அன்பே...!
நீ என் விசிறி என்றாய்
காதல் விசிறியாக்கினாய்.
சுகந்தமான சுவாசத்தை
விஷமாக்கியது வாழ்க்கை.
காற்றில்லாமல் சுவாசிக்க முடியுமா?
காசில்லாமல் வசிக்க முடியுமா?
நீதான் கேட்டாய்..!
நியாயமாகக் கேட்டாய்.!
பணத்தின் வீரியத்தால்
பிணமாகி விட்டாயே...!
சிவமாக இருந்த வாழ்வை
சவமாக்கி விட்டாயே...!
இப்போது(ம்) புரிந்தது
விசிறிதான் நீ......!
(தாமதமான கவிதைக்கு அக்னி, இனியவள் இருவரும் மன்னியுங்கள். காதலுடன் இணைத்து எழுதுவதற்கு இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டது. காதல் கவிதைகளுக்கும் எனக்கும் தூரம் அப்படி)
Bookmarks