Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 56

Thread: விமர்சனம் செய்வது எப்படி?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    விமர்சனம் செய்வது எப்படி?

    விமர்சனங்கள்:

    இன்றைக்கு நம் மன்றத்தில் விமர்சிப்பவர்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவானவர்களே இருக்கிறார்கள். அதிலும் பணிப்பளுவில் பல கவிதைகளை அவர்கள் கவனிப்பதில்லை. இன்றைக்கு நம் மன்றத்தில் வேறெந்த மன்றத்திலும் இல்லாத அளவிற்கு கவிதைகள் அதிலும் தரமான கவிதைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. புதுப்புது கவிஞர்களும் வந்துகொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் சிலர் விமர்சனம் செய்வதில் தயங்குவது அல்லது செய்யாமல் இருப்பது ஏன்?

    மன்ற ஆஸ்தான விமர்சகர்களாகிய இளசு பென்ஸ் ஆகியோர் பற்றி சொல்லிவிட்டு எனது கருத்தை அடுத்த பதிவில் தொடங்குகிறேன்.

    இளசு:

    விமர்சனங்கள் செய்வதில் நம் மன்றத்தில் இளசு அண்ணாவுக்கு இணை வேறு எவருமில்லை. ஆற்று நீரை அள்ளி மொண்டு குடிப்பது அவரோட வேலை (இதை யார் சொன்னார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.) மன்றத்தில் உள்ள எல்லா கவிஞர்களும் இளசு பெயர் நம் கவிதைக்கு வந்திருக்காதா என்று ஏங்குவார்கள்.

    நிறை : மிக ஆழமான வரிகளில் விமர்சனங்கள். சில சமயங்களில் கவிதையை மிஞ்சும் விமர்சனங்கள்

    குறை : கவிதையில் இன்ன குறை இருக்கிறது என்று சுட்டிக் காட்டாமை...

    பென்ஸ் :

    இளசு அண்ணாவுக்கு அடுத்து பென்ஸ். சில சமயங்களில் அவரை மிஞ்சுகிறாரோ என்று சந்தேகம் வரும்... ஆனால் இருவரின் பாதையும் வேறு. மனவியலாக கொஞ்சம் அலசுபவர் பென்ஸ். ஆங்காங்கே ஏழுத்துப் பீழைகாள் சாரிங்க.. எழுத்துப்பிழைகள் இருந்தாலும் கருத்தைப் படிக்கும்போது இவர் ஏதோ மனோதத்துவ டாக்டர் போலும் என்று எண்ணத்தோன்றும்.. சில

    நிறை : இளசு அண்ணாவுக்கு அடுத்து விமர்சனங்களில் தூள் கிளப்பும் வாரிசு. கவிதையின் நிறைகுறைகளை நன்றாக அலசி எடுப்பது.. அக்குவேறு ஆணிவேறாக பிரிப்பது..

    குறை : எஸ்கேப்/ எழுத்துப்பிழை.

    தற்சமயங்களில் ஓவியன் அமரன் ஆகியோர் நல்ல விமர்சனங்கள் செய்கிறார்கள்.. இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் வேண்டும்.. எழுத்துக்களை அடக்கி இளசு அண்ணாபோல் விமர்சனம் செய்யமுடியாவிடினும் ஓரளவு முயற்சிக்கவேண்டும்.. சில சமயங்களில் காயத்திரி, நேரம் கிடைத்தால் ஓவியா, ஷீ-நிசி, என்றாவது ஒருமுறை வாத்தியார், இன்னும் பலர்..

    சிலர் விமர்ச்சிக்க முடியாமல் தயங்குகிறார்கள்... அல்லது அப்படியும் இருக்கிறார்கள் என்று நினைக்கீறேன்.. அவர்களுக்காக இந்த திரி தொடங்கியிருக்கிறேன். அவரவர் தத்தம் அனுபவங்களைப் பகிருங்கள்...

    ஒரு கவிதைக்கு எனக்கு எப்படி விமர்சனம் வருகிறது என்பதை மட்டும் ஒரு பதிவாக சொல்லிவிடுகிறேன். மற்றவை இளசு அண்ணாவும் பென்ஸும் விளாவாரியாக சொல்ல நம் மன்ற நண்பர்கள் அதையும் மிஞ்சும் அளவுக்கு தம் அனுபவங்கள் அல்லது கருத்துக்களை இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

    தொடரும்....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஆதவா...

    மிக நல்ல திரி இது..

    கொளுத்தி இருக்கிறாய்
    கொழுந்துவிட்டு வளரட்டும்..
    நானும் உடன் வருவேன்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இளசு அண்ணா.. உங்களை குறிவைத்து ஆரம்பித்த திரிதான்.... எல்லாரும் தங்கள் கருத்துக்களையும் விமர்சனம் செய்வது பற்றிய ஆலோசனைகளையும் வழங்குவார்கள் என்ற நப்பாசையில் ஆரம்பித்த திரி..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    எப்படி கவிதைகளுக்கு விமர்சனம் எழுதுவது என்று தெரியாமல் நான் இந்த பக்கமே வராமல் இருந்தேன். காரணம் கவிதையின் அர்த்தம் என்னவென்று தெரியாமல் இருப்பதால்தான்.

    இந்த ஒரு வாரமாகத்தான் நான் இந்தப்பக்கமே வருகிறேன்.

    உங்கள் விளக்கம் என்னைப் போன்றோர்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    தொடருங்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இளசு அண்ணா,பென்சண்ணா, தாமரை அண்ணா ,ஆதவா அனைவரும் சொல்லுங்கள்..கற்று தேருகின்றேன்...அதவா நல்ல திரி. நன்றி.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    விமர்சனமா...
    அதற்கு இல்லை சனமா..?
    ஆதவரே உங்கள் விமர்சனத் திரியைத் தொடருங்கள்...
    பின்னர் ஹவுஸ் ஃபுள்தான்....

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஆகா அருமையான ஒரு திரி ஆதவா!

    ஒரு ஆக்கத்தைப் பதித்துவிட்டு அதற்கு இளசு அண்ணா பென்ஷூ அண்ணா, தாமரை அண்ணா மற்றும் ஆதவா ஆகியோரின் பின்னூட்டம் கிடைக்காதா என்று ஏங்கி அவை கிடைத்தபோது ஆனந்தத்தில் எத்தனையோமுறை திளைத்திருக்கிறேன். இப்போது அவர்களின் விமர்சன இரகசியம் அறிய ஒரு சந்தர்ப்பம், அதனூடு என்னையும் இந்த விமர்ச்சிக்கும் கலையில் வளர்க்க மிக்க ஆவலோடு, ஆதவனுக்கு நன்றி பகர்ந்து திரியின் வெற்றிகர நகர்விற்காகக் காத்திருக்கிறேன்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    இளசு அண்ணா,பென்சண்ணா, தாமரை அண்ணா ,ஆதவா அனைவரும் சொல்லுங்கள்..கற்று தேருகின்றேன்...அதவா நல்ல திரி. நன்றி.

    கடுதாசிவழ்க்கை

    அமர(ன்) கவிதைகள்

    நண்பர்களே! எனது படைப்புகளில் உள்ள நிறைகளைச் சுட்டுவதன் மூலம் ஓரடி வளர்ந்தால் குறைகளைச் சுட்டுவதன் மூலம் பல அடி வளர்கின்றேன். எனவே எனது படைப்புகளில் உள்ள நிறைகளுடன் குறைகளையும் சுட்டிக்காட்டுங்கள். நன்றி.


    வழ்க்கை என்று தமிழில் சொல்லில்லையே அமரரே!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நன்றி ஆதவா..திருத்திவிட்டேன்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    எனக்கு ரொம்ப ரொம்ப பிரயோசனப்படப்போகும் திரி
    ஆரம்பித்தமைக்கு நன்றி ஆதவரே....
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    வாழ்த்துக்கள் ஆதவா.....

    நல்ல நல்ல திரிகளை உருவாக்கி வரும் ஆதவாவிற்கு என் வாழ்த்துக்கள்!

    இளசு மற்றும் பென்ஸ் அவர்கள் மிக அதிகமாய் இத்திரிக்கு உயிரூட்டவேண்டும் என்பது என் வேண்டுகோள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    இளசு மற்றும் பென்ஸ் அவர்கள் மிக அதிகமாய் இத்திரிக்கு உயிரூட்டவேண்டும் என்பது என் வேண்டுகோள்!
    ஷீ!
    நீங்கள் ஒவ்வொரு கவிதைக்கும் தவறாமல் பின்னூட்டம் இடுபவராக இருந்தாலும் அதிகமாக விமர்சிபதில்லையே என்று நான் எண்ணுவதுண்டு. என் ஏக்கத்தை நீங்கள் தீர்க்கவேண்டுமென இந்த திரியின் வாயிலாக வேண்டிக் கொள்கிறேன்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •