ஊற்றெடுக்கும் எண்ணக்
கருக்களை வடிகட்டும்
அழகிய வடிகட்டி பேனா
ஊற்றெடுக்கும் எண்ணக்
கருக்களை வடிகட்டும்
அழகிய வடிகட்டி பேனா
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
அடைக்கப்பட்ட
அறிவுப் பெட்டகத்தை
திறக்கின்ற திறவுகோல்
இந்த எழுதுகோல்!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
பேனாக்களைக் கொன்று
துப்பாக்கியால் கவி
வரைந்தது கயவர்
கூட்டம்.......................!
வெளிச்சத்திற்கு
கொணர்ந்து நியாயம்
கேட்டன அதே
பேனாக்கள.............!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அசத்தலப்பூக்களே....சிவா....ஓவியன்...
எழுகின்ற எண்ணங்களை
விரல் வழியே கடத்தி
வெள்ளைத்தாள்களை
உள்ளத்தாள்களாக்கும்
நல்லக் கடத்தல்காரன்
நம் கையின் பேனா!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கெட்டதிற்கு
முற்றுப்புள்ளி
பேனா வைக்கும்
இறுதிப்புள்ளி
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
கறுப்பாய்க்,
கருமைக்குள்,
ஓடித்திரிந்து,
தலையை பிராண்டவைக்கும்,
நீ...
பேயா..? பேனா..?
பேனாவுக்குக் குறுங்கவிதை நன்றா..?
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
விரலிடுக்குகளில்
வினோதப் பணி புரிந்து
வினைகளை களைந்தெறியும்
விசித்திரப் பிறப்பு
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks