உள்ளங்காலில்
முள்ளால் ரணம்!
முளையிலேயே
கிள்ளாமல் விட்டதால்
எல்லாமே ஆனது விஷம்!
எடுக்க வேண்டுமாம் காலை
மறுத்தால்
அடுத்து வருமாம் நமனின் ஓலை!
கால் வெட்டுப்பட்டதால்
முடங்கிவிட்டது
காலனின் ஓலை!
தொடங்கிவிட்டது
காதலின் வேலை!
காலிழந்ததால்
காதலிலழந்தாய்−என்ற
காதலியின் சொல்..என்
இதயத்தில் முள்!
மீண்டுமொரு முள்தைத்த,
நாள் பட்ட
சீழ்பட்ட
கால் வெட்டிய கதை
இப்போது இதயத்துக்குமா?
சீழ் பிடித்த இதயம் சீராகுமா....?
அழைப்புமணியோசை........
எவனாயிருக்கும்....?
எமனாயிருக்குமோ.......?
Bookmarks