மன்ற உறவுகளுக்கு,
என்னுள் கவிதை கலந்து காலங்கள் நிறைய ஆகிவிட்டது. ஆனால் நான் கவிதையில் 'கலக்கத்தான்' காலம் நிறைய ஆகிவிட்டது. இ−கார்டுகளும்,பிப்ரவரி−14 களும்,குறுஞ்செய்திகளும் அறிமுகமாகாத காலங்களில் கவிதைதான் காதல் தூதுவனாக சம்பளமின்றி வேலை செய்தது.
எனக்காக நான் எழுதிய காதல் கவிதைகள் ஏதுமில்லை. நன்பர்களுக்காக...நிறைய. அதில் ஊடலில் பிரிந்திருந்த இரு காதல் உள்ளங்களை என் கவிதையின் மூலம் சேர்த்தது என் வாழ்நாள் சாதனை.
என்னுடன் அரபுநாட்டில் பணிபுரிந்த நன்பனின் காதலியின் பிணக்கு தீர்க்க
நான் எழுதி என் நன்பனின் பெயர் தாங்கிப்போன கவிதைதான் எனக்கும்
கொஞ்சம் கவிதை எழுத வரும் என்று உணர்த்தியது.நன்பனின் காதலியின்
பிறந்தநாளுக்காக எழுதிய அந்த கவிதை,
பாவையை வாழ்த்த
பாலைவனமெல்லாம் தேடி
சோலையில் ஓர்
பூச்செடியின் புது வரவான
பூவிடம் என் வாழ்த்தை சொன்னேன்
பெண்ணே அது கிடைத்ததா?
காதலைச் சேர்த்துவைத்து, எனக்கு கவிஞன் என்ற பேரையும் கொடுத்த கவிதை.
பிறகு நீண்ட நாட்களாக கவிதைகள் பக்கம் போகாமல் இருந்தவன் ஈதேனியில் லியோமோகனின் ஊக்குவிப்பில் என் மணல்வாசம் என்ற கவிதையை எழுதினேன்.
அதன்பிறகுதான் நம் மன்றம் எனக்கு அறிமுகமானது. கம்பன் வீட்டுக்கட்டுத்தறியாக நானும் கவி பாடத்தொடங்கினேன். ஆரம்பத்தில் ஆர்வத்தில் மற்ற கவிஞர்களின் படைப்புக்களை படிக்காமல் ஏதோ எழுதினேன். மற்ற படைப்புக்களைப் படித்ததும் பிரமித்து நின்று விட்டேன்.
நவரசக்கவி ஆதவா,ஷீ−நிசி,அமரன்,ஓவியன்,அக்னி, பிச்சி,தாமரைச்செல்வன் மற்றும் பலப்பல
கவி வித்தகர்களின் கவிகளைப் படித்து பாடம் பயின்றேன். ஒரு நூறு துரோணர்களை எட்ட இருந்து பார்த்து கற்ற ஏகலைவன்களில் நானும் ஒருவனாக களம் புகுந்தேன். இன்னும் என்னை ஏகலைவனாகவே நினைத்து
பாடம் பயின்று வருகிறேன். கற்றதைப் பரீச்சித்துப் பார்க்க அவ்வப்போது சில பதிவுகளை மன்றத்தின் பார்வைக்கு வைப்பேன். பாராட்டு பெற்ற சிலவற்றை படைக்க முடிந்ததே என நினைத்தபோது இந்த பகுதியில் என்னையும் ஒரு கவிஞனாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் துணிவைப் பெற்றேன். சிறந்த பின்னூட்டங்கள்தான் என்னை முன்னோக்கித் தள்ளிக்கொண்டிருக்கின்றன என்பது முற்றிலும் உண்மை.இதேபோல் என்றும் ஒரு உறவாய் இங்கு இருந்திட உங்கள் வாழ்த்துகளை வேண்டி காத்திருக்கிறேன்.
என் கவிதைகள்
சிறப்பு வரம்
மனிதம் வளர்
உறவுகள்
வெகுதூரம் வந்துவிட்டேன்
அப்பா
மணல் வாசம்
அவமானங்கள் சுமப்பவன்
காற்று விடு தூது
பொல்லாத காலம்
இதயத்தில் முள்
எல்லாமே அழகு
நீ இல்லா இரவுகள்
ஒரு பழம் காயாகிறது
இயற்கையென்ற கலைஞன்
கண்டுபிடி
மனிதம் கொள்
தாய்ப் பொழப்பு
நினைவுகளைத் தூக்கிலிடுங்கள்
பிள்ளைச் செல்வம்
குறையா குற்றமா?
Bookmarks