விமர்சனங்கள்:
இன்றைக்கு நம் மன்றத்தில் விமர்சிப்பவர்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவானவர்களே இருக்கிறார்கள். அதிலும் பணிப்பளுவில் பல கவிதைகளை அவர்கள் கவனிப்பதில்லை. இன்றைக்கு நம் மன்றத்தில் வேறெந்த மன்றத்திலும் இல்லாத அளவிற்கு கவிதைகள் அதிலும் தரமான கவிதைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. புதுப்புது கவிஞர்களும் வந்துகொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சிலர் விமர்சனம் செய்வதில் தயங்குவது அல்லது செய்யாமல் இருப்பது ஏன்?
மன்ற ஆஸ்தான விமர்சகர்களாகிய இளசு பென்ஸ் ஆகியோர் பற்றி சொல்லிவிட்டு எனது கருத்தை அடுத்த பதிவில் தொடங்குகிறேன்.
இளசு:
விமர்சனங்கள் செய்வதில் நம் மன்றத்தில் இளசு அண்ணாவுக்கு இணை வேறு எவருமில்லை. ஆற்று நீரை அள்ளி மொண்டு குடிப்பது அவரோட வேலை (இதை யார் சொன்னார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.) மன்றத்தில் உள்ள எல்லா கவிஞர்களும் இளசு பெயர் நம் கவிதைக்கு வந்திருக்காதா என்று ஏங்குவார்கள்.
நிறை : மிக ஆழமான வரிகளில் விமர்சனங்கள். சில சமயங்களில் கவிதையை மிஞ்சும் விமர்சனங்கள்
குறை : கவிதையில் இன்ன குறை இருக்கிறது என்று சுட்டிக் காட்டாமை...
பென்ஸ் :
இளசு அண்ணாவுக்கு அடுத்து பென்ஸ். சில சமயங்களில் அவரை மிஞ்சுகிறாரோ என்று சந்தேகம் வரும்... ஆனால் இருவரின் பாதையும் வேறு. மனவியலாக கொஞ்சம் அலசுபவர் பென்ஸ். ஆங்காங்கே ஏழுத்துப் பீழைகாள் சாரிங்க.. எழுத்துப்பிழைகள் இருந்தாலும் கருத்தைப் படிக்கும்போது இவர் ஏதோ மனோதத்துவ டாக்டர் போலும் என்று எண்ணத்தோன்றும்.. சில
நிறை : இளசு அண்ணாவுக்கு அடுத்து விமர்சனங்களில் தூள் கிளப்பும் வாரிசு. கவிதையின் நிறைகுறைகளை நன்றாக அலசி எடுப்பது.. அக்குவேறு ஆணிவேறாக பிரிப்பது..
குறை : எஸ்கேப்/ எழுத்துப்பிழை.
தற்சமயங்களில் ஓவியன் அமரன் ஆகியோர் நல்ல விமர்சனங்கள் செய்கிறார்கள்.. இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் வேண்டும்.. எழுத்துக்களை அடக்கி இளசு அண்ணாபோல் விமர்சனம் செய்யமுடியாவிடினும் ஓரளவு முயற்சிக்கவேண்டும்.. சில சமயங்களில் காயத்திரி, நேரம் கிடைத்தால் ஓவியா, ஷீ-நிசி, என்றாவது ஒருமுறை வாத்தியார், இன்னும் பலர்..
சிலர் விமர்ச்சிக்க முடியாமல் தயங்குகிறார்கள்... அல்லது அப்படியும் இருக்கிறார்கள் என்று நினைக்கீறேன்.. அவர்களுக்காக இந்த திரி தொடங்கியிருக்கிறேன். அவரவர் தத்தம் அனுபவங்களைப் பகிருங்கள்...
ஒரு கவிதைக்கு எனக்கு எப்படி விமர்சனம் வருகிறது என்பதை மட்டும் ஒரு பதிவாக சொல்லிவிடுகிறேன். மற்றவை இளசு அண்ணாவும் பென்ஸும் விளாவாரியாக சொல்ல நம் மன்ற நண்பர்கள் அதையும் மிஞ்சும் அளவுக்கு தம் அனுபவங்கள் அல்லது கருத்துக்களை இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
தொடரும்....
Bookmarks