Originally Posted by
ரவுத்திரன்
///எதிர்கவிதை எழுதிவிட்டால் அது விமர்சனமாகிவிடுமா? இல்லை. அது எதிர்கவிதை என்ற பட்டியலில் சேருமே ஒழிய, அப்படைப்பிற்கான முழுமையான விமர்சனமாகாது.. அப்படைப்பிற்கான அலசலாக அது அமையாது. அல்லது அப்படி அமையப்பெற்ற எதிர்கவிதையாக இருக்கவேண்டும்.///
எதிர்க்கவிதை என்றால் என்ன? பதப்படை வியூகத்தை உடைத்து கருத்தினைத் தனிமைப்படுத்தி எதிராடுவதுதானே. இது ஒரு வித கரு அலசல்தானே...
ஒரு சொன்னக் கணக்கு..
கவிஞன் தாய்.. கவிதை சேய்.. சேயின் சேய் எதிர்க்கவிதை. அழகும் ஆரோக்கியமும் நிறைந்த பேரன் கிடைத்ததை விட பாட்டியின் சிறப்பை விட சிறந்த சிறப்பு ஏதுமுண்டோ. பேரன் பிறந்ததும் பாட்டிக்கு பொறுப்புக் கூடுது. பக்குவம் கூடுது.. எல்லாத்துக்கும் மேலாக முதிர்ச்சி கூடுது.. தொடர் சந்ததியில் இவை பிரதிபலித்தால் எதிர்க்கவிதை விமர்சனம் பட்டைதீட்ட நல்ல ஆயுதம்தானே
Bookmarks