Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: உன்னை ஏன் காதலித்தேன்?

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0

    உன்னை ஏன் காதலித்தேன்?

    காதல் எல்லாம் கனவுதான் என்றவனை
    உன் அடாவடி சிரிப்பால் அசைத்துவிட்டு
    உன் விடாப்பிடி அழகால் உசிப்பிவிட்டு
    இதயத்தில் இடிமழை பொழிந்து எழுப்பிவிட்டவள் நீ!

    தூறலுக்கே தும்முபவன் நான்!
    தென்றலுக்கே தேம்புபவன் நான்!
    சூறாவளி சுற்றும் சுறா விழி கொண்டு என்னை
    சுற்றி வளைத்தால் என்ன செய்வேன்?

    என்னை கண்டிக்க இடிமழையும்
    என்னை தண்டிக்க மௌன மழையும்
    என்னை வசந்தப்படுத்த வானவில் மழையும்
    என்னை உன் வசப்படுத்த சந்தோஷ சாரல் மழையும்
    இப்படி அடை பொழியும் மேகமாக நீயானதால்
    உன்னால் நனையும் நதியாக நான் ஆனேனோ?

    உன் ஈரப்பசை முத்தத்துக்கும்
    உன் கொலுசொலி சத்தத்துக்கும்
    உன் கலப்படமற்ற காதல் சுத்ததிற்கும்
    உன்னால் என்னுள் மூளும் யுத்ததிற்கும்
    உன் நினைவுகளை சுமந்து கொண்டு
    நித்தம் ஊறும் புத்தம் புது ரத்தத்திற்கும் - காரணம் நீ என்பதால்
    என் காயமெல்லாம் காதல் காயமாக ஆனதோ?

    குறைகளின் மாற்று உருவமாக நான் இருந்தாலும்
    என் நிறைகளாலேயே அந்த குறைகளை நிரப்பி...
    பட்ட கிளை கொண்டதால் மட்ட மரமாய் என்னை எல்லோரும் பார்க்க
    என் பிற கிளைகளில் பூத்த பூக்களோடு என்னை
    மற்ற மரங்களிலிருந்து ஒரு மாறுபட்டதாய் பார்த்தவள் நீ என்பதால்
    உன் கிட்டபார்வை பட்டதால், என் பட்ட கிளை கூட பச்சையானதோ?

    என்னை பாதித்த பெண்களை எல்லாம் நான் காதலிக்க நினைத்ததில்லை!
    உன்னை காதலிக்கும் முன்வரை நான் சாதித்ததாய் நினைத்ததில்லை!

    உன்னை காதலிக்கும் பெருமை எனக்கே!
    என்னை உன்னுள் மூழ்கடிக்கும் உரிமை உனக்கே!
    உன் கரம் பற்றும் பெருமை எனக்கே!
    என் கரம் பற்றும் உரிமை உனக்கே!
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  2. #2
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    கவிதை ரொம்ப மென்மையா இருக்கிறது.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    காதல் வெற்றி ஆனின் பெருமை , பெணிடம் அளிக்க பட்ட* உரிமை
    இதை நிலை நாட்ட எத்தனை வரிகள், கவிதை உரிமை மட்டும் உள்ளதா?
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் guna's Avatar
    Join Date
    09 Oct 2006
    Location
    Malaysia
    Posts
    249
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    3
    Uploads
    0
    வெகு நாட்களுக்குப் பிறகு மன்றம் வந்தேன், வந்தவுடன் என்னை கவர்ந்த மன்றத்தின் கவிஞர்களில் ஒருவரான உஙளின் புதிய படைப்பை படிக்கும் வாய்ப்பு கிடைததில் மகிழ்ச்சி..

    உங்களின் கவிதைகளில் வெளிப்படும் ஒருவித ஆவேசத்தைக் காணவில்லையே லெனின்..?
    மிக மிக மென்மையாய்....
    அழகாய்..

    வாழ்த்துக்கள் லெனின்..
    சுகுணா ஆனந்தன்

  5. #5
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    நன்றி பிச்சி, லொள்ளு வாத்தியார் & சுகுனா
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் பார்த்திபன்'s Avatar
    Join Date
    25 Feb 2007
    Posts
    140
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    346
    Uploads
    0
    "பட்ட கிளை கொண்டதால் மட்ட மரமாய் என்னை எல்லோரும் பார்க்க
    என் பிற கிளைகளில் பூத்த பூக்களோடு என்னை
    மற்ற மரங்களிலிருந்து ஒரு மாறுபட்டதாய் பார்த்தவள் நீ"



    நீங்கள் காதலித்தவரை விட..
    உங்களை காதலித்தவரை பெற்ரீர்..


    பாக்கியசாலி....
    Last edited by பார்த்திபன்; 17-07-2007 at 08:07 PM.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    வார்த்தைகளின் கோலத்தில் அழகு ஒளிர்கிறது...
    நிறைவான விருந்தை உண்டது என் விழிகள்...
    தாகம் தீர, தாராளமாகவே பருகினேன் கவி வரிகளை...
    என்னை பாதித்த பெண்களை எல்லாம் நான் காதலிக்க நினைத்ததில்லை!
    உன்னை காதலிக்கும் முன்வரை நான் சாதித்ததாய் நினைத்ததில்லை!
    இந்த வரிகள் சிந்தை கவர்கின்றது...
    பாராட்டுக்கள் லெனின்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நீங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். இதுமாதிரியான காதலி கிடைத்தால் ஒவ்வொரு ஆண்மகனும் சாதிக்க நினைத்த அனைத்தையும் சாதித்துவிடுவான்.

    கவிதை வரிகள் அருமை. மென்மையாக அழகாக இருக்கிறது உங்கள் கவிதை. தொடருங்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    லெனின் வரிகளில் மீண்டும் ஒரு காதல் சொட்டும் வரிகள்...............

    லெனின் நீங்கள் காதல் தேவதையின் பூரண அனுக்கிரகம் பெற்றவர் வாழ்த்துக்கள் நண்பரே!.

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2005
    Location
    TAMILNADU
    Posts
    402
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    1
    Uploads
    0
    அழகான மென்மையான காதல் கவிதை. பாராட்டுக்கள் லெனின் அவர்களே

  11. #11
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    நன்றி பார்த்திபன், அக்னி, ஒவியன், ஆரென், மற்றும் பார்த்திபன்
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சந்தங்கள் விளையாடுகின்றது ராம்...பாராட்டுக்கள். அழகிய கவிதை.
    ************************************************************************
    முன்னோடி உறவான சுகுணா ஆனந்தன் அவர்களை மீண்டும் மன்றத்தில் காண்பது மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள்.
    Last edited by அமரன்; 21-07-2007 at 09:04 AM.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •