Results 1 to 11 of 11

Thread: இதயத்தில் முள்

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    இதயத்தில் முள்

    உள்ளங்காலில்
    முள்ளால் ரணம்!
    முளையிலேயே
    கிள்ளாமல் விட்டதால்
    எல்லாமே ஆனது விஷம்!
    எடுக்க வேண்டுமாம் காலை
    மறுத்தால்
    அடுத்து வருமாம் நமனின் ஓலை!
    கால் வெட்டுப்பட்டதால்
    முடங்கிவிட்டது
    காலனின் ஓலை!
    தொடங்கிவிட்டது
    காதலின் வேலை!
    காலிழந்ததால்
    காதலிலழந்தாய்−என்ற
    காதலியின் சொல்..என்
    இதயத்தில் முள்!
    மீண்டுமொரு முள்தைத்த,
    நாள் பட்ட
    சீழ்பட்ட
    கால் வெட்டிய கதை
    இப்போது இதயத்துக்குமா?
    சீழ் பிடித்த இதயம் சீராகுமா....?
    அழைப்புமணியோசை........
    எவனாயிருக்கும்....?
    எமனாயிருக்குமோ.......?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சிவா..மீண்டும் ஒரு அருமையான கவிதை. நமன் யமனின் இன்னொரு பெயர். இதுபோன்ற பல சொற்களை இன்னும் அறிமுகப்படுத்துங்கள்.

    காலில் காயம்.
    காலை அகற்றினேன்
    காதல் அகன்றது..

    இதயத்தில் காயம்
    அகற்றமுடியுமா..
    காதலையும்−உன்
    நினைவுகளையும்...

    அடிக்கும் மணி
    காதலன் மணியாகலாம்.
    காலனின்
    மணியாக கூடாது.

    வாழ்த்துக்கள்.
    Last edited by அமரன்; 20-07-2007 at 02:23 PM.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    உடலின் காயம் ஆறினாலும்,
    மனதின் காயம் ஆறாதே...

    அழகைப் பார்த்தா,
    வலிமை பார்த்தா,
    சொத்துப் பார்த்தா,
    புகழ் பார்த்தா,
    காதலித்தாய்..?

    நான் பார்க்கவில்லையே...
    காயம் கொண்ட உடல்... வாழ்கின்றது...
    காயம் பட்ட மனது, உயிரோடு தினமும் சாகின்றது...

    எமனைத் தடுத்த, இழப்பு...
    காதலை எடுத்துப் போனதே...
    இறைவா!
    கண்ணீர் ஊற்றாய் சுரக்கும் கொடையை
    எடுத்துவிட்டு,
    எனது இழப்பை நிரவிவிடு...
    காதலை திரும்பத் தந்துவிடு...

    இப்படி ஆகுமென்றிருந்தால்,
    காலையும் காதலையும் இழக்காமலே,
    காலனை அணைத்திருப்பேன்...
    உன் நினைவிலாவது வாழ்ந்திருப்பேன் உன்னோடு...

    அருமையான கவி சிவா.ஜி...
    பாராட்டுக்கள்....
    Last edited by அக்னி; 14-07-2007 at 09:27 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    சிறப்பான கவிதை நண்பரே
    காலில் தைத்தது மனதில் உருவ குத்தியது கொடுமைதான்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    காதலின் தகுதியாக புற அழகை நினைப்பவர்களுக்கு நெஞ்சில் நெருஞ்சி முள்ளின் வேதனையை தரும் கவிதை. நல்லதொரு கருத்தை நயம்பட உரைத்த (சிவா.)ஜிக்கு ஒரு ஜே..!!
    அன்புடன்,
    இதயம்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அருமை சிவா அவர்களே. வார்த்தைகளின் ஜாலம் அருமை. பாராட்டுக்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக்க நன்றி அமரன்,அக்னி,மனோஜ்,இதயம் மற்றும் ஆரென் அனைவருக்கும். அமரனின் பதில் கவிதையும்,அக்னியின் அசத்தல் கவிதையும் அற்புதம். நாமனைவரும் மன்றப்பள்ளியின் மாணவர்களென்பதில் மிக மிக பெருமை கொள்கிறேன்.காதலின் வலியை இதயத்தைத்தவிர யாரால் அதிகம் உணர முடியும். நன்றி இதயம் அவர்களே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    கவிதை அருமை சிவா

    தைக்கப் குத்தப் பட்ட
    முள் எனது காலில்
    அல்ல உயிருக்கு என
    நீ என்னை வெறுத்து
    ஓதுக்கிய பின்னல்லவா
    தெரிந்து கொண்டேன்..

    உள்ளத்தைக் காதலித்தாய்
    என நான் நினைத்திருக்க
    நீ காதலித்தது உருவத்தை
    என ஒரு சிறு விபத்தால்
    எனக்குணர்த்த பெரும்
    விபத்தைத் தவிர்த்துக்
    கொண்டேன்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி இனியவள். சிறு விபத்து பெரு விபத்தை தவிர்த்தது...உடனுக்குடன் வந்த பதில் கவிதை அழகு பாராட்டுக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    எவனாயிருக்கும்....?
    எமனாயிருக்குமோ.......?
    அருமையாக வலிகளை வார்த்தைகளில் வடித்தமைக்குப் பாராட்டுக்கள் சிவா.ஜி!

    உள்ளத்தைப் பார்த்து வந்ததெங்கள் காதல் என்னும் பலர், உண்மையில் இந்தக் கவிதையில் உள்ளவேறு நடந்து கொள்வது உண்மையில் கொடுமையான ஒரு விடயமே..........

    அவர்களுக்கு சாட்டையடி கொடுக்கட்டும் உங்கள் வரிகள்..........

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி ஓவியன். வலியிலேயே பெரிய வலி புறக்கணிப்புதான். அதுவும் காதல் மறுக்கப்படும்போது வேதனை கூடுகிறது. அழகான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ஓவியன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •