அன்பான மன்றத்து உறவுகளே!, மன்றம் வந்து பல நாளாகியும் இந்த பகுதியில் என்னை அறிமுகப் படுத்தாதமைக்கு நான் இதற்கு தகுதியானவனா என்று என்னிடம் நானே கேட்ட கேள்வியே பிரதான காரணமானது. ஆனாலும் என்னை வளர்ந்துக் கொண்டு இங்கே என்னை அறிமுகப் படுத்தலாமென முடிவெடுத்திருந்தேன், ஆனால் பின்னர் தான் அறிந்தேன் என் வளர்ச்சிப் பாதை மிக மிக நீளமா.........னது என்று. அத்துடன் அன்பு உறவு அமரன் உற்சாகப் படுத்தியதன் உடனடி விளைவே இந்த பதிவு.........
ஈழத்தின் வன்னியில் பிறந்து மத்தியகிழக்கிலே பிழைக்க வந்து மன்றத்திலே தஞ்சம் நாடி வந்த அன்றில் நான். வாசனைமிக்க என்பெயரை கலை வாழ்க்கைக்காக ஓவியனாக்கியவன். சிறுவயது தொடங்கி ஓவியங்கள் மீதும் வர்ணங்கள் மீதும் நான் கொண்ட தீராக் காதல் இந்த புனை பெயருக்கும் வழி கோலியது. சிறுவயது முதலே நான் காதலித்தாலும் கரம் பற்ற மறந்த அல்லது மறுத்த காதலி கவிதை, அதற்கு நான் கரம் பற்றிய மற்றொரு காதலியான ஓவியம் காரணமாக இருந்திருக்கலாம். கவிதைக் காதலியைக் கண்கொட்டாமால் இரசித்தும் அவள் அழகைப் பருகி வந்தாலும் ஒருவனுக்கு ஒருத்தியே போதுமென இருந்து விட்டேன் போல..........!.
சிறு வயதில் பாடசாலைக் காலங்களில் ஓவியம், கதை, கட்டுரை போன்ற போட்டிகளில் அய்ராமல் கலந்து கொண்டிருந்தாலும் கவிதைப் போட்டிகள் பக்கம் தலை வைத்துக் கூடப் படுத்ததில்லை. ஆனால் கவிதைகளை ஆழமாக இரசித்துக் கொண்டே இருந்தேன். அப்போது 2005 ம் ஆண்டு யாழ்ப்பாணம் மீதான இராணுவ ஆக்கிரமிப்பால் எங்கள் பகுதிக்கும் பாடசாலைக்கும் யாழில் வசித்த பல உறவுகள் புலம் பெயர்ந்து வந்து எங்களுடனிணைந்து கொண்டனர். புலம் பெயர்வு எவ்வளவு மோசமானதானாலும் அது எனக்கு ஒரு நன்மையையும் செய்தது. ஆமாம் அந்த புலப் பெயர்வால் எங்கள் பாடசாலைக்கு வந்தசேர்ந்த ஈழத்தின் புகழ் பூத்த கவிஞர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் ஐயா அவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அந்தக் காலத்தில் அந்தப் பெரியவரின் வார்த்தைகளிலும் வசனங்களிலும் என்னையே தொலைத்து செந்தமிழில் நனையக் கிடைத்தமை என் பாக்கியமே. அந்த பெரியவரால் கவிதைகள் மேல் எனக்கிருந்த காதல் அதிகரித்தாலும் நான் ஒரு கவிதைகளேனும் எழுதவில்லை. எனக்கு ஏன் இந்த பொல்லாப்பு என்று விட்டுவிட்டேன்.
பின்னர் காலத்தின் சுழற்சியால் மத்திய கிழக்குக்கு பணிபுரிய வந்த போது தமிழ்மன்றம் என்னை இருகரம் நீக்கி வரவேற்று என் தமிழார்வத்தை வளர்த்தது. மன்றத்தின் ஆரம்ப காலத்தில் நான் திரிகளை ஆரம்பிப்பதிலும் மற்றையவர்களின் திரிகளுக்குப் பின்னூட்டம் இடுவதிலுமே என் காலத்தைக் கழித்தேன். அப்போது ஒரு நாள் பென்ஸ் அண்ணா என் கையெழுத்தைப் பார்த்து ஓவியன் கலக்கல் ஒரு கவிதையையே கையெழுத்தாக வைத்திருக்கிறாயே பாராட்டுக்கள் என்றார். அந்த பாராட்டு என்னை வசிட்டர் வாயால் பிரமரிஷிப் பட்டம் பெற்ற பெருமையை எனக்கு அளித்து நானும் கவிதை எழுத வேண்டுமென மேன் மேலும் ஆர்வமூட்டியது. தொடர்ந்து என்னை மாற்றவென வந்தது ஒரு திரி, கவிதை எழுதுவது எப்படி என்று.........
ஆதவன் ஆரம்பித்த அந்த திரி எனக்குக் கவிதை எழுதும் ஆவலை அதிகரித்தது அந்த திரியில் எங்கள் இளசு அண்ணா இப்படி என்னைக் கவிதை எழுத ஊக்குவித்தார். அப்போதும் நான் எழுதவில்லை, ஒருவாறாக அரட்டையடித்து மயூவைக் கிண்டலடித்து மன்றத்தின் தூணாகிய போது பூ அண்ணா வாழ்த்து தெரிவிக்கையில் ஓவியன் மன்றத்தில் தனித்தன்மையைப் பேண எதாவது செய்யுங்கள் என்று ஊக்கமூட்டினார், தொடந்து அவரது தனிமடல்கள் என்னை ஊக்கப் படுத்த எனது முதல் கவிதையை நான் கண்ட தமிழ் மன்றம் என்ற தலைப்பில் இட உடனே அன்பு நண்பர் ஷீ எனக்கு ஆலோசனை தந்து அந்தக் கவிதையைச் செம்மைப் படுத்தினார். அந்த திரிக்குக் கிடைத்த உற்சாகப் பின்னூட்டங்கள் என்னைக் தொடந்து கவி எழுத வைத்தன.
என்னை ஊக்குவிக்க வந்தது போலவே எனக்குத் தெரிந்தது கவிச்சமர் திரி அங்கே செல்வன் அண்ணாவின் கவியால் மயங்கி அவர் கவிதைகளிலிருந்து ஏராளம் விடயங்களைக் கற்றேன். அங்கே கவிச்சமர் நண்பர்களது கவிதைகளும் என்னை வளர்த்தன, எங்கள் கவிச் சமர் எல்லாத் திரிகளிலும் பரவின. முக்கியமாக அமரன் தொடக்கிய அரிசியல் என்ற குறுங்கவிதைத் திரியும் நான் தொடக்கிய வெறொரு(த்)தீ குறுங்கவிதைத் திரியும் என்னை மேன்மேலும் வளர்த்தது. தொடர்ந்து எனக்குக் கிடைத்த பின்னூட்டங்களாக முக்கியமாக இளசு அண்ணா, பென்ஸ் அண்ணா, பூ, ஆதவா, ஷீ, அக்னி, அமரன், சிவா, அன்பு, இனியவள், ஓவியா, வாத்தியார், போன்றோர் வடிவில் என் கவிதை வரிகளுக்கு மேன் மேலும் பலமூட்ட இன்று நான் என் கவி ஓவியங்களுடன் உங்கள் முன்னே என் அறிமுகம் செய்யும் பாக்கியம் கிட்டியது.
இந்த அரும்பாக்கியத்தை எனக்களித்த அன்புள்ளங்களுக்கு நன்றிகள் கோடி....................!
மன்றத்தில் எனது கவிதைகள்..........!
வாழ்த்துக் கவிதைகள்
நான் கண்ட தமிழ் மன்றம்!
குறுங்கவிதைகள்
பசுமை!
வேறொரு(த்)தீ!
தமிழ்!
மறதி!.
நேர்(மாறு) விகித சமன்!
வேட்டை...!
விலாங்கும் வெளவாலும்!
காதல் கவிதைகள்
கண்மூடா(து) காதல்!.
புரிகிறது!.
காலத்தின் நிமிடங்கள்!
புதிய கவிதைகள்
கைவந்த கழுகுகள்!
மீண்டும் போவதெப்போ............?
படைப்பின் பேதம்.........!
காணாமல் போன கவிதை...........
Bookmarks