விழி அம்புகளால் துளைத்து
இதயகீதம் இசைத்துவிட்டு
குடிவராமல் போகிறாயே
நீ என்ன
மர(ன)ங்கொத்தியா...?
விழி அம்புகளால் துளைத்து
இதயகீதம் இசைத்துவிட்டு
குடிவராமல் போகிறாயே
நீ என்ன
மர(ன)ங்கொத்தியா...?
Last edited by அமரன்; 25-07-2007 at 09:04 AM.
லப்டப் லயம் மாறி
டக்டக் ஆனதாலும்
இறுகிய பட்டைதாண்டி
இளகிய ஈரம் தொட்டதாலும்
வரிசையாய் பலப்பல
வடுக்களைப் பதித்ததாலும்
பின்னாளின் அவள் மனப்பசிக்கு
இந்நாளில் என் காயங்கள் சேமித்தலாலும்
அவள் ஒரு மர(ன)ங்கொத்தியே...
அமரனின் கற்பனையில் அமிழ்ந்துவிட்டேன்..
அபாரம் அமரா!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
Last edited by சுகந்தப்ரீதன்; 24-07-2007 at 07:31 AM.
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
மனங்கொத்தி மனங்கொத்தி உன் மனம் எடுத்து போயிருக்கிறாள்.
கவலை வேண்டாம் உள் அறிந்து கொண்டதால் உடனே வருவாள்.
உடைமைகள் அவள் வீட்டிலல்லவா,குடி பெயர கொஞ்சம் அவகாசம்
வேண்டாமா?
அழகான கற்பனை அமரன்.பாராட்டுக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
உளி கொண்டு கொத்திக்
கொத்தி கல்லை சிற்பமாக்குவது
போல் உன் விழி கொண்டென்னை
கொத்திக் கொத்தி பண்படுதுகின்றாயா...
கவிதை அருமை அமர் வாழ்த்துக்கள்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
அருமை அமரன்...
மரங்கொத்தி துளைத்தெடுக்க தன் நாசியை பயன்படுத்தும்.... துளைத்தெடுக்கும் வரை நிறுத்துவதில்லை...
நீ உன் விழியை பயன்படுத்துகிறாய்.. என் இதயத்தை துளைத்தெடுக்கும்வரை நீயும் விடுவதில்லை...
அட! அந்த மரங்கொத்தி இன்னொரு மரத்தை நோக்கி போகிறதே!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
இளசு அண்ணா,சுகந்தப்ரீதன்,சிவா,இனியவள்,ஷீ நன்றிகள். உங்கள் பின்னூட்டங்கள் கவிதையை இன்னும் அழகாக்குவதோடு என்னை வளர்க்கிறது.
அமரன் முன்மொழிந்த கவிதை அருமை அதைவிட நண்பர்களின் வழிமொழிதல் அருமை அருமை
அமரா இரசித்து மகிழ்ந்தேன் உங்கள் வரிகளை, இளசு அண்ணாவின் விமர்சனத்தைக் கண்டதும் என் மகிழ்ச்சி இரட்டிப்பானது!.
பாராட்டுக்கள் அமர்!.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
மனங்கொத்தியாய் வந்தாய்
மரங்கொத்தியாய் ஆனாய்
மதுரங் கொத்தியாக்கினாய்
மரணங்கொத்திக்கு ஆளாக்கினாய்
Last edited by விகடன்; 26-07-2007 at 01:23 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks