Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 20

Thread: விழுதுகள்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் ப்ரியன்'s Avatar
    Join Date
    23 May 2005
    Location
    சென்னை
    Posts
    350
    Post Thanks / Like
    iCash Credits
    8,979
    Downloads
    29
    Uploads
    8

    Post விழுதுகள்

    நகரின்
    அந்த பிரதான துணிக்கடையின் லிப்டில்
    பெருங்கூட்டம் மற்றும் பொதிகளுக்கு இடையில்
    எதிர்பாராமல்
    நிகழ்ந்து முடிந்தது
    அந்த சந்திப்பு!

    அதிர்விலிருந்து மீண்டு
    நான் உதிர்த்த புன்னகை
    உனைச் சேர்ந்திடும் முன்னம்
    கழுத்தை வெட்டித் திருப்பிக் கொண்டாய்!

    கொஞ்சம் கருப்பாகியிருந்தாய்;
    மிஞ்சிய சதையும்
    உயிர்ப்பில்லா உதடும்
    காதோரம் ஓடிய நரை ஒன்றும்
    உன்னை வேறு மாதிரி காட்ட முயன்றிருந்தன!

    கட்டிடத்தின் உயரம்
    அங்குலம் அங்குலமாய் கடக்க
    காலம் தன் கால்களை
    வேகமாய் வீசி
    ஆண்டு கணக்கில் பின்னோக்கி
    பயணப்பட்டிருந்தது!

    கை பிணைந்த கணம்
    மடி சாய்ந்த தருணம் என
    நீளமாய் விழுந்து பரவ தொடங்கிய
    நினைவின் விழுதுகள்
    சட்டென அறுந்து தொங்கின
    லிப்ட் நின்ற வேகத்தில்!

    பேசிவிடும் முனைப்புடன்
    கூட்டத்தில் முண்டி அடித்து வெளியேறுகையில்
    கரைந்து
    காணாமல் போயிருந்தாய்
    முந்தைய காலத்தை போலவே
    சொல்லாமல் கொள்ளாமல்!

    வீடு திரும்பியவன்
    மனையின் மடி சாய்ந்து
    கதைச் சொல்லி அழுது
    அவளை
    கட்டியபடி உறங்கிப்போனேன்!

    தைரியம் சிறிதும் அற்ற நீ
    சன்னமாக அழுதிருப்பாயா -
    குளியலறை குழாயை
    சத்தமாய் திருப்பிவிட்டபடியாவது?!

    - ப்ரியன்.
    Last edited by ப்ரியன்; 10-07-2007 at 12:17 PM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஆகா!

    வந்து விட்டீர்களா?

    உங்கள் பழைய திரிகளைப் பார்த்து எங்கே இவரைக் காணோமென்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன், உங்கள் பதிவைக் கண்டதும் இனம் புரியா ஒரு மகிழ்ச்சி!.

    உங்களிடமிருந்து இவ்வாறான கவிதைகள் நிறையவே வேண்டும் எமக்கு, தொடர்ந்து தருவீர்களா?
    Last edited by ஓவியன்; 10-07-2007 at 01:40 PM.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    நல்ல படைப்பு நண்பரே.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    ப்ரியன்...

    நலமா..???

    உங்களிடம் பேசியும் பல காலமாகிவிட்டதே...
    காலத்தின் ஓட்டத்தில் கரைந்து போகி கொண்டிருக்கிறேனோ???

    வாசித்து முடித்த உடம் மனதில் பெரும் மழைக்கும், புயலுக்கும் பின் பின் வரும் அந்த தெளிவும், அமைதியும்....

    அழகாக சொல்லிவிட்டீர்கள் ப்ரியன்....

    "சொல்லிவிட்டு போயிருந்தால்.." (நன்றி: இளசு) ஒருவேளை நின்று ஒரு புன்னகையேனும் உதிர்த்திருப்பாள்... அவ*ள் தான் தைரிய*ம் அற்ற* ஒரு சுய*ந*ல* "மாக்கான்" ஆகி போனாளே....

    வீடு திரும்பியவன்
    மனையின் மடி சாய்ந்து
    கதைச் சொல்லி அழுது
    அவளை
    கட்டியபடி உறங்கிப்போனேன்!
    இது முதிர்ந்த ஒரு உறவை தெளிவாக காண்பிக்கின்றது....

    தைரியம் சிறிதும் அற்ற நீ
    சன்னமாக அழுதிருப்பாயா -
    குளியலறை குழாயை
    சத்தமாய் திருப்பிவிட்டபடியாவது?!
    இது கொஞ்சம் ஓவர்... ஆனால் சொல்ல வரும் கருத்து கொஞ்ஷம் ஆளமானது...
    அவள் கணவன் புரிந்து கொள்பவனாயிருந்தால்... தைரியமாக பெசியிருக்கலாம்
    ஏற்றுகொள்பவனாக இருந்தால் ... இவனை கண்டதை சொல்லி இருக்கலாம்...
    இவை இரண்டும் இல்லாத பச்சதில்....

    அல்லது....

    தனக்கான தைரியம் இல்லாத நிலையில்... குளியலறை அழுகை...

    அவள் நிலை என்ன என்பதை அறியாமலே, அவளை சின்னதாய் தாழ்த்து உள்மனதில் சந்தோசபட்டு கொள்ளும் இயற்க்கையான மனம்...
    என்ன செய்வது ப்ரியன்...

    கவிதை வாசிக்கும் போது நானும் ஒரு சாதாரணம் மனிதனாய்....
    புரிந்து கொள்கிறென்...
    மாற முயற்ச்சிபதில்லை...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ப்ரியன்,
    நல்லதொரு படைப்போடு மீண்டும் நீங்கள்..!
    வேறென்ன சொல்ல...?
    நல்லாருக்கு..

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    முதலில் கிட்டத்தட்ட நாற்பது நாட்களின் பின்னர் மன்றம் வந்த (இவன்)ப்ரியனை வரவேற்கின்றேன். உங்கள் பல கவிதைகளைப் படித்து சுவைத்து வெறி கொண்டு அலையும் நண்பர் குலாமில் நானும் ஒருவன். உங்கள் அடுத்த கவிதையைக் காண்பதில் மகிழ்ச்சி.

    பால்ய காலக் காதலை அந்திமகாலத்திலும் மறக்காது இருக்கும் பாங்கு. இன்றாவது என்னை நினைத்து அழுவாயா என்ற ஏக்கம். மகிழ்ந்தேன் ப்ரியன். காதலின் பிரிவை இலைமறை காயாகச் சொன்ன விதம் என அத்தனையும் ரசிக்க வைத்தன. நன்றி ப்ரியன்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    (இவன்)பிரியன்

    கவிதை அருமை நான் படித்த
    உங்கள் முதல் கவிதை
    பின்னூட்டம் இடும் முதல்
    கவிதையும் இதுவே
    படித்ததும் பிடித்து
    விட்டது

    வாழ்த்துக்கள்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #8
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    கவிதை சூப்பர் பிரியன். அதே மென்மை உங்களிடம் தொடர்ந்து இருக்கிது, ரொம்ப ரொம்ப சூப்பர்.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் ப்ரியன்'s Avatar
    Join Date
    23 May 2005
    Location
    சென்னை
    Posts
    350
    Post Thanks / Like
    iCash Credits
    8,979
    Downloads
    29
    Uploads
    8

    Post

    Quote Originally Posted by ஓவியன் View Post
    ஆகா!

    வந்து விட்டீர்களா?

    உங்கள் பழைய திரிகளைப் பார்த்து எங்கே இவரைக் காணோமென்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன், உங்கள் பதிவைக் கண்டதும் இனம் புரியா ஒரு மகிழ்ச்சி!.

    உங்களிடமிருந்து இவ்வாறான கவிதைகள் நிறையவே வேண்டும் எமக்கு, தொடர்ந்து தருவீர்களா?
    வணக்கம் ஓவியன் ,

    நன்றி...

    தற்சமயம் கொஞ்சம் எல்லாவற்றிலிருந்தும் தள்ளி இருக்கலாம் என முடிவெடுத்து இருக்கிறேன் ஓவியன்.இந்த கவிதைக் கூட ரொம்ப நாட்கள் அடைக் காக்க முடியாதாலேயே இட்டேன்.

    ஆனால் இன்னும் சில நாட்களுக்கு வனவாசம் தொடரும்...

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by ivanpriyan View Post
    வணக்கம் ஓவியன் ,

    நன்றி...

    தற்சமயம் கொஞ்சம் எல்லாவற்றிலிருந்தும் தள்ளி இருக்கலாம் என முடிவெடுத்து இருக்கிறேன் ஓவியன்.இந்த கவிதைக் கூட ரொம்ப நாட்கள் அடைக் காக்க முடியாதாலேயே இட்டேன்.

    ஆனால் இன்னும் சில நாட்களுக்கு வனவாசம் தொடரும்...
    நல்லது ப்ரியன் அண்ணா உங்களது முன்னேற்றத்திற்கே இந்த வனவாசமென எண்ணுகிறேன், ஆதலால் இந்த வனவாசத்தை வெற்றிகரமாக முடித்து வெகுவிரைவில் மீண்டும் எங்களுடன் கவியாள வர வேண்டுமென வாழ்த்துகிறேன்.

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் ப்ரியன்'s Avatar
    Join Date
    23 May 2005
    Location
    சென்னை
    Posts
    350
    Post Thanks / Like
    iCash Credits
    8,979
    Downloads
    29
    Uploads
    8
    Quote Originally Posted by சூரியன் View Post
    நல்ல படைப்பு நண்பரே.
    நன்றி சூரியன்

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் ப்ரியன்'s Avatar
    Join Date
    23 May 2005
    Location
    சென்னை
    Posts
    350
    Post Thanks / Like
    iCash Credits
    8,979
    Downloads
    29
    Uploads
    8

    Post

    Quote Originally Posted by பென்ஸ் View Post
    ப்ரியன்...

    நலமா..???

    உங்களிடம் பேசியும் பல காலமாகிவிட்டதே...
    காலத்தின் ஓட்டத்தில் கரைந்து போகி கொண்டிருக்கிறேனோ???
    மிக்க நலம் பென்ஸ்...

    நிச்சயம் இல்லை...காலத்தால் எல்லோரையும் , எல்லாவற்றையும் கரைத்திட முடிவதில்லை...

    Quote Originally Posted by பென்ஸ் View Post
    வாசித்து முடித்த உடம் மனதில் பெரும் மழைக்கும், புயலுக்கும் பின் பின் வரும் அந்த தெளிவும், அமைதியும்....

    அழகாக சொல்லிவிட்டீர்கள் ப்ரியன்....
    நன்றி பென்ஸ்

    Quote Originally Posted by பென்ஸ் View Post

    "சொல்லிவிட்டு போயிருந்தால்.." (நன்றி: இளசு) ஒருவேளை நின்று ஒரு புன்னகையேனும் உதிர்த்திருப்பாள்... அவ*ள் தான் தைரிய*ம் அற்ற* ஒரு சுய*ந*ல* "மாக்கான்" ஆகி போனாளே....

    இது முதிர்ந்த ஒரு உறவை தெளிவாக காண்பிக்கின்றது....

    இது கொஞ்சம் ஓவர்... ஆனால் சொல்ல வரும் கருத்து கொஞ்ஷம் ஆளமானது...
    அவள் கணவன் புரிந்து கொள்பவனாயிருந்தால்... தைரியமாக பெசியிருக்கலாம்
    ஏற்றுகொள்பவனாக இருந்தால் ... இவனை கண்டதை சொல்லி இருக்கலாம்...
    இவை இரண்டும் இல்லாத பச்சதில்....

    அல்லது....

    தனக்கான தைரியம் இல்லாத நிலையில்... குளியலறை அழுகை...

    அவள் நிலை என்ன என்பதை அறியாமலே, அவளை சின்னதாய் தாழ்த்து உள்மனதில் சந்தோசபட்டு கொள்ளும் இயற்க்கையான மனம்...
    என்ன செய்வது ப்ரியன்...

    கவிதை வாசிக்கும் போது நானும் ஒரு சாதாரணம் மனிதனாய்....
    புரிந்து கொள்கிறென்...
    மாற முயற்ச்சிபதில்லை...
    கொஞ்சம் கருப்பாகியிருந்தாய்;
    மிஞ்சிய சதையும்
    உயிர்ப்பில்லா உதடும்
    காதோரம் ஓடிய நரை ஒன்றும்
    உன்னை வேறு மாதிரி காட்ட முயன்றிருந்தன!

    உண்மையில் இந்த வரிகளில் இருந்தே , அக்கவிதை முழுதும் வந்தது...

    முதலில் இருபாலருக்கும் பொருத்தமாகவே எழுத நினைத்தேன், அது சரியாக வராதாலேயே இப்படி முடித்தேன்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •