இருண்டு இருக்கையில்
மின்னும் மீன்களே...!
சிந்தையில் இருத்துங்கள்.
ஒளிநிலா மறையவில்லை
கருநிலவாய்க் காய்கிறது.
இருண்டு இருக்கையில்
மின்னும் மீன்களே...!
சிந்தையில் இருத்துங்கள்.
ஒளிநிலா மறையவில்லை
கருநிலவாய்க் காய்கிறது.
ஆட்டம் போடும் வால் பையன்களே
வாத்தியார் இருக்கிறார் மறந்து விடாதீர்கள். கரு நிலா ஒளி நிலா...அழகான கற்பனை. அசத்தல் அமரன்.
நில மகளின் கூந்தலில் மலர்களாய்
நட்சத்திரங்கள்...
அந்த பக்கம் உள்ள அழகு முகத்தில்
திலகமாய் திங்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கிடைக்கும் இடைவெளியில்
மின்மினி ஆட்டம் காட்டுவது
(வால்) நட்சத்திரங்களின்
வாடிக்கைதானே.. அமரன்..!
இயற்பியல் உண்மைகளை மீறி
இயற்கையை நம் கருத்தேற்றிச் சொல்லும்
இனிய கவிதை..
சுருக்கமாய்.. கொஞ்சம் குறும்புடன்..
பாராட்டுகள் அமரன்!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
மறைமுக உவமை.. சிவா. அதை சொன்னவிதம் அருமை.. இளசு அண்ணாவின் பாராட்டு உடனே பெற்றது கவிதைக்கு சிறப்பு.
தமக்குக் கிடைத்த இடத்தை பயன்படுத்தப்பார்க்கிறார்கள் மீன்கள்.. நிலவை நிந்திக்க அவசியமில்லாமல்.. ஆனால் இருக்கக்கூடும் சில மீன்கள்.. நிலவு மறைந்ததை ஒளிந்ததாக ஏற்கும் மீன்கள்.
சிறப்பாக அமைந்த கவிதையிது.. வாழ்த்துக்கள் அமரன்
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
நன்றி சிவா...
கருவை இரு வரிகளில் சொல்லிவிட்டீர்கள்.
அடுத்த வரிகள் இன்னொரு ஆனந்தம்.
தொடர்வோம்.
இளசு அண்ணா!
ஆமாம் அண்ணா ஆட்டம்போடும் வால் நட்சத்திரங்களை மனதில் வைத்தே எழுதினேன்.
வெந்த புண்களில்
வேலை பாய்ச்சுகின்ற
ஆறிய ரணங்களை
கீறிப்பார்க்கின்ற
வீண் மீன்களே.....!
ஒளிநிலா வரும்போது
மங்கிப்போவீர்கள்.
அளவோடு ஆடுங்கள்...
ஆதங்கத்துடன் வானத்தை பார்த்த எனக்கு தோன்றிய கவிதை இது..
அதனால் இயற்பியல் மீறிவிட்டதோ
குறும்பாகத்தான் சொன்னேன்..அத்துடன் கொஞ்சம் காரமாகவும்..
Last edited by அமரன்; 22-07-2007 at 03:13 PM.
ஓவியன்...
கடன் வாங்கினாலும்
கண்ணாய் இருப்பது நிலா..?
சிவா..பின்னூட்டங்களில் காணப்படும் சில கவிதைகள் என் மனதில் ஒட்டிக்கொள்ளும். இன்று அப்படி ஒட்டிக்கொண்ட கவிதை இது..கணினியை விட்டு கண்களை விலக்கியும் என்னை விட்டு விலகாத கவிதை. அருமையான கற்பனை. கூந்தல்பூக்களாக நட்சத்திரங்கள். திலகமாக நிலா..பாராட்டுக்கள்..இது என்னை என்னமோ செய்கிறது. சிலநேரங்களில் அது கவிதையாகும் போது அது உங்களுக்கே சொந்தமானது...நில மகளின் கூந்தலில் மலர்களாய்
நட்சத்திரங்கள்...
அந்த பக்கம் உள்ள அழகு முகத்தில்
திலகமாய் திங்கள்.
நன்றி அமரன்.நல்ல ரசிகன் நீங்கள். உங்கள் கவிதையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
இனியவள்..ஏதோ கிறுக்குகின்றேன். சமயத்தில் எனக்கே என்ன கிறுக்கியுள்ளேன் என்று தெரிவதில்லை. அதில் கருத்து இருப்பது தெரிகின்றது என்றால் அது உங்கள் திறமை. பின்னூட்டக்கவிதை அருமை.
---------------------------------------------------------
சிவா ரொம்ப எதிர்பார்க்காதீங்க சுமாரா எதிர்பாருங்க
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks