என் இனிய தென்றல் காற்றே
என்னைத் தீண்டாதே...!
ஒளிகொடுத்த களிப்பில்
என்னை இறக்கவிடு...
இப்படிக்கு மெழுகுவர்த்தி.
படித்துப் பார்த்தகவி
பரசவத்தில் மிதத்தியது
என்
காதல் தோற்கவில்லை.
என் இனிய தென்றல் காற்றே
என்னைத் தீண்டாதே...!
ஒளிகொடுத்த களிப்பில்
என்னை இறக்கவிடு...
இப்படிக்கு மெழுகுவர்த்தி.
படித்துப் பார்த்தகவி
பரசவத்தில் மிதத்தியது
என்
காதல் தோற்கவில்லை.
Last edited by அமரன்; 21-07-2007 at 10:39 AM.
அமரன் முதல் பத்தி சரி. அடுத்த பத்தி..... விளக்கம் ப்ளீஸ்?
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
என் இனிய தென்றலே...
சற்றே என்னைத் தாலாட்டு,
எனது சுடரின் அசைவில்,
மூலையில் மடங்கும் இருளும்,
விலக்கப்படட்டும்...
இப்படிக்கு மெழுகுவர்த்தி...
படித்துப் பார்த்ததும்
பரிதவித்தேன்...
காதல் பரவலாக்கப்படுகின்றதோ
என்று...
Last edited by அக்னி; 21-07-2007 at 10:22 AM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
தியாகத்தில் தீயில்
குளிக்கும் காதல்
தோற்பதில்லையே
அது அமரத்துவம் பெற்று
காலத்தை ஜெயிக்குமே.....!
வரிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அமர்!.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
காதல் தேடி காத்திருந்த இதயம் ஒன்று...
ஏற்கப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா
எனத் தெரியாமல்,
வாழ்க்கைப்பட்டுவிட்ட காதலை
தேடியபடி....
வாழ்க்கைப்பட்ட காதலிடமிருந்து,
வந்த மடல்...
காதல் தோற்கவில்லை...
தோற்கடிக்கப்பட்டது சந்தர்ப்பத்தால் என்பதை உணர்த்த,
சந்தோஷித்த இதயம்,
வேதனையில், மகிழ்ந்தது...
பாராட்டுக்கள் அமரன்...
(சரிதானோ?)
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
ஆஹா அக்னியாரின் பதில் கவியும் அசத்தல்தான். அமரனின் கவியையே பாதிதான் புரிந்து மீதிக்கு விளக்கம் வேண்டி நிற்கிறேன்...அதற்குள் அக்னி நீங்களுமா...?
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
தென்றலே என்னை தீண்டாதே...!
ஒளிகொடுக்கும் என் மதி கெடுக்காதே...!
படித்துப் பார்த்தேன் காதலை புறிந்துக்கொண்டேன்...
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!
உங்கள் விளக்கம் சரியாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன் அக்னி. ஏனென்றால் புரிந்துகொண்டு உடனே வேறு கவிதை தந்திருக்கிறீர்களே.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நன்றி சிவா,அக்னி,ஓவியன், வரிப்புலி, இனியவள்...
அக்னி பதில்க் கவிதை அருமை..
என் கவிதைக்கு நீங்கள் சொன்னது ஒரு பார்வை..
ஓவியன் சொன்னது இன்னொரு பார்வை.
வரிப்புலியும் புரிந்து கொண்டார்..
அழகான பின்னூட்டமுமிட்டார். தொடர வேண்டுகின்றேன்.
இனியவள் கவிதை அருமை...
சிவா...என்னைப் பொறுத்தவரை கல்யாணத்தில் முடியும் காதலை ஜெயிப்பதாக கருதமுடியாது. அதுபோல கல்யாணத்தில் முடியாத காதல் தோத்தாக கருதமுடியாது.
காதலித்தவன்/காதலித்தவள் நல்லவள் என்பது உண்மையானால் அதுதான் ஜெயித்த காதல்...அதை நினைத்தே இதை எழுதினேன். சரியா? தவறா நீங்களே சொல்லுங்கள்.
Last edited by அமரன்; 21-07-2007 at 04:03 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks