உன் வார்த்தைகள் மெளனமாக
என்னோடு உறவாட - என்
மெளங்கள் வார்த்தையாக
உருப்பெற நம்முள் உருவான
காதல் உயிரோடு இரண்டறக்
கலந்தன...
உன் மெளனம் கலைத்து
ஒர் வார்த்தை பேசாயா என
காதுகள் தவம் இருக்க - நம்
விழிகள் ஆயிரமாயிரம் வார்த்தைகள்
பரிமாறிக் கொண்டன....
நினைவு என்னும் பெட்டகத்தில்
விழி பேசும் வார்த்தைகள்
காவியமாக உருப்பெற்றுக்
கொண்டிருந்தன இதயத்தின்
துணையுடன்....
என் உயிர் அவனோடு சங்கமிக்க
அவன் உயிர் என்னோடு கலக்க
நம் உயிர்களை இடம் மாற்றிக்
கொண்டோம்..
Bookmarks