பென்ஸ் அண்ணாவின் விமர்சனத்தை இரசித்தேன்!
நன்றிகள் அண்ணா!
பென்ஸ் அண்ணாவின் விமர்சனத்தை இரசித்தேன்!
நன்றிகள் அண்ணா!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
மண்ணில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் வாழ்கிறபோது மனிதன் செய்யும்
ஆசாபாச அத்துமீறல்கள் ஒன்றிரண்டல்ல..
அம்மை, கொள்ளை, காசம், மேகநோய் என ஒவ்வொன்றாய் அறிவியலால் வென்று வர வர..
ஒரு திறமையான சதுரங்க எதிரியாய்..
விபத்து, புற்று, புகை, மது என இயற்கை மனிதனுக்கெதிராய் காய் நகர்த்தி
சமன்பாட்டை நிலைநாட்டிக்கொள்ளப் பார்க்கிறது..
அந்த சதுரங்கத்தில் ஒரு அதிரடி மூவ் : ஹெச்.ஐ.வி.
நரம்பு+ஹார்மோன்களின் தூண்டலுக்கும்
நீண்டு வாழ விரும்பும் தற்காப்பு உள்ளுணர்வுக்கும்
நடக்கும் பலே பந்தயம்..
ஆரம்பத்தில் கூட்டுச்சிகிச்சையால் இந்நோயை வெகுவாய்க் கட்டுப்படுத்த மனிதனால் இன்றைக்கு முடிவது − அறியலில் பதில் மூவ்..
ஒரு தடுப்புசி வந்துவிட்டால், மனிதனின் வெற்றி மூவ்!
(அடுத்தும் இயற்கை இன்னொரு புதிய நகர்த்தல் செய்யும்)
நிற்க....
இந்நோய் பற்றி அறிந்தும், அக்கணச் சுகத்துக்காக மயங்குபவர்களிடம்
சுய அக்கறை, பாதுக்காப்புணர்ச்சி குறைவு− இல்லை!
கயவனான ஆண், கண்ணியமில்லா பெண் இவர்களால் தற்காப்பில்லா நிலையில் பாதிக்கப்படும் நபர்கள்/குழந்தைகளிடம் மட்டுமே
சமுகம் இரக்கமும் அக்கறையும் காட்டுவது பொருத்தம்.
அறிந்தே இந்த ஆபத்தை விலைக்கு வாங்க முற்படுவோருக்கு
இந்தக்கதை ஒரு எச்சரிக்கை மணி...
சமூக அக்கறயை நல்ல தர்க்கவாதம், சம்பவங்கள், பாத்திரங்களுடன் சேர்த்து பின்னிய ஆதவனுக்கு பாராட்டுகள்.
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
ஒரு மருத்துவக்குறிப்பு:
ஆணுறை போலவே, 'சர்கம்ஸிஷன்'−ம் ஹெச்.ஐ,வி. தொற்றும் அபாயத்தை
பாதிக்கு மேல் குறைக்க வல்லது.
ஆப்பிரிக்கா, இந்தியாவில் − சொல்லியும் கேட்காமல் பெருகிவரும் இதைக் கட்டுப்படுத்த, கட்டாய சர்கம்ஸிஷன் கொண்டுவந்தாலும் தப்பில்லை!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
மிகவும் நன்றிங்க மதி.. நீங்கள் சொல்வதுபடி நான் நினைக்கவில்லை. காரணம் எழுத்துத் திறமை இன்மை தான். இதே கதையை நம் ராகவரோ அல்லது மயூரேசனோ எழுதியிருந்தால் ஜெஸியின் எண்ணங்கள் மிகச் சரியாக அமைந்திருக்கலாம்.... (மன்னிப்பு எதற்கு?) மிகவும் நன்றிங்க..... கதை நீளமாக இருப்பதே ஒரு குறை என்று நினைத்திருந்தேன்..... எல்லாருமே அதை சரிபடுத்திவிட்டீர்கள்.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
பென்ஸ் அண்ணா உங்கள் விமர்சனம் படித்தேன்..... மிக அருமை... தவறு நேர்ந்த இடங்களைச் சுட்டிக் காண்பித்துள்ளீர்கள்... அது அடுத்த கதைக்கு எனக்கு மிகவும் உதவும் என்று நினைக்கிறேன். மனதில் பட்டதை சொன்னதற்கு மிகவும் நன்றி... ( நீங்கள் சொன்னமாதிரி, இவ்வளவு நீள கதை படித்ததற்கே நன்றி. ). நான் முன்பு சொன்னமாதிரி இதில் கற்பனை என்பது வசனங்கள் மட்டும் தான். மற்றவை என் வாழ்வில் நான் கண்டவை... எனது மிக மிக நெருங்கிய உறவினரின் நண்பர், தனக்கு எய்ட்ஸ் உள்ள விஷயம் வீட்டுக்குத் தெரிந்துபோய் தற்கொலை செய்துகொண்டார்... அதே பைக்ரோமேட்... இந்த ரசாயனம் ஸ்கிரீன் மேக்கிங்க் களில் உபயோகப்படுத்தப்படும்.. நான் எய்ட்ஸ் நோயாளி என்று ஒருவரை பார்த்திருக்கிறேன் என்றால் அது அவர்தான்.. ஆனால் நீன்ட நாட்கள் கழித்துதான் இறந்தார்... அவரால் சொற்களையும் உடல் நிலையையும் தாக்கு பிடிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். ( இத*ற்கு அவ*ர் ம*னைவி உட*ந்தை என்று கேள்விப்ப*ட்டேன். ) ம*ற்ற*படி த*ற்கொலையாக*த்தான் முடிக்க*வேண்டும் என்ற* எண்ண*ம் என*க்கும் இல்லை... த*விர* இங்கே க*திர*வ*னை ஒரு கொலையாளியாக* காண்பித்த*மை,.... நாமெல்லாம் இப்ப*டி இல்லாதவைகளைப் பேசிப்பேசி ப*ல*ரை கொல்கிறோமே என்ப*த*னால்தான்..
உங்க*ள் விம*ர்ச*ன*ம் என*க்கு ம*ன*நிறைவு... மிக*வும் ந*ன்றிக*ள் கோடி....
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
அட திட்டினா கூட நன்றி சொல்லுற ஒரே இடம் .. இதுதான்யா
Last edited by பென்ஸ்; 10-07-2007 at 07:47 AM.
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
இளசு அண்ணா....
நீங்கள் சொல்வது உண்மைதான்.... ஒருவேளை அப்படி ஒரு தடுப்பூசி வந்தால் நமக்குள் இருக்கும் ஒழுக்கம் இன்னும் சீர்கெடும் என்பது என்கருத்து, ஒரு மருத்துவராய் நீங்கள் கொடுத்த தகவல்களும், ஒரு விமர்சகராய் அதைக் குழைத்துக் கொடுத்த விதமும் மிக அருமை.. மிகவும் நன்றிங்க அண்ணா....
(ஓரளவு தேறிட்டேன்னு நினைக்கிறேன்.... )
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
இந்த பாசத்துக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போறேன்!!
ஆதவா....எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்குவோம்...
(கத நல்லாருக்குது...............)
++அழகு++
______________________
வாழ்க தமிழ் அன்னை.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks