என் மனைவிக்கு ஒரு பழக்கம். அது எனக்குப்பிடிக்காததும் கூட.
வீட்டில் உள்ள தேனீர் கோப்பையின் கைப்பிடி உடைந்தாலும்
அதையேத்தான் பயன்படுத்துவார்.அவர் சொல்வதையும் கேட்காமல் நான் புதிய
கோப்பைகளை வாங்கி வந்து பயன் படுத்தச்சொன்னாலும் 'இருக்கட்டுங்க இந்த பழைய கோப்பை
உடைந்துவிட்டால் வேண்டுமென்றால் புதியதைப் பயன்படுத்தலாம்'
என்று புதியதை பத்திரமாக பேக் செய்து வைத்து விடுவார்.
இது மட்டுமல்ல எந்த புதிய பொருளை வாங்கினாலும் இதே கதைதான்.என்னைப்
பொறுத்தவரை எந்த பொருளை புதிதாக வாங்கினாலும்அப்போதே பயன்படுத்த வேண்டும்
பழையது உபயோகிக்கமுடியாத போது புதியதை உபயோகிகலாம் என்பது அவர் கட்சி.
இதிலிருந்து அவரை மாற்ற நான் எப்போதோபடித்த ஒரு கதையை
அவரிடம் சொன்னேன்.
ஒரு வீட்டில் கனவனும் மனைவியும் இருந்தார்கள்.
ஒருநாள் கனவன் ஒரு கட்டு தளிர் வெற்றிலை
வாங்கி வந்தான். அதை அப்படியே ஒரு துணியில் சுற்றி
மனைவி எடுத்து வைத்துவிட்டாள்.(என் மனைவி போல)
இரவு நல்ல சாப்பாட்டுக்குப்பிறகு இருவரும் வெற்றிலை
போட கட்டைப்பிரித்தால் மேலாக இருந்த நான்கு
வெற்றிலைகள் வாடியிருந்தன. உடனே மனைவி
வாடியதை இப்போது சாப்பிடலாம்,நன்றாக இருப்பதை
நாளை சாப்பிடலாம் என்று சொல்லி அதை கனவனுக்கும் கொடுத்து விட்டு
தானும் சாப்பிட்டாள். அடுத்த நாளும் இதே கதை. அதற்கு
அடுத்த நாளும் இதே.... ஆக அந்த வெற்றிலைகள்
தீரும் வரை அவர்கள் சாப்பிட்டது வாடியவைகளைத்தான்.
கதையை சொல்லிவிட்டு பெருமையாக 'இதிலிருந்து உனக்கு என்ன
தெரிகிறது' என்று கேட்டேன்,
இதைக்கேட்டதும் என் மனைவி சிறிது நேரம் என்னைப்பார்த்துவிட்டு,
'அதுக்குத்தான் அப்பப்ப கொஞ்சமா வாங்கிக்கனும்'
அவள் சொன்னதும் எனக்கு மயக்கம் வராத குறைதான்.
இப்பவும் எங்கள் வீட்டில் நிறைய புதுப்பொருள்கள்
ப்ளாஸ்டிக் சுற்றி வைக்கப்பட்டிருக்கிறது.
Bookmarks