அமைதியாய் இருந்தேன்
ஊமையா என்றாள்!
வாயை திறந்தேன்
வழியுது என்றாள்!
அழகாய் உடுத்தினேன்
ஆடாதே என்றாள்!
அடக்கி வாசித்தேன்
அவ்வளவுதானா என்றாள்!
விலகிச் சென்றேன்
புத்தனா என்றாள்!
நெருங்கி சென்றேன்
பித்தனா என்றாள்!
காதலை சொன்னேன்
முடியாது என்றாள்!
திரும்பி நடந்தேன்
தேவதாஸ் என்றாள்!
பிடித்திருக்கிறது என்றேன்
பைத்தியமா என்றாள்!
இல்லை என்றேன்
இன்னுமா என்கிறாள்!
என்னவள்......
என்ன(அ)வளோ?!
Bookmarks