Results 1 to 6 of 6

Thread: அன்பு,,,,,

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0

    அன்பு,,,,,

    பேகன் போல மயிலுக்கு
    போர்வை தர வேண்டாம்..

    பாரி போல முல்லைக்கு
    தேர் தர வேண்டாம்

    சிபி போல புறாவுக்கு
    சதை தர வேண்டாம்..

    நெஞ்சில் ஈரம் மட்டும் வார்ப்போம்

    அதில் பாசம் கொஞ்சம் விதைப்போம்

    அன்பு கொண்ட உள்ளத்தை விட

    அகிலத்தில் உயர்ந்தது
    வேறென்ன??? அன்பு,,,,,

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    உலகை ஆளும்
    ஒற்றைச் சொல்
    அன்பு

    கவிதை நன்று வாழ்த்துக்கள் வசி....
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இன்று கிடைப்பதற்கரியதாய் ஆகிவிட்ட அற்புதமானது அன்பு. அது மட்டும் எல்லோருக்கும் எல்லோரித்திலிருந்தும் கிடைத்துவிட்டால் உலகமே பசுஞ்சோலையாகிவிடும். அப்படி ஒருநாளை நாம் காணவேண்டும். உங்களைப்போன்ற கவிஞர்கள்தான் அதை உருவாக்கவேண்டும். பாராட்டுக்கள் வசீகரன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வசீகரன் நீங்கள் உதாரணமாகச் சொன்னவர்கள் மன்னர்கள் என நினைகின்றேன். (பேகன் பற்றித்தெரியாது). நீங்கள் சொன்னவற்றில் பாரியின் கதையைச் சொல்லி அன்பாக இருக்கவேண்டும் என்று எனது உறவினர் ஒருவரின் மகளுக்குச் சொன்னேன். அப்பெண் இறுதியில் என்ன சொன்னாள் தெரியுமா"முல்லைக்கு ஒரு தடியை எடுத்துக் கொடுத்துவிட்டு வருவதை விட்டு விட்டு தேரைக் கொடுத்துவிட்டு வந்தது முட்டாள்தனமானது. இதன் படி நடக்கமுடியாது" என்றார். அப்படி இருக்கிறது இன்றைய சமுதாயம். அச்சிறுமிக்கு அன்பு பற்றி யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை என நினைத்தேன். அப்படிப் பலர் உள்ளனர். இப்படியான கவிதைகள் மூலமாவது அவர்களுக்கு அன்பு என்றால் என்ன என்பது தெளிவாக வேண்டும். பாராட்டுகள் வசீ.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அமரன் View Post
    பாரியின் கதையைச் சொல்லி அன்பாக இருக்கவேண்டும் என்று எனது உறவினர் ஒருவரின் மகளுக்குச் சொன்னேன். அப்பெண் இறுதியில் என்ன சொன்னாள் தெரியுமா"முல்லைக்கு ஒரு தடியை எடுத்துக் கொடுத்துவிட்டு வருவதை விட்டு விட்டு தேரைக் கொடுத்துவிட்டு வந்தது முட்டாள்தனமானது. இதன் படி நடக்கமுடியாது" என்றார். அப்படி இருக்கிறது இன்றைய சமுதாயம். அச்சிறுமிக்கு அன்பு பற்றி யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை என நினைத்தேன். அப்படிப் பலர் உள்ளனர். இப்படியான கவிதைகள் மூலமாவது அவர்களுக்கு அன்பு என்றால் என்ன என்பது தெளிவாக வேண்டும். பாராட்டுகள் வசீ.
    அது தப்பில்லை அமரன்!, காலத்தின் மாற்றம் அது!. காலத்தோடு நாம் மாறி வாழ வேண்டியது தான். ஆனால் சமூதாய விழுமியங்களையும் எங்கள் பாரம்பரியத்தையும் தொலைத்து விடக் கூடாது! அத்துடன் யாருக்கும் யாருக்காகவு விட்டுக் கொடுக்கவும் கூடாது.
    அது தான் முக்கியம்!.

    வசீ உங்கள் வரிகள் அழகாக அர்த்தம் பொதிந்து நிற்கின்றன வாழ்த்துக்கள்!.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    வசீகரன் நீங்கள் உதாரணமாகச் சொன்னவர்கள் மன்னர்கள் என நினைகின்றேன். (பேகன் பற்றித்தெரியாது). நீங்கள் சொன்னவற்றில் பாரியின் கதையைச் சொல்லி அன்பாக இருக்கவேண்டும் என்று எனது உறவினர் ஒருவரின் மகளுக்குச் சொன்னேன். அப்பெண் இறுதியில் என்ன சொன்னாள் தெரியுமா"முல்லைக்கு ஒரு தடியை எடுத்துக் கொடுத்துவிட்டு வருவதை விட்டு விட்டு தேரைக் கொடுத்துவிட்டு வந்தது முட்டாள்தனமானது. இதன் படி நடக்கமுடியாது" என்றார். அப்படி இருக்கிறது இன்றைய சமுதாயம். அச்சிறுமிக்கு அன்பு பற்றி யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை என நினைத்தேன். அப்படிப் பலர் உள்ளனர். இப்படியான கவிதைகள் மூலமாவது அவர்களுக்கு அன்பு என்றால் என்ன என்பது தெளிவாக வேண்டும். பாராட்டுகள் வசீ.


    முல்லைக்கொடி படர, ஒரு தடியை நட்டால் , அது அறிவு சார்ந்த கொடை ; தேரை ஈந்தால் , அது அறிவை மறைத்த கொடை . இதை இலக்கியங்கள் , " கொடைமடம் " என்று பேசும்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •