ஒவ்வொருமுறையும்,
ஒரு காகித விதவையை
மங்கலகரமாக்குகிறது என் பேனா!
ஒவ்வொருமுறையும்,
ஒரு காகித விதவையை
மங்கலகரமாக்குகிறது என் பேனா!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
ரெம்ப நாளுக்கு முன்னர் நான் முதன் முதலில் ஒரு கவிதை(?) நமது மன்றத்தில் எழுதினேன். நண்பர்கள் பாராட்டுகள் தொடர்ந்து வந்ததை கவனிக்க மறந்தேன். (ஒருவேளை யாராவது அன்போடு திட்டியிருந்தால் என்று ), அப்படி யாரும் கையில் கல்லை எடுக்காததால் இன்னொன்று.
பலரை வாழவைக்கும் அரசு நடைமுறைகளுக்கும் காரணம் இதுவே,
சிலரை தூக்குமேடைக்கு அனுப்பும் இறுதி தீர்ப்புக்கும் இதுவே.
முன்னது திரும்ப பயன்படுமாம், ஆனால் பின்னது துக்கத்தில்
தற்கொலை செய்து கொள்ளுமாம்.
இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.
உன் இரத்தம்
எம் மொழிகளின்
நாவு
உன் கண்ணீர்
எம் எண்ணங்களின்
வரி வடிவம்
காகிதப் பாதையில்
நீ
நடக்கும் போது
சிந்தும் வியர்வைத் துளிகளே
எம் இலக்கிய விதைகள்
எப்போதும்
எச்சிலைத்
துப்பிக் கொண்டிருக்கும்
உன் அநாகரிகம் தான்
எம் நாகரிகத்தின்
முகவரி
நீ
எம் நெற்றிக் கண்களின்
இமைகளைக் கிள்ளியெறிந்த
ஆறாவது விரல்
காகிதச் சிலுவையில்
எம் எண்ணங்களின்
சிலுவைப்பாட்டை
நீ
வழங்காவிட்டால்
எமக்கு
உயிர்த்தெழல்கள்
இல்லாமலே போய்விடும்
உன் தலை கவிழ்தலில் தான்
மானுடராம்
எம் தலை நிமிர்தல்கள்
நிச்சயிக்கப்படுகின்றன
ஏட்டுப் பாறையில்
உன் தலையால் முட்டி
நீ
செதுக்கும்
தலையெழுத்துக்கள் தாம்
எம் எதிர்காலத் தலையெழுத்தை
நிர்ணயிக்கின்றன
கைக் கூண்டிலிருந்த
விரல்கட்குச்
சிறகாக
நீ
முளைத்த போது
அவை காகித வானில்
பறந்து விட்டுச் சென்ற
சுவடுகள் தாம்
எம் எழுத்துக்கள்
உன் பாதைகள்
எம் இலட்சியங்களை
முடிவு செய்கின்றன
உன் சுவடுகள்
எம் பாதங்களுக்குப்
பாதைகளைத்
தெரிவு செய்கின்றன
உன் குருதித் துளிகள்
எம் நிஜ முகங்களைப்
பிரதிபலித்து விடுகின்றன
விரல்களின் தூக்கில்
தொங்கும் போது
நீ
உயிர்க்கிறாய்
உன் கழுத்தைச் சுற்றி
மனித விரல்களையே
அணிந்த போதையில் தான்
தலை கால் தெரியாமல்
நீ
தலையால் நடக்கிறாயா!
ஆறாவது அறிவு
மனிதனுக்கு வாய்த்த போது
நீ
ஆறாவது விரலாக
முளைத்து விட்டாயா!
விரல்கள்
என்ற ஓரறிவு உயிரிகள்
ஈரறிவு உயிரிகளாய்ப்
பரிணமிக்க
உன்னைத்
தம் நாவாக
வளர்த்துக் கொண்டனவா!
(வளரும்)
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
அமங்கல காகிதங்களை
மங்கலமாக்கும் பேனா
பெருமை பகன்ற
ஷீ வரிகள் அழகு...!!
துக்கத்தில் தானா தற்கொலை....!!
ஒரு கொலையால் எத்தனை மரணங்கள்....!!
ஒரு கொலைக்குத் தண்டனையாய் ஒரு மரணம்...
அந்த மரணத்தினால் ஓர் தற்கொலை...!!
பாராட்டுக்கள் பிரவீன், தொடர்ந்து கவிதைப் பகுதிக்கு வாங்க...!!
ஏன்னா நாங்களே அங்கே இருக்கையில், உங்களுக்கு என்ன கவலை...!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அடடா அண்ணா, இந்தக் கவித் திரியினைத் தொடங்கியமைக்கு எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு உங்கள் அழகிய கவிதை....!!காகிதப் பாதையில்
நீ
நடக்கும் போது
சிந்தும் வியர்வைத் துளிகளே
எம் இலக்கிய விதைகள்
எப்போதும்
எச்சிலைத்
துப்பிக் கொண்டிருக்கும்
உன் அநாகரிகம் தான்
எம் நாகரிகத்தின்
முகவரி
எதைச் சொல்ல, எதை விட.....
ஒவ்வொரு வரிகளிலும்
நமக்கும் பேனாக்கும் இடையிலான உறவு
வெளிச்சமாக விரிகிறது...
மனதாரப் பாராட்டுகிறேன்
அருமையான கவித் துளியென...!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அற்புதமான பேனாத் திரி துவங்கிப் பற்பல அருங்கவிதைகளை அப்பேனாவால் உமிழ வைத்த உமக்கும் என் நன்றியும் பாராட்டும் ஓவியன்.
வெள்ளை முட்பரப்பில்
தலையால் நடந்து
மூளையைப் பிழிகிறேன்
அப்பிழிவில் தெரியும்
துடிக்கும் என் இருதய ஈரம்
உலர்ந்தும்
உலராத உயிர்மை
என் உயிர் மை
மை பாய்ந்த காகிதக் கூடும்
என் மெய்
உயிர் மை உறையும் உயர்மெய்
உயிர்மெய்
ஒரு மையின் உண்மையே
கூடுகளனைத்திலும்
ஒரு மெய்யின் உள் மை
உள் மெய்
ஒருமையை உண்
உண் இம்மை
உண் இம்மெய்
உண் மை
உண்மையை உண்ண உண்ண
உன் மெய் விளங்கும்
உன் மை உயிர்மையை
என் மை கசியும்
வெண்மையில் கருமையால்
விழி பிறக்கத் தெரியும்
மெய்ப்பொருள் விளக்கம்
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
எழுத நினைத்தேன்
எழுத முடியவில்லை - பேனாவில் இங்க் இல்லை!!!
அல்லது
கவிதை வந்தது
எழுத்து வரவில்லை - இங்க் இல்லை!!!
எண்ணக் கருப்பையின்
பிரசவ வாய்
எழுத்துப் பால்
சுரக்கும் காம்பு - பேனா..
அன்புடன் ஆதி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks