Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 40

Thread: வேட்டை...!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2

    வேட்டை...!

    வேட்டை நாய்
    கச்சிதமாய் வேட்டை
    முடித்து வீடு ஏக,
    பாலுண்டு பசிதீர்க்க
    இன்னமும்
    தாய்க்காகத் தவமிருக்கின்றன
    குட்டி முயல்கள்.....!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    இரு வகையில் பார்க்கலாம் ஓவியன்...

    வேட்டை நாய்களின் வேட்டை,
    கடமையா... வெறிச்செயலா..?
    ஆனால்,
    கடமையெனினும், வெறியாட்டமெனினும்,
    பாதிக்கப்படுவது முயல்களே...
    போரினால் பாதிக்கப்படும்,
    பொதுமக்கள், முயல்களாக...

    பாராட்டுக்கள்...
    Last edited by அக்னி; 21-07-2007 at 06:00 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அருமை ஓவியன். வேட்டை நாயின் வேட்டையில் சிக்கியது தாய் முயல் மட்டுமல்ல அதன் சேய்களும்தான். இந்த மாதிரியான சிறிய அதே சமயம் ஆழமான அர்த்தமிருக்கும் கவிதைகள் மிக நன்று. பாராட்டுக்கள் ஓவியன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    கவிதை அருமை ஓவியன்...

    ஏவாளன் சொல்கேட்டு
    பறித்து விட்டது ஒருயிரை
    குற்றவாளி யார் இங்கு ?
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அக்னி View Post
    கடமையெனினும், வெறியாட்டமெனினும்,
    பாதிக்கப்படுவது முயல்களே...
    போரினால் பாதிக்கப்படும்,
    பொதுமக்கள், முயல்களாக...
    நன்றி அக்னி!

    வேட்டையாட வந்தவன்
    வெட்டையாடப் பட்டான்
    ஈழத்தில் ஓயாத அலைகள் 01,02,03 !

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    நல்ல கவிதை ஓவியன். தாய் முயல் வேட்டையாடப்பட்டதால் தவித்து காத்திருக்கின்றன சேய் முயல்கள்..
    வேட்டையாடியது நாயின் தவறா..? ஏவியவன் தவறா?

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அருமை ஓவியன். வேட்டை நாயின் வேட்டையில் சிக்கியது தாய் முயல் மட்டுமல்ல அதன் சேய்களும்தான். இந்த மாதிரியான சிறிய அதே சமயம் ஆழமான அர்த்தமிருக்கும் கவிதைகள் மிக நன்று. பாராட்டுக்கள் ஓவியன்.
    மிக்க நன்றி சிவா.ஜி!
    முன்பொருமுறை ஊரில் என் செல்ல நாய் ஒரு முயலை வேட்டையாடி வந்தது, அப்போது அது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை, ஆனால் இன்று சட்டென்று அந்த சம்பவம் என் ஞாபக அலையில் சிக்கிய போது - மனம் வலித்தது. அந்த வலிகளே இங்கே இந்த வரிகளாக.......

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வேட்டைநாய்....இது நேரடியாக நாயை குறிக்கலாம். அல்லது இதன் குணத்தை அடிப்படையாக வைத்து மனிதனைக்குறிக்கலாம். அப்படி மனிதனை குறிப்பதாகவே எனக்கு தெரிகின்றது. வேலைக்குப் போனவன். வயலுக்குப் போனவன் என எத்தனை பேரை கொன்று குவிக்கின்றனர். சில ராணுவமும் பல தீவிரவாதிகளும் . அவர்களைத் தேடி அன்புபசியில் பலர் வயிற்றுப்பசியில் சிலர் என எத்தனை ஜீவன்கள்..நெஞ்சு வெடிக்கும் நிகழ்வுகள். இதில் யாரை குற்றம் சொல்வது? கடமையைச் செய்யும் வேட்டை நாயையா? ஏவிவிடும் கயவர்களையா? ஓவியன் நாய், முயலென மிருகங்களை நினைத்து சொன்னாலும் அங்கே நான் மனிதர்களையும் பார்கின்றேன். பாராட்டுக்கள் ஓவியன்.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by மதி View Post
    தாய் முயல் வேட்டையாடப்பட்டதால் தவித்து காத்திருக்கின்றன சேய் முயல்கள்..
    வேட்டையாடியது நாயின் தவறா..? ஏவியவன் தவறா?
    Quote Originally Posted by இனியவள் View Post
    ஏவாளன் சொல்கேட்டு
    பறித்து விட்டது ஒருயிரை
    குற்றவாளி யார் இங்கு ?
    அம்பை நோவதா?, எய்தவனை நோவதா எனக்கும் சரியாக விடை தெரியாத வினா இது.....
    அம்பு இருப்பதால் தானே அம்பை ஏய்கிறான் என்ற கோணத்தில் பார்த்தால் தவறுக்கு அம்பும் துணை போகிறதே......

    பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி மதி, மற்றும் இனியவள்!.
    Last edited by ஓவியன்; 21-07-2007 at 07:28 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    தாய் மூயல் நாய்க்கு இரையானது, இனி குட்டிகள் பசியால் செத்து காக்கை இரையாகுமே,
    ஏற்பது கடினம் ஆனால் படைப்பின் இலக்கனம் இதுவல்லவா
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அமரன் View Post
    ஓவியன் நாய், முயலென மிருகங்களை நினைத்து சொன்னாலும் அங்கே நான் மனிதர்களையும் பார்கின்றேன். பாராட்டுக்கள் ஓவியன்.
    உண்மைதான் அமர், உண்மையில் நான் நேரடியாகவே வரிகளை வடித்தாலும் அக்னியின் பின்னூட்டத்திற்கு பின் வேறு ஒரு கோணம் கிடைக்கவே, உருவகக் கவிதையாகிவிட்டது. ஆனால் ஒரு வித்தியாசம் முயல்களால் பதிலுக்கு நாயை வேட்டையாட முடியாது ஆனால் இங்கே மக்கள் ஒன்று திரண்டால் கயவர்களை வேட்டையாடித் தீர்த்துவிடுவார்கள்.

    நன்றி அமர் - உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு.
    Last edited by ஓவியன்; 21-07-2007 at 08:10 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    தாய் மூயல் நாய்க்கு இரையானது, இனி குட்டிகள் பசியால் செத்து காக்கை இரையாகுமே,
    ஏற்பது கடினம் ஆனால் படைப்பின் இலக்கனம் இதுவல்லவா
    உண்மைதான் நண்பரே!

    அப்பாவி மிருகங்களைப் படைத்த அதே கடவுள் தானே பயங்கர மாமிச உண்ணிகளையும் படைத்துள்ளார்.......!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •