயனளிப்பார் என்று நான் நம்புகிறேன்.
கண்ணன்.
படித்ததும் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாள். முதலில் வேறு பெண்ணுடன் பேசும் திட்டம். இப்போது தன்னை தவிர்க்கும் திட்டமா. சே இப்படியெல்லாம் கீழே இறங்கி போகனும் இவன் என் காதலை பெற.
சொல்லு மாலதி. உனக்கு எந்த துறைக்கு போகனும்னு.
நான் யோசிச்சு சொல்றேன் சார் என்று சொல்லிவிட்டு அந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு நேராக கண்ணனுடைய காபினுக்கு சென்று அதை மேசையின் மீது தூக்கி எறிந்தாள்.
இது என்ன கண்ணன். ஏன் இப்படி செய்தீங்க. நான் உங்கள் காதலை ஏத்துக்கலைன்னு தானே என்றாள் காட்டமாக.
அமைதியாக படித்துவிட்டு சிரித்தான். இல்லை சின்னப்பெண்ணே.
இந்த சமாளிக்கறதெல்லாம் வேண்டாம். இரண்டு நாளா எனக்கு வேலை தரலை. நான் அன்னிக்கு உங்க வீட்டுக்கு வந்துட்டு போன பிறகு தான் இந்த மெயிலை எழுதியிருக்கீங்க என்றாள்.
ஹா ஹா என்று சிரித்தான். அவளுக்கு கடுப்பாக இருந்தது.
முதல்ல ஒரு விஷயம். நான் ஏற்கனவே உன்னை வேறு டிபார்ட்மென்டுக்கு சிபாரிசு செஞ்சிட்டதாலே புதுசா எந்த வேலையும் கொடுக்கலை.
இரண்டாவது, இங்கே பாரு என்று தன் மடிக்கணினியை திருப்பி, அவனுடைய பிறந்த நாளுக்கு முன் அவன் ராஜாராமுக்கு எழுதிய அஞ்சலை காட்டினான்.
அன்புள்ள ராஜாராமுக்கு,
திறமையாக நிர்வகிக்கப்படும் உங்கள் நிறுவனத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய துறையின் வெற்றிக்கு நான் மட்டுமே காரணம் என்றால் அது சுயநலமாகிவிடும்.
ஆரம்பத்தில் நீங்கள் காரியதரிசி தந்தீர்கள். காரியதரியின் முக்கியத்துவமும் இப்போது தான் உணர்ந்தேன். உண்மையில் நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
மாலதி மிகவும் திறமைசாலி. முதலில் நான் சொன்ன வேலைகளை திறமையாக செய்து வந்தவர் தற்போது என்னுடைய வேலைகளையும் செய்ய துவங்கி மிகவும் திறம்பட செய்துவருகிறார்.
நீங்கள் தொலைபேசியில் சொன்னது போல் எனக்கு பதவி உயர்வு கிடைத்தால் அதில் அவருக்கும் பங்கு உண்டு.
ஆனால் அவர்களுடைய சேவை மற்ற மேலாளருக்கும் பயன்பட்டால் நம் நிறவனமே பயனடையும். இதை பரிசீலனை செய்யுங்கள்.
நன்றி.
இதை படித்ததும் சாதாரணமாக வழியும் மனிதனோ சாதாராணமான காதல் தந்திரங்கள் செய்யும் ஆளோ கண்ணன் இல்லை என்பதை உணர்ந்தாள். சே மற்றவன் போல் நினைத்துவிட்டோமே என்று வருந்தி ஒரு பெரிய பெருமூச்சு விட்டாள்.
எனக்கு கொஞ்சம் டைம் வேணும்
ஓ கவலை படாதே இந்த மாத கடைசி வரையில் நீ என் டிபார்ட்மென்டல தான் இருப்பே
அதுக்கு சொல்லலை. உங்க காதலை பற்றி முடிவெடுக்க.....
பெர்சனல் விஷயம் லஞ்சுல இல்லாட்டி சாயங்காலம் என்று சிரித்தபடியே கூறினான்.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks