கவிதையும் ஓரு ஓவியம்தான்
இரண்டிற்கும் மூலதனம் கற்பனைதான்
இரண்டிற்கும் தூண்டுதல் பாராட்டுத்தான்
இரண்டும் இன்பத்திலும் துன்பத்திலும்
இயல்பாக வருபவை.
வாழ்க் உன் சேவை.
உன் நடைகண்டு மகிழும் மழலை.
கவிதையும் ஓரு ஓவியம்தான்
இரண்டிற்கும் மூலதனம் கற்பனைதான்
இரண்டிற்கும் தூண்டுதல் பாராட்டுத்தான்
இரண்டும் இன்பத்திலும் துன்பத்திலும்
இயல்பாக வருபவை.
வாழ்க் உன் சேவை.
உன் நடைகண்டு மகிழும் மழலை.
அன்புச்சகோதரர் ஓவியன்,
தங்களின் கவித்திறனைக் கண்டு அகம் மகிழ்ந்தோம்...!
தமிழ்த்தாயின் கடைக்குட்டியாம் இந்த சிறு மழலையின் மனமார்ந்த பாராட்டுக்கள்...!
உங்கள் அசிகளுடன் நானும்,
தமிழ் பயணத்தில் உங்களுடன்,
தமிழ் மன்றத்தில் புதுமைகள் படைக்க
உத்வேகத்துடன்....!
நன்றிகளோடு..
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
என்ன ஓவியன், நீங்கள் வரைந்த படங்கள் என்று ஆர்வமாக வந்தால், கவிதைகளாக இருக்கிறதே. எனக்கும் கவிதைகளுக்கும் காத தூரம். :-)
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
மோகன் என்னை வைத்துக் காமடி கீமடி பண்ணலியே?
உங்களுக்காக சிரிப்புக்கள் விடுகதைகள் பகுதியில் இந்த திரியில் என்னால் வரையப் பட்ட ஓவியங்கள் சில உள்ளன.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
இந்தத் திரியை இத்தனை நாளும் தவறவிட்டுவிட்டேன் நண்பா...
நீங்கள் கவிதை எழுதுவதைக் காட்டிலும் ஓவியம் வரைவதில் வல்லவர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்... கார்ட்டூன் ஓவியங்கள் பல உங்கள் கைவண்ணத்தில் இதே மன்றத்தில் ஜொலித்தவைதானே!!
ஓவியம் பெரிதா? காவியம் பெரிதா? இன்றும் கூட புகழ்பெற்ற பல ஓவியங்களை நாம் கண்டிருப்போம்...... ஓவியத்திற்குப் பேசும் திறம் உண்டு. பல கவிதைகளை ஒரு ஓவியத்தில் அடக்கிவிடுவதும் உண்டு. ஆனால் கவிதை அப்படியல்ல. படிக்க, ரசிக்க, புரிய, தெரிந்திருக்கவேண்டும். இல்லாவிடில் அந்தக் கவிதையே வீண்..
கவிதை எழுதுவது என்பது என்னைப் பொறுத்தவரையிலும் பொழுதுபோக்கு.. அந்தப் பொழுதையும் நல்லவிதமாகப் போக்கவேண்டும் என்பது என் விருப்பம். அது தமிழில் எனும்போது என் பொழுதுகள் இனிமையாகவே போக்கப்படுகிறது.. அப்படியொரு பொழுதுபோக்கை ஏன் நீங்கள் தொடரக்கூடாது? உங்கள் கருத்துக்களையே ஏன் கவிதை ஆக்க இயலாது? ஏற்கனவே யாராவது அந்தக் கருத்தில் இட்டிருக்கிறார்கள் என்ற பயமா? கவலை விடுங்கள்.. இன்று பெரிய கவிஞர் என்று வர்ணிக்கப்படும் வைரமுத்து கூட " அற்றைத் திங்கள் அந்நிலவில்" என்ற வரியையே சுட்டாரே! நாம் எழுதுவதெல்லாம் எதுவும் புதுமை அல்ல. ஏற்கனவே எழுதி வைத்தது...
அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கொரு காட்டிலோரு
பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
உங்களை ஒரு அக்னிக் குஞ்சாக நான் காண நினைக்கிறேன்.. உங்கள் பயணக் காடுகள் வெந்து தணியட்டும்....
வாழ்த்துகளுடன்
ஆதவன்
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks