Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: பிறந்தநாள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    பிறந்தநாள்

    கோயிலில் அர்ச்சனை
    காப்பகத்தில் அன்னதானம்
    நண்பர்கள் வாழ்த்து
    தந்தையின் ஆசி

    அனைவர் முகத்திலும்
    மகிழ்ச்சி தேவதை
    சுமந்தவள் முகத்தில்
    சோக ரேகைகள்

    அகவை அதிகரிக்க
    காலம் குறைந்ததாம்
    காலனின் வருகைக்கு
    Last edited by அமரன்; 14-07-2007 at 08:00 PM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    புரியவில்லையே அமரன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by அக்னி View Post
    புரியவில்லையே அமரன்...
    இப்போ பாருங்க..

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    புரியவில்லையே அமரன்...
    ம்ம் அமர் எனக்கும் புரிய வில்லை

    ஒரு வேலை மகன்
    தாயை புரிந்து கொள்ளாமல்
    வெறுக்கும் காரணமா ??
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    கோயிலில் அர்ச்சனை
    காப்பகத்தில் அன்னதானம்
    நண்பர்கள் வாழ்த்து
    தந்தையின் ஆசி
    அனைவர் முகத்திலும்
    மகிழ்ச்சி தேவதை
    சுமந்தவள் முகத்தில்
    சோக ரேகைகள்
    வயது அதிகரிக்க
    காலம் குறைந்ததாம்
    காலனின் வருகைக்கு
    அடடே இப்படி ஒரு கவலையா

    அன்னையே ஏன் இந்த கவலை
    ஆண்டொன்று போனால் வயதொன்று
    வரும் அது இயற்கை நியதியே

    வாழும் வரை சந்தோஷமாய்
    பிறரை துன்பத்தில் ஆழ்த்தாமல்
    வாழ்ந்து விட்டுப் போவேமே..

    கவலை வேண்டாம் அன்னையே
    உன் மகன் உன்னை விட்டு
    அவ்வளவு சீக்கிரம் போக
    மாட்டான் நீ கொஞ்சி
    விளையாட உன் மடி மேல்
    போட்டு தாலாட்ட ஒர்
    பேரம் வருவான் ... ஹீ ஹீ
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நன்றி இனியவள்....மகன் என எழுதியுள்ளீர்கள். அதை மகளாக நினைத்து..

    பேரனைப் பெற*
    பேரம் பேசுகிறார்கள்
    திருமணச்சந்தையில்...

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தாயுள்ளம் என்பது அதுதான் அமரன். முதல் பத்தி படித்தபோது அங்கு தந்தை மட்டும் உள்ளாரே தாய் எங்கே என்று நினைத்தேன். முடிவைப்படித்ததும் அசந்துவிட்டேன். ஒரு தாய்க்கு தன் மகன் எப்போதும் குழந்தையாகவே இருக்கவேண்டுமென்ற பேராசை உண்டு. பாராட்டுக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஆமாம் சிவா. எனது பிறந்தநாள், நண்பர்கள் பிறந்த நாள் வரும்போதெல்லாம் சாவை சந்தோசமாக வரவேற்கின்றார்களே என நினைத்து மகிழ்வேன். அதை ஒரு தாயின் நிலையில் இருந்து பார்த்தேன். இக்கவிதை பிறந்தது. நன்றி சிவா.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அமரா எங்கே இருந்துதான் உங்களுக்கு இப்படி அருமையான கருக்கள் கிடைக்கிறதோ?

    சின்ன ஒரு பொறி தான்.............

    ஆனால் அதனைப் பாவித்த விதம் அருமை − பாராட்டுக்கள் அமர்!.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நன்றி ஓவியன். முதலில் நான் கவிதை என்றால் வர்ணனை என நினைத்தேன். கவிதை எழுதுவது எப்படி என்ற திரியில் செல்வனண்ணாவின் பதிவு என்னை மாற்றியது. "சொற்களை வைத்துக்கொண்டு சுத்திப்பார்த்து கருவை பிடித்ததும் கவிதையாக்குவேன்"என்பது அவர் பதிப்பு. அதன் பாதிப்புத்தான் இது. என்னிடம் சொற்கள் குறைவு. சொற்களையும் தேடி கருக்களையும் தேடவேண்டி இருக்கு. இது ஏற்கனவே இருந்த விதை. இப்போது முளைத்தது.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அமரன்..

    அசந்துவிட்டேன்..

    இட்லிக்கணக்கில் தப்பு செய்யும் தாய்..
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10747

    இங்கேயும் அகவை கூடியதில் மகிழாமல்
    மொத்தக்கணக்கில் ஒன்று குறைந்தது கண்டு கவலையில்..

    புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும்
    எண்ணெய்க்குளியல் இல்லையென்றால் தேகம் தீயும்
    வெயிலில் அலைந்தால் மேனி கருக்கும்
    இரவில் விழித்தால் அமிலம் உருக்கும்..

    உடலில் சுமந்ததோ ஒன்பது மாதம்..
    உள்ளத்தில் சுமப்பதோ அவள் மறையுமட்டும்..

    இறைவன் எங்கும் இருக்கமுடியாதாம்..
    எனவே தாய்களைப் படைத்தானாம்..
    அன்றே புனிதநூல் சொன்னது..
    அமரன் கவிதையால் அமரத்துவம் ஆனது..
    Last edited by இளசு; 15-07-2007 at 10:10 PM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அண்ணா அழகான பின்னூட்டம். பின்னூட்டத்திலேயே.தாயின் பெருமையைச் சொல்லி விட்டீர்கள். நன்றி அண்ணா.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •