Results 1 to 6 of 6

Thread: சிறு துளி பெருவெள்ளம்

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    25 Jun 2007
    Posts
    71
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    0
    Uploads
    0

    சிறு துளி பெருவெள்ளம்

    1.
    மிகவும் குழப்புகிறது
    வழிகாட்டிகள்..
    போகும் திசையறியாது
    திரும்புகிறேன் புறப்பட்ட இடத்திற்கே

    2,

    இருப்பதும் இல்லாததுமாயிருக்கிறது
    வானம் -
    எனக்கு சொல்லப்பட்ட கடவுள்களைப்போல்

    3.

    இதை விருட்சமென மலைக்காதே
    நேற்றைய விதையென்றறி

    4.
    இறப்பின் முகவரியை
    எழுதிப்போயிற்று
    முகச்சுருக்கமாயும்
    நரைகளாயும்
    காலம் -
    அனுபவங்களெனவும் சொல்லலாம்

    5.
    இனி செய்ய ஒன்றுமேயில்லையென்ற
    ஒரு முடிவிலா கணத்தில்
    இறந்துபோனான் வழிப்போக்கன்
    இருப்பவர்கள் கவலைப்பட்டனர்
    அவனுடலை எரிப்பதா புதைப்பதாவென..

    6.
    என்னை துரத்தும்
    எண்ணங்களிலிருந்து
    என்னை விடுவித்தேன்
    பறவைபோலானேன்...

    7.
    ஒரு புல்லைப்போல் புதிதாகவும்
    பறவையைப்போல் எச்சரிக்கையாயும்
    பாம்பைப்போல் தந்திரசாலியாகவும்
    மாறியபோது மரணமானது என்
    குழந்தைத்தனம்
    பின் எப்போதும் நான் குழந்தையானதில்லை...

    8. எல்லோரையும்
    உன் பெயர் சொல்லியே அழைக்கிறேன்
    உன் பெயர் தெரிந்தபின்
    வேறொன்றும் அழகாயில்லை

    9.
    ஆம் பெயரிலென்ன
    என்னை எப்படி வேண்டுமானாலும்
    கூப்பிட்டுப்போ
    உன் குரல் கேட்டால் போதும்

    10.
    பறவைகள் சொல்லும்
    வாழ்வின் தத்துவம்
    அந்த நொடிகளில்
    வாழவும் மறக்கவும்
    11.
    உனக்கான ஒரு பாடல்
    எழுதிய பிறகு நல்ல மழை
    பாடல் படகானது
    மழை நீரெல்லாம்
    உன் பாடல்...
    12.
    புதுப்புத்தக வாசனையாய்
    உன் நினைவுகள்
    நடுவே வைக்கப்பட்ட
    மயிலிறகும் அதன்
    போடாகுட்டிகளுமாய்
    நிஜம்...

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by ரிஷிசேது View Post
    1.
    மிகவும் குழப்புகிறது
    வழிகாட்டிகள்..
    போகும் திசையறியாது
    திரும்புகிறேன் புறப்பட்ட இடத்திற்கே
    இப்போது அதற்கும் வழியில்லை...
    வழிகாட்டி எங்கே என்று வழிகாட்டவும் வழிகாட்டி தேவையாகிப் போனது...
    Quote Originally Posted by ரிஷிசேது View Post
    2,

    இருப்பதும் இல்லாததுமாயிருக்கிறது
    வானம் -
    எனக்கு சொல்லப்பட்ட கடவுள்களைப்போல்
    சோகத்திற்கும், தோல்விகளுக்கும் வானமே எல்லையாகாமல்,
    இன்பத்திற்கும், வெற்றிக்கும் வானமே எல்லையாக,
    வரையறுக்கப்படட்டும்...
    Quote Originally Posted by ரிஷிசேது View Post
    3.

    இதை விருட்சமென மலைக்காதே
    நேற்றைய விதையென்றறி
    நாளை இன்னும் பல விதைகள் இன்றைய விடுட்சத்திடமிருந்து...
    Quote Originally Posted by ரிஷிசேது View Post
    4.
    இறப்பின் முகவரியை
    எழுதிப்போயிற்று
    முகச்சுருக்கமாயும்
    நரைகளாயும்
    காலம் -
    அனுபவங்களெனவும் சொல்லலாம்
    இறப்பின் முகவரி, முகத்தின் வரி பார்த்து...
    பிறப்பின் முகவரி எதைப் பார்த்து..?
    Quote Originally Posted by ரிஷிசேது View Post
    5.
    இனி செய்ய ஒன்றுமேயில்லையென்ற
    ஒரு முடிவிலா கணத்தில்
    இறந்துபோனான் வழிப்போக்கன்
    இருப்பவர்கள் கவலைப்பட்டனர்
    அவனுடலை எரிப்பதா புதைப்பதாவென..
    எரிப்பதா புதைப்பதா, என்று எண்ணியே,
    உடலம் அழுகவைத்து, நடுவில் வைத்து,
    சுற்றி இருந்து, அழும் மானிடகூட்டம்...
    Quote Originally Posted by ரிஷிசேது View Post
    6.
    என்னை துரத்தும்
    எண்ணங்களிலிருந்து
    என்னை விடுவித்தேன்
    பறவைபோலானேன்...
    பறவையின் வரவை எதிர்பார்த்து,
    காத்திருக்கும் வல்லூறு,
    சந்தோஷித்தது...
    Quote Originally Posted by ரிஷிசேது View Post
    7.
    ஒரு புல்லைப்போல் புதிதாகவும்
    பறவையைப்போல் எச்சரிக்கையாயும்
    பாம்பைப்போல் தந்திரசாலியாகவும்
    மாறியபோது மரணமானது என்
    குழந்தைத்தனம்
    பின் எப்போதும் நான் குழந்தையானதில்லை...
    குழந்தைத் தனம் போனால், வராதது...
    அதன்பின் ஏழ்மையே...
    Quote Originally Posted by ரிஷிசேது View Post
    8. எல்லோரையும்
    உன் பெயர் சொல்லியே அழைக்கிறேன்
    உன் பெயர் தெரிந்தபின்
    வேறொன்றும் அழகாயில்லை
    என் கண் குருடாய்ப் போனது...
    Quote Originally Posted by ரிஷிசேது View Post
    9.
    ஆம் பெயரிலென்ன
    என்னை எப்படி வேண்டுமானாலும்
    கூப்பிட்டுப்போ
    உன் குரல் கேட்டால் போதும்
    கூப்பிட்டு வா,
    போகாதே...
    என்னை ஜடமாக்கி...
    Quote Originally Posted by ரிஷிசேது View Post
    10.
    பறவைகள் சொல்லும்
    வாழ்வின் தத்துவம்
    அந்த நொடிகளில்
    வாழவும் மறக்கவும்
    ஆனால், ஆறாம் அறிவு,
    மறக்காமல்
    வாழத்தானே நிர்ப்பந்திக்கிறது...
    Quote Originally Posted by ரிஷிசேது View Post
    11.
    உனக்கான ஒரு பாடல்
    எழுதிய பிறகு நல்ல மழை
    பாடல் படகானது
    மழை நீரெல்லாம்
    உன் பாடல்...
    நான் பிடிக்கும்,
    குடை உன்னைத்,
    தடுக்கும் அடையாளமல்ல...
    என்னை நனைக்க,
    இன்னும் பலமாகப் பெய்,
    என்ற எதிர்பார்ப்பு...
    Quote Originally Posted by ரிஷிசேது View Post
    12.
    புதுப்புத்தக வாசனையாய்
    உன் நினைவுகள்
    நடுவே வைக்கப்பட்ட
    மயிலிறகும் அதன்
    போடாகுட்டிகளுமாய்
    நிஜம்...
    எதிர்பார்த்தே ஏமாந்த நெஞ்சம்...

    ஒரு டஜன்,
    குட்டிக் குட்டிக் கவிதைகளில்,
    சுண்டியிழுக்கின்றீர்கள்,
    மனதை...
    பாராட்டுக்கள்... ரிஷிகேது...
    Last edited by அக்னி; 04-07-2007 at 05:08 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    கவிகள் அருமை ரிஷி வாழ்த்துக்கள்

    வாசிக்க வாசிக்க திவட்டாதது கவிகளே....
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  4. #4
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    25 Jun 2007
    Posts
    71
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    0
    Uploads
    0
    மிக்க நன்றி அக்னி மற்றும் இனியவளுக்கும்.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    வாழ்த்துகள் ரிஷிசேது அவர்களே..

    தத்துவங்களும் காதலும் மல்லுக்கட்டி நிற்கும்
    சின்ன சின்ன கவிதைகள் அத்தனையும் அழகு..

    கல்யாண்ஜி, தபூசங்கர் அதிகம் வாசிப்பீர்கள் என நினைக்கிறேன்.. சரியா?
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அருமையான கவிதைகள். ஆழமான சிந்தனைகள். நன்றிகள் ரிசி.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •