வேட்டை நாய்
கச்சிதமாய் வேட்டை
முடித்து வீடு ஏக,
பாலுண்டு பசிதீர்க்க
இன்னமும்
தாய்க்காகத் தவமிருக்கின்றன
குட்டி முயல்கள்.....!
வேட்டை நாய்
கச்சிதமாய் வேட்டை
முடித்து வீடு ஏக,
பாலுண்டு பசிதீர்க்க
இன்னமும்
தாய்க்காகத் தவமிருக்கின்றன
குட்டி முயல்கள்.....!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
இரு வகையில் பார்க்கலாம் ஓவியன்...
வேட்டை நாய்களின் வேட்டை,
கடமையா... வெறிச்செயலா..?
ஆனால்,
கடமையெனினும், வெறியாட்டமெனினும்,
பாதிக்கப்படுவது முயல்களே...
போரினால் பாதிக்கப்படும்,
பொதுமக்கள், முயல்களாக...
பாராட்டுக்கள்...
Last edited by அக்னி; 21-07-2007 at 06:00 AM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அருமை ஓவியன். வேட்டை நாயின் வேட்டையில் சிக்கியது தாய் முயல் மட்டுமல்ல அதன் சேய்களும்தான். இந்த மாதிரியான சிறிய அதே சமயம் ஆழமான அர்த்தமிருக்கும் கவிதைகள் மிக நன்று. பாராட்டுக்கள் ஓவியன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கவிதை அருமை ஓவியன்...
ஏவாளன் சொல்கேட்டு
பறித்து விட்டது ஒருயிரை
குற்றவாளி யார் இங்கு ?
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நல்ல கவிதை ஓவியன். தாய் முயல் வேட்டையாடப்பட்டதால் தவித்து காத்திருக்கின்றன சேய் முயல்கள்..
வேட்டையாடியது நாயின் தவறா..? ஏவியவன் தவறா?
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
வேட்டைநாய்....இது நேரடியாக நாயை குறிக்கலாம். அல்லது இதன் குணத்தை அடிப்படையாக வைத்து மனிதனைக்குறிக்கலாம். அப்படி மனிதனை குறிப்பதாகவே எனக்கு தெரிகின்றது. வேலைக்குப் போனவன். வயலுக்குப் போனவன் என எத்தனை பேரை கொன்று குவிக்கின்றனர். சில ராணுவமும் பல தீவிரவாதிகளும் . அவர்களைத் தேடி அன்புபசியில் பலர் வயிற்றுப்பசியில் சிலர் என எத்தனை ஜீவன்கள்..நெஞ்சு வெடிக்கும் நிகழ்வுகள். இதில் யாரை குற்றம் சொல்வது? கடமையைச் செய்யும் வேட்டை நாயையா? ஏவிவிடும் கயவர்களையா? ஓவியன் நாய், முயலென மிருகங்களை நினைத்து சொன்னாலும் அங்கே நான் மனிதர்களையும் பார்கின்றேன். பாராட்டுக்கள் ஓவியன்.
Last edited by ஓவியன்; 21-07-2007 at 07:28 AM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
தாய் மூயல் நாய்க்கு இரையானது, இனி குட்டிகள் பசியால் செத்து காக்கை இரையாகுமே,
ஏற்பது கடினம் ஆனால் படைப்பின் இலக்கனம் இதுவல்லவா
உண்மைதான் அமர், உண்மையில் நான் நேரடியாகவே வரிகளை வடித்தாலும் அக்னியின் பின்னூட்டத்திற்கு பின் வேறு ஒரு கோணம் கிடைக்கவே, உருவகக் கவிதையாகிவிட்டது. ஆனால் ஒரு வித்தியாசம் முயல்களால் பதிலுக்கு நாயை வேட்டையாட முடியாது ஆனால் இங்கே மக்கள் ஒன்று திரண்டால் கயவர்களை வேட்டையாடித் தீர்த்துவிடுவார்கள்.
நன்றி அமர் - உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு.
Last edited by ஓவியன்; 21-07-2007 at 08:10 AM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks