விலாங்கும் வெளவாலும்
விலங்குகளிடம் மட்டுமல்ல
மனிதர்களிடையும் உண்டு
ஏராளம் ஏராளமாய்............!
விலாங்கும் வெளவாலும்
விலங்குகளிடம் மட்டுமல்ல
மனிதர்களிடையும் உண்டு
ஏராளம் ஏராளமாய்............!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
மீனுக்கு தலையையும்
பாம்புக்கு வாலையும்
காட்டுவது மட்டுமின்றி
நழுவுவதிலும் பலர்
சமத்தர்களாய் நம்மிடை
விலாங்குகளாய்......!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
கட்டப் பொம்மனுக்கு
ஒரு எட்டப்பன்....!
பண்டார வன்னியனுக்கு
ஒரு காக்கை வன்னியன்....!
இன்னமும் தொடர்கிறது
வெளவால்களின் கதை.............!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
முதலாவதாக விலாங்கு விலங்கு அல்லவே.. அது மீன்வகையை சேர்ந்தது,,, (அப்பாடி தப்பை கண்டுபிடிச்சுட்டேன்)
நீங்கள் எந்த அர்த்தம் எடுத்து எழுதினீர்களோ நான் அறியேன். ஆனால் இருக்கலாம்.... சில மனிதர்கள் வெளவால்களாய்.... விலாங்கைப் பற்றி அவ்வளவாக அறியேன்..
மனிதர்களிடையே உண்டு ; மனிதனுக்குள்ளேயும் உண்டு. சிறப்பான கவிதை ஓவியன். மனிதர்களை குறுகுறுக்கவைக்கும் குறுங்கவிதை... வாழ்த்துக்கள்.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
அடுத்தடுத்த கவிதைகள்... முன்னதைப் பிடித்து சொல்லுகின்றன ஓவியன். குணங்களில் மோசமானது என்று கூட நழுவலைச் சொல்லலாம்.. விலாங்குமீன் நழுவலை கவனிக்காமல் போய்விட்டேன்..
அருமையான முன் உதாரணத்தோடு தொடர்ச்சியாக கவிதை. இதை முழுவதுமாக பதித்திருக்கலாமே ?
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
முதலில் அப்படித்தான் நினைத்தேன் ஆதவா(தனியாகப் பதிக்க) ஆனால் இப்படி குறுங்கவிதைகளாக்கினால் அதற்கு மன்றத்திலிருந்து ஏராளம் பதில் கவிதைகள் வருமென்ற நம்பிக்கையிலேயே குறுங்கவிதையாக பதித்தேன்.
பி.கு - விலாங்கு பாம்புக்கு நானும் பாம்புதான் என்று வாலைக் காட்டுமாம், மீனுக்கு நானும் மீன்தான் என்று தலையைக் காட்டுமாம். (என் பாட்டி சொன்னது, ஹீ!,ஹீ! )
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
நிஜம் சொல்லும் மற்றுமொரு குறுங்கவிதை. எத்தனை வேடங்கள் தான் இந்த மானிடர் போடுவார். இவர்களுக்கு இடையேதான் வாழ்ந்த்து தீர வேண்டியிருக்கிறது.எட்டப்பர்கள் இடையிடயே நம் வாழ்க்கையிலும் எட்டிப்பார்க்கிறார்கள் அவர்களின் துரோகத்தின் தாக்கத்தை தாங்கிக்கொள்ள திடமான மன உறுதியுடன் இருப்போம். பாராட்டுக்கள் ஓவியன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மனிதர்களிடம் மனிதம் இல்லாமல் விலங்குகளின் குணத்தை பெற்றிருக்கிறார்கள் என்ற கருவை அடிப்படையாக கொண்டு எழுத நினைத்ததால் நடந்த சிறு குழப்பம் இது. விலங்குகளிலேயே விஷப்பாம்பு, பச்சோந்தி, குள்ளநரி, ஓநாய் என்று மனிதனை உருவகப்படுத்த நிறைய விலங்குகள் இருக்கிறது என்பதால் அதற்கு மாற்று இல்லை என்று ஓவியன் குழம்ப தேவையில்லை.
நமக்கு தான் இந்த குழப்பமெல்லாம். விலங்குகளிடையே வஞ்சகம், புரட்டு, பித்தலாட்டம், துரோகம் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் அவை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் "மனிதனை போல் இருக்கிறாயே..!" என்று அடுத்த விலங்கிடம் சொல்லலாம். உலகில் உள்ள எல்லா தீய குணங்களுக்கும் உதாரணமான ஒரு உயிரினம் மனிதன் தான்..!!
சிறப்பான கவிதையளித்த ஓவியனுக்கு பாராட்டுக்கள்..!!
அன்புடன்,
இதயம்
மனிதம் மேல் நம்பிக்கைக் குறையும் தருணங்களில்
மனம் வெதும்பி கருப்பு வண்ணத்தைக் கொண்டு
கவி ஓவியன் எழுதிய இருள் ஓவியம்...
ஒற்றை நாக்கு − இரட்டைப் பேச்சு..
பேச்சில் வீரம் − செயலில் பூச்சியம்..
தலைகீழ்க் கோலம் போட்டாவது
தனிக்கவனம் கவர எண்ணும் அழிச்சாட்டியம்..
ஓவியனின் கவலைகள் நம்மில் பலருக்கும்..
நல்லவை பெருக, அல்லவை அருகும் என்ற
நம்பிக்கை மட்டும் மிச்சம் என்றைக்கும்!
வாழ்த்துகள் ஓவியன்!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks