அரசு போக்குவரத்து கழகத்தில் விரைவில் 'இ-டிக்கெட்'
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில், வரும் செப்டம்பர் மாதம் 'இ-டிக்கெட்' முறையை அறிமுகப் படுத்த விரைவு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் 955 பஸ் சேவைகளை மாநிலம் முழுவதும் இயக்கி வருகிறது. சாதாரண விரைவு பஸ்களை விட அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களின் கட்டணங்கள் அதிகமாக இருப்பினும், பயணிகள் இப்பஸ்களில் பயணம் செய்ய அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
இப்பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய நீண்டவரிசையில் பயணிகள் வெகுநேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது.
கம்ப்யூட்டர் மூலம் முன்பதிவு செய்யும் முறையை அமல்படுத்தினால், பயணிகளுக்கு சிரமங்கள் குறைவதோடு, டிக்கெட் விற்பனையும் 35 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது.
ஆன்- லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்ய விரைவு போக்குவரத்துக் கழகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. ரயில்களில் கம்ப் யூட்டர் மூலம் முன்பதிவு செய்வதை போல, இம்முறையில் எக்ஸ்பிரஸ் பஸ்களுக்கு எளிதாக பயணிகள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் ஆன்-லைன் மையங்கள் பெங்களூரு, கோவை, ஈரோடு, ஓசூர், கோயம்பேடு, கும்பகோணம், கன்னியாகுமரி, மதுரை, மார்த்தாண்டம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாகர்கோவில், புதுச்சேரி, ராமேஸ்வரம், செங்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருவனந்தபுரம், திருப்பதி, திருவாரூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேளாங்கண்ணி உள்ளிட்ட 24 மையங் களில் 34 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட் டன. இதில் சில மையங்களைத் தவிர மற்ற இடங்களில் ஆன்-லைன் வசதி உண்டு. தினமும் ஐந்து ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்-லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விரைவு போக்குவரத்துக் கழகத்தின் ஆன்-லைன் திட்ட செயல்பாடுகள் குறித்து மேலாண்மை இயக்குனர் ராமசுப்பிரமணியன் கூறியதாவது:
ஆன்- லைன் மூலம் 10 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
சென்னை கோயம் பேடு மையத்தில் நான்கு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட் டுள்ளன. இந்த கவுன்ட்டர்களில் தினமும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப் பட்டு வருகின்றன.
ஆன்-லைன் திட்ட செயல்பாடுகள் வெற்றிகரமாக செயல்பட துவங்கியவுடன், 'இ-டிக்கெட்' திட்டத்தையும் செப்டம்பர் மாதத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். 'இ-டிக்கெட்' நடைமுறைக்கு வந்தவுடன் பயணிகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கான டிக்கெட் டுகளை பதிவு செய்து கொள்ளலாம்.
ஆம்னி பஸ்களை மிஞ்சும் வகையில் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களை அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாண்டுக்குள் 200 புதிய அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதில் 50 பஸ்கள் குளிர்சாதன வசதிகளோடு பயணிகளை கவரும் வகையில் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
நன்றி தினமலர்
Bookmarks