Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: என்ன(அ)வளோ?!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1

    என்ன(அ)வளோ?!

    அமைதியாய் இருந்தேன்
    ஊமையா என்றாள்!
    வாயை திறந்தேன்
    வழியுது என்றாள்!

    அழகாய் உடுத்தினேன்
    ஆடாதே என்றாள்!
    அடக்கி வாசித்தேன்
    அவ்வளவுதானா என்றாள்!

    விலகிச் சென்றேன்
    புத்தனா என்றாள்!
    நெருங்கி சென்றேன்
    பித்தனா என்றாள்!

    காதலை சொன்னேன்
    முடியாது என்றாள்!
    திரும்பி நடந்தேன்
    தேவதாஸ் என்றாள்!

    பிடித்திருக்கிறது என்றேன்
    பைத்தியமா என்றாள்!
    இல்லை என்றேன்
    இன்னுமா என்கிறாள்!

    என்னவள்......
    என்ன(அ)வளோ?!
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-07-2007 at 08:32 AM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    கிட்டப் போனால் எட்டிப் போவதும், எட்டப் போனால் கிட்டப் போக ஏங்குவதும் தானே காதல்!.

    வாழ்த்துக்கள் சுகந்தா!

    இன்னும் நிறைய எழுதுங்கள்!.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    இதுதான் காதல் நண்பரே. அவர்கள் தானாக எதுவும் கொடுக்கமாட்டார்கள். அருகில் சென்றால் விலகி ஓடுவார்கள். ஆனால் அதுதான் காதல். காத்திருந்தால் எல்லாம் தானாகவே கணியும். பாராட்டுக்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  4. #4
    இளையவர் பண்பட்டவர் தமிழ்'s Avatar
    Join Date
    15 Jan 2004
    Location
    MUMBAI
    Posts
    73
    Post Thanks / Like
    iCash Credits
    11,483
    Downloads
    24
    Uploads
    0
    அருமையான விளக்கங்கள். கவிதையைப் படித்த மாதிரி இல்லை,
    என் மன் உணர்வுகளை பிடித்த மாதிரி இருந்தது...

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பிடித்திருக்கிறது என்றேன்
    பைத்தியமா என்றாள்!
    இல்லை என்றேன்
    இன்னுமா என்கிறாள்!
    சிலேடையாகப் பதில் சொல்கிறாளோ....
    கெஞ்சினால் மிஞ்சுவார்
    மிஞ்சினால் கெஞ்சுவார்



    பாராட்டுக்கள் சுகந்தா...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    ஆஹா! பிரமாதமா இருக்குது கவிதை...

    சின்ன சின்ன கற்களில் ஒரு அழகிய கோபுரம்...

    வாழ்த்துக்கள் தொடருங்கள் ப்ரீதன்......
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஒளிர்ந்தால் கண்களுக்கு கூச்சம்...
    ஒளிராவிட்டால் இருள்...
    காதலின் ஊடலில், அசைவுகள் யாவுமே,
    ரசிக்கப்படுகின்றன, கவனிக்கப்படுகின்றன, சீண்டப்படுகின்றன...
    புரிந்தாலும், புரியாவிட்டாலும்..,
    செய்வதறியா திகைப்பும் இன்பமே... காதலில்.., காதலரிடையில்...

    கொஞ்சும் கவிதைக்குப் பாராட்டுக்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    மன்னிக்கவும்....
    உங்களுக்கு உடனுக்குடன் என்னால் நன்றி சொல்லமுடியவில்லை!
    வாழ்த்திய உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை எனக்கில்லை!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஒவ்வொன்றும் சுகமான வரிகள். காதலில் மட்டும்தான் இந்த கண்ணாமூச்சி. இல்லையென்றால் உண்டு என்பதும்,உண்டு என்றால் இல்லையென்பதும்
    காதலில் ஒரு விளையாட்டு.அந்த விளையாட்டை விவரித்த விதம் அபாரம்.
    நல்ல படைக்கும் திறன் இருக்கிறது உங்களிடம். வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள் சுகந்தப்ப்ரீதன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    01 Jun 2006
    Posts
    40
    Post Thanks / Like
    iCash Credits
    8,965
    Downloads
    0
    Uploads
    0
    உண்மையிலேயே அருமையான வரிகள். சுக*மான* க*விதை.
    கவிதையும் அதன் பின்னூட்டங்களும் பெண்களைப் புரிந்து கொள்ள முடியாத ஆண்களின் குரல்கள். பரவாயில்லை.
    வாழ்த்துக்கள் சகோதரனே!
    குந்தவை

    எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by குந்தவை View Post
    கவிதையும் அதன் பின்னூட்டங்களும் பெண்களைப் புரிந்து கொள்ள முடியாத ஆண்களின் குரல்கள்!
    ஓட்டு மொத்தமாக அப்படிச் சொல்லி விட முடியாது குந்தவை!
    ஒவ்வொருவரது கருத்துக்களும் அந்தந்த சூழலுக்கு ஏற்பத் தானே வரும். இந்தக் கவிதைக்கு அந்தக் கருத்துக்கள்...........!

    அவ்வளவுதான்!

    கவிதைக்குப் பொய் அழகு தானே!.

  12. #12
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    01 Jun 2006
    Posts
    40
    Post Thanks / Like
    iCash Credits
    8,965
    Downloads
    0
    Uploads
    0
    அப்படியா? மன்னித்துவிடுங்கள் ஓவியன் அண்ணா! எனக்கு சற்று அனுபவம் குறைவு!
    குந்தவை

    எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •