அர்த்தம் தான் என்னவோ
நீ வருவாய் என என் இரு விளிகலும்
தினமும் ஏங்குகின்றன...!
உன் பெயரைச் சொல்லியே என் உயிர்
சுவாசிக்கின்றது....!
உன்னோடு பேசத்துடிக்கும் என் இதழ்கள்
பிறரிடம் பேச மறுக்கின்றது...!
உன் குரலைக் கேட்க என் செவிகலிரண்டும்
நாளும் தவிக்கின்றன...!
உன்னைக் கானாத நாளில் என் இதயம்
வலிக்கின்றது...!
ஆணே என்னில் நீ ஏற்படுத்திய இம்மாற்றத்திற்கு
அர்த்தம் தான் என்னவோ?
அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா
Bookmarks