Results 1 to 11 of 11

Thread: தனிமை பூதம்..

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    தனிமை பூதம்..

    தனிமை பூதம் .
    மயான அமைதியின்
    நிசப்தத்தில்..
    கரு வண்டுகளின்
    ரீங்காரத்தில்..
    ஒட்டடை அடைந்த
    காற்றாடியின்
    சத்தத்தில்...
    என்னை
    காலவேக வாகனத்தில்
    அமர்த்தி
    உலகு சுற்றி
    பழைய நினைவுகள்
    குப்பைகளாகக்
    கிளறப்பட்டு
    கொத்தி கொரித்து
    தின்று
    எப்போதோ
    வாசம் செய்து
    போனவளையும்..
    மரணமடைந்த
    ஆருயிர் நண்பனையும்..
    கில்லி விளையாண்ட
    பொழுதுகளையும்..
    ஒரு சுற்று
    சுற்றி விட்டு
    அமைதியில்லாமல்
    நிலை கொள்ளா
    தவிப்பை உருவாக்கிவிட்டு
    என்னை
    உற்று உற்றுப் பார்க்கும்
    தனிமை பூதம்..
    Last edited by விகடன்; 29-04-2008 at 06:35 PM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    தனிமை.. இனிமை.. இம்சை..

    ராம் பாராட்டுக்கள்...
    Last edited by விகடன்; 29-04-2008 at 06:35 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  3. #3
    இளம் புயல்
    Join Date
    31 Mar 2003
    Location
    THANJAVUR
    Posts
    426
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நண்பரே இந்த கவிதையை நீங்கள் தனிமையில்தானே எழுதினீர் . அப்படியென்றால் அது நன்மை செய்யும் பூதம்தான் .
    Last edited by விகடன்; 29-04-2008 at 06:35 PM.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    இந்தப் பூதத்திற்கு
    வாழுமிடம் மனிதமனம்
    திருவிழாக் கூட்டமே
    சுற்றியிருந்தாலும்
    தனித்து நம்மை
    அழைத்துச் செல்லும்
    இடம், பொருள், காலம்
    எல்லாம் தாண்டி.
    இப்பூதம் விரட்ட
    வேண்டும் ஒரு மருந்து -
    காதல், என்ற அன்பு மருந்து.

    ஒரு பூதம் போய்,
    இன்னொரு பூதம் வந்த
    கதையாக
    சமயத்தில் மாறிப் போனாலும்
    சுகமான பூதமாகத் தான் மாறும் -
    கவிதை தரும் பூதமாக........
    Last edited by விகடன்; 29-04-2008 at 06:35 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  5. #5
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    துபாயில் இருந்த பொழுது எழுதியது இந்தக் கவிதை...

    இட மாற்றங்கள் நிகழ்ந்தால் என்ன?

    தனிமை பூதம் மட்டும் என்னுடன் எப்பொழுதும்
    தொடரும் தொடர் கதையாக..
    Last edited by விகடன்; 29-04-2008 at 06:36 PM.

  6. #6
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    தனிமை பயம் என்னை
    பீடிக்கவே முடியாது!
    தனிமை தனிமையாகவே
    இப்போதும்!
    என்னுடன் எப்போதும் நீ!
    Last edited by விகடன்; 29-04-2008 at 06:36 PM.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  7. #7
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    தனிமை பயம் என்னை
    பீடிக்கவே முடியாது!
    தனிமை தனிமையாகவே
    இப்போதும்!
    என்னுடன் எப்போதும் நீ!
    சகோதரி! தனிமையை தனிமைப்படுத்திய ரகசியத்தை எங்களுக்கும் சொல்லுங்களேன்.


    அம்மாவுக்கு தெரியுமா?
    Last edited by விகடன்; 29-04-2008 at 06:36 PM.
    பரஞ்சோதி


  8. #8
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    எல்லாம் ஒரு கற்பனை தான் அண்ணா :wink:

    அம்மாவுக்கு தெரியுமா?
    அய்யய்யோ! நாம எஸ்கேப்பு!
    Last edited by விகடன்; 29-04-2008 at 06:37 PM.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    தூளியாட்டம்
    மாறி அழுத
    தொட்டில்..

    தினம்
    தோப்புக்கரணம்
    போட்ட
    ஊர் முச்சந்தி
    விநாயகர்..

    வளர்பருவ வயதில்..
    பள்ளி நோக்கிய
    அதிகாலை தனித்த
    சைக்கிள் பயணம்..

    அம்மா வீட்டில்
    இறந்து போன..
    செல்ல பாப்பி
    நாய்க்குட்டி..

    இல்லாது போன
    என் சந்தோசங்கள்..

    பொட்டலமாக்கி
    கொண்டு வந்து
    பொத்தென்று
    போட்டுச் செல்லும்..
    பலத்த காற்றில்
    பட்டென்று அறைந்த
    ஜன்னல் கதவுகள்..!!


    ---------------------------------
    வெகு அழகான கவிதை...

    தனிமையின் விழிப்பில்..
    தோன்றும் எண்ணங்கள் ஆயிரம்..

    தனிமைப் பூதம்.. வாட்டவும் செய்யும்... வாழ்த்தவும் செய்யும்..!!
    பாராட்டுகள் ராம்பால் அண்ணா.

    Last edited by பூமகள்; 24-06-2008 at 10:52 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    தனிமை பூதந்தான்...
    பூதங்காத்த புதையல் என்பது
    கட்டுகதையாக இல்லாவிட்டால்.

    கிளறாத குப்பை மலை வெடித்து
    பீறிட்ட சேதன வாயுவை
    கொள்ளிவால் பிசாசென்று
    பயம்கொண்டோர் பலருண்டு..

    மனக்குபைகள்
    கிளறப்பட வேண்டியவை..
    குன்றா மணிகளும் சிக்கும்.
    கிளறியவர்களுக்கு நன்றி..

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    அழகான வரிகள்.
    திரியை மேலேழுப்பியதிற்கு நன்றி அக்கா.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •