தெய்வம் என்ற பெயர் எங்கள் மக்களை அதுக்கு மேல் ஆராய்ட்சி செய்யாமல் அப்படியே நம்ப வைக்கிறது. இது தப்பல்ல!, ஒவ்வொருத்தரும் தத்தம் மத்தத்தின் மேல் வைத்திருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடு இது. ஆனால் மக்களின் அபார நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்துவதே தப்பாகும். இவ்வாறான ஒரு சில பசுத் தோல் போர்த்திய புலிகளால் உண்மையாகவே இறை நம்பிக்கைமிக்க மகான்கள் மீதான மக்களின் நம்பிக்கையும் சிதைக்கப் படுகிறது என்பதே உண்மை. எந்த ஒரு இடத்திலும் நன்மை இருக்கும் அதே வேளை தீமையும் இருக்கத் தவறுவதில்லை. இரண்டையும் வேறு பிரிப்பது மிகச் சிரமமான விடயமானாலும் கூட வேறுபிரித்தறியவாவது முயற்சிக்க வேண்டும். முயற்சிக்க வைக்கும் உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் சிவா.ஜி!.
இந்தக் கதையினை நீங்கள் நகர்த்திச் சென்ற பாங்கு அபாரம் சிவா, ஒரு தேர்த்த கதாசிரியனுக்குரிய கதையை சொல்லும் பாங்கு இதிலே பளிச்சிட்டது. அதுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சிவா.......!
Bookmarks