பாகிஸ்தான் தீவிரவாதம் பற்றிய திரி சூடு குறைவதற்குள் அதுபற்றிய விவாதத்திரி ஆரம்பிக்கப்பட்டு நான் பங்குகொள்ளும் முன்பே பூட்டப்பட்டுவிட்டது. (மன்ற ஆலோசனை பகுதியில் பூட்டப்பட்ட ஒரே திரி என்ற பெருமை கொன்டுள்ளது).
விவாத தளங்கள், மற்றும் வலைப்பூக்கள் மலிந்து கிடக்கும் இந்நாளில், அங்கு சென்று உங்கள் திட்டுதல்கள், ஏசல்கள், வசைகள், கன்டனங்கள் அதிகாரங்களை கான்பிக்கவேன்டியதுதானே, ஏன் தமிழ்மன்றத்த்தில் கொட்டுகிறீர்கள்? இங்கு நடுநிலையாளர்கள் நிறையபேர் இருக்கின்றார்கள் அவர்கள் கவனத்தை கவரலாம் என்ற முனைப்பினால்தானே? இப்படி எல்லோரும் இறங்கிவிட்டால் தமிழ்மன்றத்திலும் நடுநிலையாளர்கள் இல்லாமல் போவர். பிறகு வேறு விவாததளத்துக்கு போவீர்களா?
(பல காலமாக நடுநிலமையாளர்களாக இருந்து நன்மதிப்பு பெற்றவர்கள்கூட இத்தகைய திரிகளில் பங்குபெறும்போது எல்லோருக்கும் அதிர்ச்சிதான் ஏற்ப்படுகிறது).
மன்றத்தில் சமீபகாலமாக திரிகளை பூட்டுதல் சகஜமாகிவிட்டது இதற்க்கு காரணம் அனைவரும் அறிந்ததே.எவ்விஷயத்தையும் சச்சரவில்லாமல் விவாதிக்கமுடியும் என்று எல்லோரும் அறிந்திருக்கின்றோம், ஆனால் உணர்ச்சிவேகத்தில் அதை மறந்துவிடுகிறோம். சச்சரவை தவிர்க்க எனக்கு தெரிந்த வழிகளை இங்கே இட்டு இருக்கின்றேன்.
1). மதங்களை மற்றும் கடவுளை பற்றிய பதிவுகளை ஆன்மீக பகுதியில் மட்டும் இடுங்கள்.
2). மதகோட்பாடுகளை, மத தலைவர்களை, கடவுள்களை, பகுத்தறிவு கொள்கைகளை, பகுத்தறிவாளர்களை திட்டாதீர்கள். உடன்பாடில்லாத கொள்கைகளுக்கு சம்பத்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டுப்பெறுங்கள்.
3). மன்றத்தில் உள்ள அனைவரும் தமிழ் சகோதரர்களே, அவர்களை ஒரு சார்பாளராக சித்தரிக்காதீர்கள் நீங்களும் சார்பு நிலையை முடிந்தவரை வெளிக்காட்டாதீர்கள்.
4). மன்ற உறுப்பினர்களை குறிபிட்டு குறை சொல்லாதீர்கள், குறைகளிருப்பின் தனி மடலில் சொல்லுங்கள்.
Bookmarks