சூது−தீது
குடி−கேடு
புகை−உயிருக்கு பகை
இவையாவும் தீயது,ஆயினும்
இவையாவிலும் தீயது..
மனிதம் கொன்ற மனது!
சூது−ஆடியவனுக்கு அழிவு
குடி−குடும்பத்துக்கு கேடு
புகை−பகிர்ந்தவருக்கும் பாடை
மனிதமில்லா மனது
அகிலத்துக்கே அழிவு!
ஆகவே மானிடா...
மனிதம் கொள்,மனிதம் கொள்
மனிதனைக் கொல்லாதே!
இதயத்தில்
இறைமை வளர், இறைமை வளர்
இம்மியேனும் பகையை
என்றும் வளர்க்காதே!
Bookmarks