Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5
Results 49 to 56 of 56

Thread: விமர்சனம் செய்வது எப்படி?

                  
   
   
  1. #49
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    இப்பொழுது இரண்டாம் பகுதியில் உள்ளதை இங்கு இணைத்தால் எனது கட்டுரை நிறைவு..

    விமர்சிக்கப்படுபவரின் தேவை அறிந்து விமர்சித்தல்..

    சிலபல பின்னூட்டங்களுக்குப் பிறகு படைப்பாளியின் எண்ணம், பார்வை, கோணம், என்ன முயற்சிக்கிறார், எந்த ஸ்டைலில் எழுதுகிறார் எனப் பல நுணுக்கங்கள் புரிந்து விடுகின்றன, (உண்மையிலேயே விமர்சனக் கண்ணோட்டத்தில் அவர் படைப்பை அணுகி இருந்தால்).

    ஒவ்வொருவருக்கும் தன் படைப்பு இப்படி இருக்க வேண்டும் என்று ஒரு கனவு இருக்கும். விமர்சனத்திற்கான பின்னூட்டங்களிலும் அடுத்தடுத்து வரும் படைப்புகளிலும் அவரின் இந்த ஆர்வம் தன்னாலேயே வெளிப்படும். பின்னூட்டங்களுக்கு அவர்கள் கொடுக்கும் பதில்களில் அந்த ஆர்வம் ஆழப் புதைந்து கிட்க்கும்.

    எனவே விமர்சனம் செய்தாயிற்று முடிந்தது என்று விட்டு விடாமல் அதற்கானப் பதில்களைப் படித்துப் புரிந்து கொள்ளுதல் மிக அவசியமாகிறது.

    அதாவது

    படைப்பு விமர்சிக்கப் படுகிறது - அடுத்தப் படைப்பு உயர்வடைகிறது
    விமர்சனம் விமர்சிக்கப் படுகிறது - அடுத்த விமர்சனம் உயர்வடைகிறது.
    விமர்சனம் உயர்வடைகிறது - படைப்பும் உயர்வடைகிறது
    விமர்சனம் செய்தவர் ஆர்வத்தால் படைக்கத் தொடங்குகிறார் (பென்ஸ் உங்களைச் சொல்லலை )
    படைத்தவர் உற்சாகமாய் விமர்சிக்கக் கற்கிறார்..

    இப்படி இரண்டறக்கலத்தல்

    இதுதான் விமர்சனம் - படைப்பு இரண்டிற்கும் பெருமை..

    இத்துடன் என் நீண்ட உரையை முடித்து வாய்ப்புக் கொடுத்தவர்களுக்கு நன்றி கூறி அமர்கிறேன்..

    (இவ்வளவு சொன்ன பிறகு என் விமர்சன எதிர்பார்ப்பை நீங்கள் கஷ்டப்படாமல் அறியத் தராமல் இருப்பேனா?. நான் எனக்கு அளிக்கப்படும் விமர்சனங்களில் மிகவும் ரசிப்பது என்ன தெரியுமா? கேள்விகளைத்தான்!)
    Last edited by தாமரை; 07-08-2008 at 03:25 PM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #50
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post


    திருப்பதி போகணும்...

    அடுத்துத் திங்கள் கிழமைதான்...
    அடடா!!! நான் அடுத்தவாரம்.... ஜஸ்ட் மிஸ்... .

  3. #51
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    நல்ல விளக்கங்கள்.. திரு.ஆதவா ஆரம்பித்த திரியின் நோக்கம் நிறைவேறி வருகிறது என்று நினைக்கிறேன்.

    விமர்சனம் என்பது ஒருவருடைய எண்ணமே அன்றி வேறில்லை. அவ்விமர்சனத்தை எடுத்துக்கொள்ளும் எண்ணமே படைப்பின் உயர்வு தாழ்வுக்கு வழி. உதாரணத்திற்கு

    திரு.சிவா.ஜி அவர்கள் எழுதிய கோஹினூர் கொலைகள் முடிவு சரியில்லை என்று திரு.ஆரென் அவர்கள் சொல்ல, அந்த விமர்சனம் அவரது அடுத்த நிலைக்குச் சென்று முடிவை மாற்றியமைத்தது.. இது பாஸிடிவாக எடுத்துக்கொள்ளத் தெரிந்தவர்களின் நிலை. சிலர் விடாபிடி. தான் செய்தது சரியே என்று ஒற்றைக்காலில் தவமிருப்பவர்களும் உண்டு. நெகடிவ். விமர்சனங்களால் ஒரு படைப்பு உயர்கிறதா என்று கேட்டால்...

    ஆம் என்று சொல்லலாம்.. அது எவ்வளவு தூரம் தாக்கம் தருகிறது என்பதைப் பொறுத்து.

    இல்லை என்று சொல்லலாம்.. ஒரு படைப்பின் அடுத்த கட்டம், படைப்பாளியின் தேடலில் இருக்கிறது...... அது விமர்சனத்தை மீறி.....

    ஒரு தளத்தில் நண்பர் ஒருவர் கவிதை எழுதியிருந்தார்... ஆஹா காரங்கள் எழுந்தன பின்னூக்கங்களாக.... ஒருவர் விளக்கம் கேட்டார்.. கவிஞர் விளக்கம் சொன்னார். அதற்கும் ஆஹா!! ஓஹோ!!! அப்படியென்றால் அவர்கள் கருத்தைப் படிக்கிறார்களா என்பது சந்தேகம். இரண்டாவது எதிர்கருத்தே இல்லை என்று ஆணித்தரமாக அடிக்கிறார்கள் என்பது......

    அதே தினத்தில் நானும் என் கருத்தைப் பதித்திருந்தேன்.. உண்மையில் கவிஞருடைய விளக்கத்தில் " பூவும் பொட்டும் மனைவிக்கு மட்டும் சொந்தம்" என்று எழுதியிருந்தார். இந்த வரியை மாற்றாமல் தந்திருக்கிறேன். அப்படியென்றால் கணவனுக்கு சொந்தமில்லை என்ற கருத்து பின்புலத்தில் இருக்கிறது. அல்லவா? நானோ, கணவனுக்கும் அது சொந்தம்தான் என்று வாதாடினேன்.... ஆனால், அதை ஏற்றுக் கொள்ளவேயில்லை மேலும் மனைவிக்கு மட்டும் சொந்தம் என்றுதான் சொன்னேன், கணவனுக்கு சொந்தமில்லை என்று சொல்லவில்லை என்று கண்மூடித்தனமான விவாதம்வேறு...

    ஒரு கருத்தைப் பதிக்கும் போது அது வேறு கருத்து சொல்கிறதா என்று கவனிக்கவேண்டும்.. விமர்சனத்தில் இது முக்கியம்.

    பூவும் பொட்டும் மனைவிக்கு மட்டும் சொந்தம் - கணவனுக்கு சொந்தமில்லை என்று அர்த்தம்
    பூவும் பொட்டும் மனைவிக்குச் சொந்தம் - கணவனுக்குப் பங்கில்லை என்று அர்த்தம் வரவில்லை.

    ஒரு படைப்பாளி சொல்வது எல்லாமே தவறு என்று ஒப்புக்கொள்ள முடியாது
    ஒரு விமர்சகன் சொல்வது எல்லாமே சரி என்று ஒப்புக்கொள்ள முடியாது.

    விமர்சனம் என்பது என்ன... ஒரு அலசல்.. அது அப்படியும் இருக்கலாம் இப்படியும் இருக்கலாம். இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எதுவுமில்லை.

    ஒரு சிறந்த விமர்சகன் என்பது இன்னொரு விமர்சகனால் பார்க்கப்பட்டால் மட்டுமே... பாராட்டு சொல்பவனெல்லாம் சிறந்த விமர்சகன் என்று ஒப்புக் கொள்ள முடியாது.

    தவறு மட்டுமே சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பதும், விமர்சனமல்ல.

    எதிர்கவிதை எழுதிவிட்டால் அது விமர்சனமாகிவிடுமா? இல்லை. அது எதிர்கவிதை என்ற பட்டியலில் சேருமே ஒழிய, அப்படைப்பிற்கான முழுமையான விமர்சனமாகாது.. அப்படைப்பிற்கான அலசலாக அது அமையாது. அல்லது அப்படி அமையப்பெற்ற எதிர்கவிதையாக இருக்கவேண்டும்.

    பாராட்டு, நன்றி, ஆஹோ, ஓஹோ, பேஸ்.... எல்லாமே போலி வார்த்தைகள்.. இதுவும் விமர்சன பட்டியலில் சேராது. இதை சிலர் பல வார்த்தைகளை வைத்து செய்வார்கள்.. சிலருக்கு நேரமில்லை.. ஓரிரு வார்த்தைகள்.

    விமர்சனம் படைப்பின் ஒவ்வொரு எழுத்திலும் இருக்கிறது.

    ஒரு பிழை குறிப்பதும், வித்தியாசமான கருவை சுட்டுவதும் நேரம் கிடைக்காத எந்த ஒருவரும் விமர்சனமாக செய்யலாம்... ஒரு கவிதை உங்களுக்குப் புரியவில்லையா? அதை ஏற்காமல் அதற்குண்டா விளக்கம் கேட்டுப் பெறலாம்.. அதுவும் விமர்சன உத்தி. அவ்விளக்கத்திற்கு கவிதை பொருந்துகிறதா என்று கண்டால்... அது விமர்சனம்..

    சிலருக்கு பாணி இருக்கிறது.. அவரது நடையில் அது தெரியும்..

    இளசுவுக்கு ஒரு பாணி..
    பென்ஸுக்கு ஒரு பாணி..
    அமரன், அக்னி, ஆதவன், நாகரா, என்று பலரும்...
    (தாமரை அதிகமாய் விமர்சனம் செய்து இதுவரை நான் பார்த்ததில்லை)

    அவரது நடையை அக்கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.. சிலருக்கு நேரமின்மை... அதனால் சொற்களைச் சுருக்கி, விளக்கத்தை விவரிக்கிறார்கள். சிலருக்கு நேரம் வாய்த்திருக்கிறது... பந்தி பந்தியாக செய்கிறார்கள்...

    உண்மையில், விமர்சனம் வரிகளைப் பொறுத்தல்ல.. வார்த்தைகளைப் பொறுத்து..

    நேரம் கிடைத்தால் தொடருகிறேன்.

  4. #52
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அருமை..

    பொதிக் கவிதைகளை பிரித்துக் காட்டுவதா.. பொடி வைத்து விமர்சிப்பதா.. எது சிறந்தது? சொல்லின் செல்வனே..

  5. #53
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    பொருள் புதைந்த கவிதைகள் விமர்சனத்திற்காக வைக்கப்படுகின்றவா என்பதுதான் முதலில் கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வியாகும். விமர்சனத்திற்காக வைக்கப்படாதக் கவிதையை ஏன் விமர்சிக்க வேண்டும் அமரா?

    அப்படி பொருள் புதைந்த ஒரு கவிதையை விமர்சனத்திற்காக வைப்பவர் அதற்கேற்றார் போல் தலைப்பிலோ அல்லது கவிதையின் ஒரு வார்த்தையிலோ இது பொதுக்கருத்து என்பதற்கான அடையாளம் இருக்கும். அவற்றை பொருள் விரித்து விமர்சிக்கலாம்..

    ஆனால் அந்நியமான அத்தியாயம் போன்றவற்றை பொடி வைத்து விட்டு விடுவது சாலச் சிறந்தது.

    எப்பொழுதும் விமர்சனம் செய்யும் பொழுது ஒரு சின்ன விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்..

    எளிதில் புரியும் விஷயங்களை சுருக்கமாகவும், சுருங்கச் சொன்ன விஷயங்களை விரிவாகவும் அலசினால் கவிதையின் மகத்துவம் அழகாக விளங்கும்.
    Last edited by தாமரை; 11-08-2008 at 11:55 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #54
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2008
    Location
    அருகில்..
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    11,912
    Downloads
    4
    Uploads
    0
    ///எதிர்கவிதை எழுதிவிட்டால் அது விமர்சனமாகிவிடுமா? இல்லை. அது எதிர்கவிதை என்ற பட்டியலில் சேருமே ஒழிய, அப்படைப்பிற்கான முழுமையான விமர்சனமாகாது.. அப்படைப்பிற்கான அலசலாக அது அமையாது. அல்லது அப்படி அமையப்பெற்ற எதிர்கவிதையாக இருக்கவேண்டும்.///

    எதிர்க்கவிதை என்றால் என்ன? பதப்படை வியூகத்தை உடைத்து கருத்தினைத் தனிமைப்படுத்தி எதிராடுவதுதானே. இது ஒரு வித கரு அலசல்தானே...

    ஒரு சொன்னக் கணக்கு..

    கவிஞன் தாய்.. கவிதை சேய்.. சேயின் சேய் எதிர்க்கவிதை. அழகும் ஆரோக்கியமும் நிறைந்த பேரன் கிடைத்ததை விட பாட்டியின் சிறப்பை விட சிறந்த சிறப்பு ஏதுமுண்டோ. பேரன் பிறந்ததும் பாட்டிக்கு பொறுப்புக் கூடுது. பக்குவம் கூடுது.. எல்லாத்துக்கும் மேலாக முதிர்ச்சி கூடுது.. தொடர் சந்ததியில் இவை பிரதிபலித்தால் எதிர்க்கவிதை விமர்சனம் பட்டைதீட்ட நல்ல ஆயுதம்தானே

  7. #55
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by ரவுத்திரன் View Post
    ///எதிர்கவிதை எழுதிவிட்டால் அது விமர்சனமாகிவிடுமா? இல்லை. அது எதிர்கவிதை என்ற பட்டியலில் சேருமே ஒழிய, அப்படைப்பிற்கான முழுமையான விமர்சனமாகாது.. அப்படைப்பிற்கான அலசலாக அது அமையாது. அல்லது அப்படி அமையப்பெற்ற எதிர்கவிதையாக இருக்கவேண்டும்.///

    எதிர்க்கவிதை என்றால் என்ன? பதப்படை வியூகத்தை உடைத்து கருத்தினைத் தனிமைப்படுத்தி எதிராடுவதுதானே. இது ஒரு வித கரு அலசல்தானே...

    ஒரு சொன்னக் கணக்கு..

    கவிஞன் தாய்.. கவிதை சேய்.. சேயின் சேய் எதிர்க்கவிதை. அழகும் ஆரோக்கியமும் நிறைந்த பேரன் கிடைத்ததை விட பாட்டியின் சிறப்பை விட சிறந்த சிறப்பு ஏதுமுண்டோ. பேரன் பிறந்ததும் பாட்டிக்கு பொறுப்புக் கூடுது. பக்குவம் கூடுது.. எல்லாத்துக்கும் மேலாக முதிர்ச்சி கூடுது.. தொடர் சந்ததியில் இவை பிரதிபலித்தால் எதிர்க்கவிதை விமர்சனம் பட்டைதீட்ட நல்ல ஆயுதம்தானே

    திரு.ரவுத்திரன், இது உங்கள் பார்வை.. நான் சொன்னது என்னோட பார்வை. இரண்டுக்குமான மோதலுக்கு நான் வரவில்லை.

    எனக்குள்ளாக நான் வரையறுத்து வைத்துள்ளேன். அதனால்தான் அப்படியாக அமையப்பெற்ற எதிர்கவிதை முழுவிமர்சனம் ஆகலாம் என்ற சந்தேகத்தையும் உடன் இணைத்திருக்கிறேன்.

    நன்றி

  8. #56
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    கவிதைகளுக்கு விமர்சனம் எழுதுவதற்கே தனி கலை வேண்டும்

    எனக்கு அதெல்லாம் தெரியாது

    மனதுக்கு பிடித்து இருந்தால் ஒற்றை வரியில் சூப்பர் என்று கூட சில நேரங்களில் பதித்து இருப்பேன்

    அது அந்த கவிதையை எழுதிய எழுத்தாளருக்கு நான் கொடுக்கும் சிறிய ஊக்கம் என்பது எனது கருத்து (பின்னூட்டம் இடாமல் செல்வதற்கு இது எவ்வளவோ மேல் என்றும் எனக்கு தோன்றும்)

    வெறும் ஒற்றை வார்த்தை கூட பல படைப்புகளை கொடுக்க தூண்டும் என்பது எனது கருத்து

Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •