இரு மின்னல்களும்
ஒன்றையொன்று உரசும் போது
ஏற்படும் ஒளி போன்று
அவன் கண்கள் என்
கண்ணோடு உரசும் போது
என் இதயத்தில் ஒர் ஓளிக்கீற்று....
இதயத் துடிப்பு முன்பை
விட வேகமாக துடிக்கின்றதே
அவனின் அழகிய குறும்பைக்
கடைகண் கொண்டு நோக்கையில்...
சூரியனோடு வெண்ணிலா
காதல் கொண்டதோ....
கண்கட்டி வித்தை காட்டி
என்னுள் நுழைந்து
கொண்டாயே கரம் கொண்டு
தடுத்து விட முயற்சித்தேன்
காற்றாய் மாறி விரல்களுக்கிடையில்
தவழுகின்றாய்.....
காற்றுக்கள் அனைத்தும்
உன் பெயரை சுமந்து
வந்து ரீங்காரம் இடுகின்றது
என் காதினிலே....
ஒவ்வொரு நிமிடமும்
உன் பெயரை வேதம்
போல் உச்சரிக்கின்றேன்...
கோயில் கற்பகிரக்ததில்
இறைவனுக்கு பதில்
உன் முகம்...
பாதத்தை மெதுவாய்
அடிவைத்து நடக்கின்றேன்
தரையில் காணும் மணல்துகல்களில்
உன் முகம் காண்பதால்...
இதற்கு பெயர் தான்
காதலோ
காணும் அனைத்திலும்
உன் முகம்
கேட்கும் குரலனைத்தும்
உன் குரல்..
Bookmarks